Published:Updated:

இனி, விஜய் கவனமா இருப்பார்!

இனி, விஜய் கவனமா இருப்பார்!


"இனி, விஜய் கவனமா இருப்பார்!"
இனி, விஜய் கவனமா இருப்பார்!
இனி, விஜய் கவனமா இருப்பார்!
நா.கதிர்வேலன்
இனி, விஜய் கவனமா இருப்பார்!

'ராமநாதபுரம் பக்கம் தங்கச்சிமடம், என் ஊர். 18 வயசுல பி.யூ.சி., முடிச்சுட்டு ஊர்ல திரிஞ்சேன். ஒண்ணு, யாரையாவது அடிச்சுட்டு வரணும். இல்லாட்டி, அடி வாங்கிட்டு

வரணும். அதுவும் இல்லாட்டா, வீட்டிலாவது அடி வாங்கணும். யாரையாவது வம்புக்கு இழுக்காமல் எனக்குத் தூக்கமே வராது. ஊர்ல என்னை உதவாக்கரைன்னு சொல்லாத ஆளே கிடையாது. சென்னைக்கு ஓடி வந்து, ராஜகுமாரி தியேட்டர் பிளாட்ஃபாரத்துல தூங்கி, அடிபைப்புல குளிச்சு, அதையே குடிச்சு வயித்தை நிரப்பிட்டுத் திரிஞ்சேன். இப்படி இருந்துதான், இன்னிக்குப் பிரபலமான டைரக்டர். என் கதையைப் படமாக்கினால் என்னன்னு தோணுச்சு. அதுதான் 'வெளுத்துக்கட்டு' "- படத்துக்குப் புது விளக்கம் தருகிறார் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

"நீங்களே டைரக்ட் செய்திருக்கலாமே?"

இனி, விஜய் கவனமா இருப்பார்!

"எனக்குப் பணம் முக்கியம் இல்லை. இப்ப இருக்கிற புது இயக்குநர்களிடம் மேக்கிங் நல்லா இருக்கு. டெக்னிக்கலா பின்னி எடுக்கிறாங்க. அதனால், என்னோட 25 வயசுக்குள் நடந்த சம்பவங்களை அழகாத் தொகுத்து, நல்லது கெட்டதுகளை எல்லாம் வெட்கப்படாமல் சொல்லிக் கதையை உருவாக்கி, என் அசிஸ்டென்ட் சேனாதிபதியிடம் கொடுத்தேன். அதை அவர் அவ்வளவு நிறைவாச் செதுக்கி என்கிட்டே கொடுத்துட்டார்."

"பார்த்தா அப்படித் தெரியலை. நீங்க சின்ன வயதில் அவ்வளவு மோசமானவரா?"

"16 வயசு வரை ரொம்ப மோசமானவன் சார். முரட்டுப் பிடிவாதம், கையில

இனி, விஜய் கவனமா இருப்பார்!

் கத்தியை வெச்சுக் கிட்டே அலைவேன். பொறுக்கி மாதிரியே இருப்பேன். ஒரு பெண்ணைப் பயங்கரமாக் காதலிச்சுப் பிரச்னையாகி, ராத்திரி 12 மணிக்கு, ஊரைவிட்டு ஓடி வர வேண்டிய நிர்பந்தம் வந்துச்சு. என் கதையை நானே எடுக்கக் கூச்சமா இருந்தது. அதெல்லாம் வேற கதை சார். என்னை மாதிரியே இருக்கிற ஒரு பையனைத் தேடிப் பிடிக்க அலைஞ்சோம். தாம்பரத்தில் கதிர்னு ஒரு பையன் கிடைச்சான். பி.இ., படிச்சு முடிச்சு இருந்த பையனைக் கையோடு கூட்டி வந்து பயிற்சி கொடுத்து, இப்பப் படம் முடிவதற்குள் அவனுக்கு வாய்ப்புகள் வந்துட்டே இருக்கு."

"உங்க காதலி மாதிரியே ஹீரோயின் தேடினீர்களா?"

"தெரிஞ்சிடும் சார். துடிப்பான, கிராமத்து ஜாடை அதிகம் இருக்கிற பெண்ணைத் தேடினேன். இங்கே எங்கேயும் இல்லாமல் அருந்ததியை நான் பார்த்தது பெங்களூரில். மாநிறத்தில் இருந்த பொண்ணு இப்ப தமிழ் படிச்சு, ராமநாதபுரம் பாஷையில் பின்னி விளையாடுது. படம் வெளிவருவதற்குள் வேறு படங்களில் நடிக்கப் போயிருச்சு."

"பெரிய ஹீரோக்களை வெச்சு எடுத்துட்டு, புதுமுகங்களால் படம் விற்பனை முதற்கொண்டு கஷ்டம் இல்லையா?"

இனி, விஜய் கவனமா இருப்பார்!

"நல்ல கதை, நல்லபடியா எடுத்தால் எங்கே இருந்தாலும் ஜெயிக்கும். தமிழகத்தின் முக்கியமான விநியோகஸ்தர்களைக் கூட்டிவந்து காண்பித்தேன். நான் விஜய்யைப் பாராட்டியது 'காதலுக்கு மரியாதை', 'சச்சின்' படங்களைப் பார்த்து. அவர் என்னைப் பாராட்டியது 'நான் சிகப்பு மனிதன்' படத்துக்கு. இந்தப் படம் பார்த்துட்டு என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டார். 'அப்பா, நான் பெருமைப்படுறேன்'னு சொன்னார். வாய் வார்த்தையா எதையும் சொல்லாதவர் வாயில் வந்த வார்த்தை களைக் கேட்டு எனக்கு அவ்வளவு சந்தோஷம்."

இனி, விஜய் கவனமா இருப்பார்!

"உங்கள் மகன் விஜய்யின் சமீபத்திய படங்கள் தோல்வி அடைந்ததற்குக் காரணம் என்ன?"

"அவரது உழைப்புக்குக் குறைவே இல்லை. எல்லோருக்குமே ஒரு சரிவு வந்துட்டுப் போகும். விஜய்யே ஒரு படத்தில் 'வாழ்க்கைங்கிறது ஒரு வட்டம்டா'னு பேசி இருப்பார். வரப்போகிற காவல்காரன், ஜெயம் ராஜாவின் படங்கள் வேறு மாதிரியா இருக்கும். அடுத்தடுத்த அடிகளை விஜய் கவனமாப் பார்த்துவைப்பார். அதற்கு நான் உத்தரவாதம்!"

இனி, விஜய் கவனமா இருப்பார்!
இனி, விஜய் கவனமா இருப்பார்!