Published:Updated:

மீண்டும் ட்விட்டர் வந்த கங்கனா ரணாவத்: `திரைப்படத் துறை மிகவும் மோசமானது!' என சர்ச்சை ட்வீட்

கங்கனா ரணாவத்

எட்டு மாதங்களாக முடப்பட்டிருந்த கங்கனாவின் ட்விட்டர் கணக்கு தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

Published:Updated:

மீண்டும் ட்விட்டர் வந்த கங்கனா ரணாவத்: `திரைப்படத் துறை மிகவும் மோசமானது!' என சர்ச்சை ட்வீட்

எட்டு மாதங்களாக முடப்பட்டிருந்த கங்கனாவின் ட்விட்டர் கணக்கு தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

கங்கனா ரணாவத்
பாலிவுட்டில் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

குறிப்பாக, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான கங்கனா, கடந்த ஆண்டு நடந்த மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக சில வீடியோ பதிவுகளை பதிவிட்டதோடு, பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜியை அடக்க வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும், பாஜக வெற்றி பெற்ற அஸ்ஸாம், புதுச்சேரியில் எந்தவித வன்முறையும் நடக்கவில்லை; ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு வங்காளம் பற்றி எரிகிறது என்றும் தொடர்ச்சியாகப் பதிவுகளை வெளியிட்டிருந்தார். நேரு மற்றும் இந்திரா காந்தியையும் இதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஏராளமானோர் பதிவிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து அடிக்கடி சிறிது நேரம் முடப்பட்டு வந்த கங்கனாவின் ட்விட்டர் கணக்கு கடந்த மே 5ம் தேதி நிரந்தமாக முடக்கப்பட்டது.
நடிகை கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத்

இது குறித்து ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``மீண்டும் மீண்டும் ட்விட்டர் விதிகளை மீறி செயல்பட்டதால் கங்கனாவின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. எங்களது நடத்தை கொள்கையின்படி ஒருவரைத் துன்புறுத்தும் வகையில் பதிவிடக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தார். 

இதற்கு கங்கனா, "ட்விட்டர் நிர்வாகம் எனது கணக்கை முடக்கியதன் மூலம் அவர்கள் அமெரிக்கர்கள் என்ற என் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளையர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று நினைக்கின்றனர். அவர்கள் நாம் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல விரும்புகின்றனர். எனது கருத்தை வேறு தளங்கள் மூலமும், சினிமா மூலமும் கொண்டு செல்வேன். நாட்டில் மக்கள் எங்கு துன்புறுத்தப்படுகிறார்களோ அவர்களுக்காக எனது இதயம் துடிக்கும்" என்றும் பேட்டியளித்திருந்தார். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் இயங்கிவந்தார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக முடப்பட்டிருந்த கங்கனாவின் ட்விட்டர் கணக்கு தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதையடுத்து பழையபடி மீண்டும் தனது சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட ஆரம்பித்துள்ளார். அந்தவகையில் தற்போது, "திரைப்பட துறை மிகவும் மோசமானது என்னும் ஒரு ட்வீட்டைத் தட்டிவிட்டுள்ளார். அதில், "திரைப்படத் துறை மிகவும் மோசமானது, முரட்டுத்தனமானது. அவர்கள் செய்வது அவர்களின் கீழ்த்தரமான தரத்தையும், அவர்கள் வாழும் கீழ்த்தரமான வாழ்க்கையையும் அம்பலப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார். இது திரை வட்டாரங்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.