<p>“அடடே, கரன்ட் போயிருச்சே! ‘அதை’ எடு!’<br /> <br /> “நீங்க தேர்தல் அதிகாரியா இருந்திருக்கலாம். அதுக்காக இப்படியா... அதுதான் தேர்தல் முடிஞ்சுபோச்சே, டார்ச்சை எடு’ன்னு சொல்ல வேண்டியதுதானே!”<br /> <br /> - கி.ரவிக்குமார்</p>.<p>‘`ஏதோ ஒரு வேகத்தில் நாங்கள் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் என்று நினைக்கும் அளவுக்கு நீங்கள் விவரம் தெரியாதவர்களல்ல..!’’<br /> <br /> - ரியாஸ் </p>.<p>“அங்கே பாண்டி ஆடுற குழந்தை நம் தலைவரோட பேத்தின்னு எப்படிச் சொல்ற?!” <br /> <br /> “ரைட்டான்னு கேட்கறதுக்கு பதிலா ரெய்டான்னு கேட்குதே...!” <br /> <br /> - கோவை.நா.கி.பிரசாத்</p>.<p>“போர்க்களத்திலிருந்து துவையல், வறுவல், ஒத்தடம் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாரே மன்னர்?’’<br /> <br /> “அவரை எதிரி மன்னன் வறுத்தெடுத்து, அடித்துத் துவைத்ததையும், வலி தீர ஒத்தடம் தேவைப்படும் என்பதையும் நாசூக்காகத் தெரியப்படுத்துகிறார்.’’<br /> <br /> - தஞ்சை சுபா</p>.<p>“எண்ணிப் பாருங்கள் தொண்டர்களே..!” <br /> <br /> “எண்ணிப் பார்த்தாச்சு தலைவரே. கூட்டத்துல ஒருத்தன்தான் உட்கார்ந்திருக்கான்!” <br /> <br /> - கோவை.நா.கி.பிரசாத்</p>.<p>“இந்த கண்டக்டர் தேர்தல் பணிக்குப் போயிட்டு வந்தவராம்!”<br /> <br /> “இருக்கட்டும்... அதுக்காக சில்லறை பாக்கி தர வேண்டியவங்களுக்கு விரல்ல மை வைக்கிறது டூமச் சார்.”<br /> <br /> - அதிரையூசுப்</p>.<p>“புதிய வாக்காளர்கள் நமக்குத்தான் ஓட்டு போட்டிருப்பாங்க!”<br /> <br /> “அவங்க போட்டிருந்தாதான் உண்டு. பழைய வாக்காளர்களுக்கு நம்மளைப் பத்தி நல்லா தெரியுமே தலைவரே!”<br /> <br /> - அஜித்</p>.<p>“இந்த சம்மர்ல இதுவரைக்கும் போகாத இடத்துக்கு எங்கேயாவது போகணும்னு தோணுது!”<br /> <br /> “தொகுதிக்குப் போலாம் தலைவரே!”<br /> <br /> - அஜித்</p>.<p>“அந்த நடிகர் தன் கட்சி ஆபீஸ் திறப்பு விழாவை வித்தியாசமா பண்ணியிருந்தார்.”<br /> <br /> “எப்படி?” <br /> <br /> “தேங்காய்க்குப் பதிலா 108 டிவி உடைச்சார்.”<br /> <br /> - அதிரையூசுப்</p>.<p>“எங்கள் தலைவரைப் பார்த்து நல்லவரா எனக்கேட்கும் எதிர்க்கட்சியினருக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்கிறேன்... அவர் ஜெயிலிலேயே நன்னடத்தை கருதி விடுவிக்கப்பட்டவர் என்பதை..!” <br /> <br /> - கோவை.நா.கி.பிரசாத்</p>.<p>“என் மச்சான் இருக்கிற இடத்துல கிடைக்காத பொருளே இல்லையாம்..!”<br /> <br /> “அப்படி எந்த ஜெயில்ல இருக்காரு அவர்..?”<br /> <br /> - வி. ரேவதி, தஞ்சை</p>.<p>“எதுக்காக அந்த வீட்டுல பூட்டை உடைச்சுத் திருடினே..?”<br /> <br /> “சாவி செய்றதுக்கெல்லாம் எங்க எசமான் நேரம் இருக்கு... ரொம்ப டைட் ஷெட்யூல்...”<br /> <br /> - யுவகிருஷ்ணா</p>
