செய்திகள்...
##~## |
''தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை!''
- ஜெயலலிதா
''மீண்டும் 2016-ல் தேர்தல் வரும். ஏன், அதற்கு முன்பே கூடத் தேர்தல் வரலாம். நாங்கள் பதவிக்கு வர வேண்டும் என்று அலையவில்லை. அது, பதவிக்காக அல்ல; மக்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டுக்காக!''
- மு.க.ஸ்டாலின்
''திகாரிலும், பாளையங்கோட்டையிலும், சேலத்திலும், ஒரே இடத்தில் இருப்பதைப் போல சட்டமன்றத்திலும் ஒரே பகுதியில் இருக்க வேண்டும் என்று தி.மு.க-வினர் விரும்புகிறார்களோ என்னவோ,தெரிய வில்லை!''
- ஓ.பன்னீர்செல்வம்

''மிரட்டிப் பணம் பறித்தல், நில அபகரிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அண்ணா ஹஜாரே மீது உள்ளன. மாவோயிஸ்ட்டுகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. பலரும்இவர் களுக்குப் பணத்தை வாரிஇறைக்கின்றனர்!''
- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி
''லோக்பால் மசோதா சட்டமானதுமே இந்தியாவில் ஊழல் ஒழிந்துவிடும் என அண்ணா ஹஜாரேவும் அவரது குழுவினரும் உத்தரவாதம் அளிக்க முடியுமா?
- அம்பிகா சோனி
