செய்திகள்...
##~## |
''ஜன் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் எம்.பி-க்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால், அவர்களுக்கு யாரும் ஓட்டுப் போட வேண்டாம்!''
- அண்ணா ஹஜாரே
''ஊழல் மற்றும் கறுப்புப் பணத்துக்கு எதிராக நான் ரத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். தேர்தலைக் கருத்தில்கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை!''
- எல்.கே.அத்வானி
''நானும் நயன்தாராவும் பெற் றோர் ஆசியுடன் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம். திருமணத்துக்குப் பின்பு, 'ராம ராஜ்யம்’ படத்தைப் போல் நல்ல வேடங்கள் வந்தால், நயன்தாரா நடிப்பார்!''
- பிரபுதேவா

''முன்னாள் முதலமைச்சரைப் பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. அவர் செல்லாக் காசாகிவிட்டார். செல்லாத காசு என்றால், அவர் பேசுவதும் செல்லாக்காசுதான். அவர் பேச்சைத் தமிழர்களும் நம்பவில்லை; சிங்களர்களும் நம்பவில்லை!''
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