<p>“அடடே, கரன்ட் போயிருச்சே! ‘அதை’ எடு!’<br /> <br /> “நீங்க தேர்தல் அதிகாரியா இருந்திருக்கலாம். அதுக்காக இப்படியா... அதுதான் தேர்தல் முடிஞ்சுபோச்சே, டார்ச்சை எடு’ன்னு சொல்ல வேண்டியதுதானே!”<br /> <br /> - கி.ரவிக்குமார்</p>.<p>‘`ஏதோ ஒரு வேகத்தில் நாங்கள் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் நிறைவேறும் என்று நினைக்கும் அளவுக்கு நீங்கள் விவரம் தெரியாதவர்களல்ல..!’’<br /> <br /> - ரியாஸ் </p>.<p>“அங்கே பாண்டி ஆடுற குழந்தை நம் தலைவரோட பேத்தின்னு எப்படிச் சொல்ற?!” <br /> <br /> “ரைட்டான்னு கேட்கறதுக்கு பதிலா ரெய்டான்னு கேட்குதே...!” <br /> <br /> - கோவை.நா.கி.பிரசாத்</p>.<p>“போர்க்களத்திலிருந்து துவையல், வறுவல், ஒத்தடம் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளாரே மன்னர்?’’<br /> <br /> “அவரை எதிரி மன்னன் வறுத்தெடுத்து, அடித்துத் துவைத்ததையும், வலி தீர ஒத்தடம் தேவைப்படும் என்பதையும் நாசூக்காகத் தெரியப்படுத்துகிறார்.’’<br /> <br /> - தஞ்சை சுபா</p>.<p>“எண்ணிப் பாருங்கள் தொண்டர்களே..!” <br /> <br /> “எண்ணிப் பார்த்தாச்சு தலைவரே. கூட்டத்துல ஒருத்தன்தான் உட்கார்ந்திருக்கான்!” <br /> <br /> - கோவை.நா.கி.பிரசாத்</p>.<p>“இந்த கண்டக்டர் தேர்தல் பணிக்குப் போயிட்டு வந்தவராம்!”<br /> <br /> “இருக்கட்டும்... அதுக்காக சில்லறை பாக்கி தர வேண்டியவங்களுக்கு விரல்ல மை வைக்கிறது டூமச் சார்.”<br /> <br /> - அதிரையூசுப்</p>.<p>“புதிய வாக்காளர்கள் நமக்குத்தான் ஓட்டு போட்டிருப்பாங்க!”<br /> <br /> “அவங்க போட்டிருந்தாதான் உண்டு. பழைய வாக்காளர்களுக்கு நம்மளைப் பத்தி நல்லா தெரியுமே தலைவரே!”<br /> <br /> - அஜித்</p>.<p>“இந்த சம்மர்ல இதுவரைக்கும் போகாத இடத்துக்கு எங்கேயாவது போகணும்னு தோணுது!”<br /> <br /> “தொகுதிக்குப் போலாம் தலைவரே!”<br /> <br /> - அஜித்</p>.<p>“அந்த நடிகர் தன் கட்சி ஆபீஸ் திறப்பு விழாவை வித்தியாசமா பண்ணியிருந்தார்.”<br /> <br /> “எப்படி?” <br /> <br /> “தேங்காய்க்குப் பதிலா 108 டிவி உடைச்சார்.”<br /> <br /> - அதிரையூசுப்</p>.<p>“எங்கள் தலைவரைப் பார்த்து நல்லவரா எனக்கேட்கும் எதிர்க்கட்சியினருக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்கிறேன்... அவர் ஜெயிலிலேயே நன்னடத்தை கருதி விடுவிக்கப்பட்டவர் என்பதை..!” <br /> <br /> - கோவை.நா.கி.பிரசாத்</p>.<p>“என் மச்சான் இருக்கிற இடத்துல கிடைக்காத பொருளே இல்லையாம்..!”<br /> <br /> “அப்படி எந்த ஜெயில்ல இருக்காரு அவர்..?”<br /> <br /> - வி. ரேவதி, தஞ்சை</p>.<p>“எதுக்காக அந்த வீட்டுல பூட்டை உடைச்சுத் திருடினே..?”<br /> <br /> “சாவி செய்றதுக்கெல்லாம் எங்க எசமான் நேரம் இருக்கு... ரொம்ப டைட் ஷெட்யூல்...”<br /> <br /> - யுவகிருஷ்ணா</p>