Published:Updated:

``தமிழில் என்னை அமைதியானவர் என்றனர்; பாலிவுட்டில் திமிரானவள் என்றனர்!"- கங்கனா ரணாவத்

கங்கனா ரணாவத்

தமிழ் திரையுலகிற்கும், பாலிவுட் திரையுலகிற்கும் வித்தியாசம் இதுதான் என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார் கங்கனா ரணாவத்!

Published:Updated:

``தமிழில் என்னை அமைதியானவர் என்றனர்; பாலிவுட்டில் திமிரானவள் என்றனர்!"- கங்கனா ரணாவத்

தமிழ் திரையுலகிற்கும், பாலிவுட் திரையுலகிற்கும் வித்தியாசம் இதுதான் என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார் கங்கனா ரணாவத்!

கங்கனா ரணாவத்
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் டாக் ஆஃப் தி டவுனாக இருந்து வருகிறார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வளம் வரும் இவர், 'தாம்தூம்', 'தலைவி' ஆகியப் படங்களில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

இந்நிலையில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் 2005-ல் வெளியான 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் கங்கனா. இது அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்ப் படம். லைகா தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். இதில் கங்கனா, ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதுதவிர, வடிவேலு, இசையமைப்பாளர் கீரவாணி, கலை இயக்குநர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் போன்றவர்களும் இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

தற்போது இத்திரைப்படத்தின் இறுத்திக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ட்விட்டரில் #askkangna என்ற ஹேஸ்டாக் மூலம் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு கங்கனா பதிலளித்து வருகிறார். அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் கங்கானவிடம் 'தமிழ் படங்களில் நடித்து வருகிறீர்கள். தமிழ் திரையுலகிற்கும், பாலிவுட் திரையுலகிற்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்' என்று கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த கங்கனா, "இது நான் நடிக்கும் மூன்றாவது தமிழ் படம். அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டதற்காகவே இதை நான் விரும்புகிறேன். அவர்கள் என்னிடத்தில் 'நான் மிகவும் அமைதியாக, மற்றவர்களிடத்தில் தேவையில்லாமல் பேசாமல் என்னுடைய வேலை மட்டும் பார்த்து கொன்டு இருப்பதாக' படப்பிடிப்பின்போது என்னைப் பற்றி கூறினார்கள். இது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில், இப்படி இருப்பதை பாலிவுட்டில் திமிர் என்கிறார்கள்" என்று கூறுகியிருக்கிறார்.