
News
ஓவியங்கள்: கண்ணா
“நான் எவ்வளவு நேரம்யா பேசணும்?”
“முதலில் தக்காளி பறந்து வந்த உடன் சுதாரிப்பா இருங்க. அடுத்து முட்டை வந்த உடன் ரெடி ஆயிடுங்க. செருப்பு வரவும் உடனடியா பேச்சை நிறுத்திட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கிடுங்க.”

- க.சரவணகுமார்
“உனக்கு என்ன, அரசியல் கட்சியோட தேசியத் தலைவர்னு நினைப்பா... பக்கத்துல உள்ளவன்கிட்ட கேள்வி கேட்டா அதுக்கு நீ பதில் சொல்றே?’’

- வி.ரேவதி, தஞ்சை
“தலைவர் நன்றி சொல்லக் கிளம்பிட்டாரா... அவர்தான் தேர்தல்ல தோத்துட்டாரே..?”
`` `எக்ஸிட் போல்'ல ஜெயிப்பாருன்னு சொன்னவங்களுக்கு நன்றி சொல்லவாம்!’’

- இரா.வசந்தராசன்
``அப்பா, உள்ளாட்சித் தேர்தல்னா என்னப்பா?''
``இருடா… உங்க தாத்தாவைக் கேட்டுச் சொல்றேன்''

- தஞ்சை தாமு