தண்டனை விகடன்
Published:Updated:

விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?

விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?


விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?
விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?
விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?
நா.கதிர்வேலன்
படம்: கே.ராஜசேகரன்
விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?
விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?

ராவணன்' விக்ரம்... புன்னகையும் நிதானமுமாக நிற்கிறார். "மழைக்கு ஒரு ட்ரிங் போடலாமா?" எனக் கண் சிமிட்டி, "காபி ஆர் டீ?" எனச் சிரிக்கிறார்.

"இந்தியாவின் அத்தனை டாப் ஹீரோக்களும் 'மணின்னா ரெடி'ன்னு சொல்றாங்க. அவர்கிட்டே அப்படி என்னதான் இருக்கு?"

"25 வருஷமா மணிரத்னம் சார், தமிழ் சினிமாவின் தனிப்பட்ட அடையாளமா இருக்கார். ஷாரூக், அபிஷேக் முதல் இந்தியாவின் அத்தனை ஹீரோக்களும் 'மணி சார்'னு சொல்லும்போதே அவ்வளவு மரியாதை இருக்கும். ஒவ்வொரு படைப்பையும் தனித்துவத்துடன் உருவாக்குவதில், உணரவைப்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம்... சத்தியமா வேற யாருக்கும் சாத்தியமான்னு தெரியலை. அபூர்வமா ரொம்பச் சில கதைகள் கேட்கும்போது, 'அடடா... இதை விடக் கூடாதுடா... நாமதான் இதைப் பண்ணணும்'னு மனசு அதுவாவே விழுந்துடும்.

விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?

அந்த நிமிஷமே உள்ளே இருக்கிற நடிகன் ஸ்பாட்டுக்கு நடிக்கக் கிளம்பிடுவான். அது மணி சார் ஸ்டோரி லைன் கேட்கிற ஒவ்வொரு ஹீரோவுக்கும் நடக்கும்!"

"ஒவ்வொரு படத்திலும் ரசிக்கவைக்கிறீங்க! ஆனா, ஏன் ரொம்பக் குறைவான எண்ணிக்கையில் படங் கள் பண்றீங்க?"

"அட்வான்ஸ் வாங்கி, எக்கச்சக்கமாப் பணம் பண்ணலாம்தான். ஆனா, நல்லசினிமா வுக்குத்தான் மனசு ஏங்குது. 50 லட்ச ரூபாயைத் தாண்டிட்டா, அப்புறம் பணம்கிறது வெறும் கலர் பேப்பர்தான். வெறுமனே பணத்தை வெச்சுக்கிட்டு என்ன பண்றது? ஒரு வீடு அழகா கட்டலாம். லேட்டஸ்ட் ஃபேஷனில் ஒரு கார். அப்புறம்..? எல்லாம் முடிச்சு நிமிர்ந்து பார்த்தா, 'நல்ல சினிமா'ன்னு உள்ளுக்குள் மனசு அடிச்சுட்டே இருக்கும். 'விக்ரம்னு ஒருத்தன் இருந்தான். அவன் அளவுக்கு யாரும் பண்ண லை'ன்னு எனக்குப் பின்னாடி பேசணும்... அது மட்டும் தான் என் கனவு!"

"ஆனா, அதுக்கு இப்போ போட்டி பலமா இருக்கே... கவனிக்கிறீங்களா?"

"இங்கே எல்லோருக்குமே ஸ்பேஸ் இருக்கு! சூர்யா சூப்பர் முன்னேற்றம் காட்டுறார். தனுஷ் சத்தமே இல்லாமல் சிறப்பான படங்களில் நடிக்கிறார். படங்களைத் தேர்ந்தெடுப்பதி லேயே ஆர்யா இப்ப ரொம்ப செலெக்டிவ்வா இருக்கார். நடிப்பில் கமல்ஹாசன், விக்ரம் மட்டும் தான்னு நினைக்காதீங்க. இதே ஊர்ல ஏழெட்டுப் பேரை நான் பார்த்திருக்கேன். நல்லவேளை, அவங்கள்லாம் சினிமாவுக்குள்ளே வரலை. ஆனா, எங்களுக்குள் தனிப்பட்ட போட்டி எதுவும் கிடையாது. நல்ல சினிமா கொடுக்கிறதில் மட்டும் தான் போட்டி போடுவோம். அதுதான் சரி!"

விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?

"சரி, உண்மை சொல்லுங்க... 'ராவண்' படத்துல அபிஷேக், ஐஸ்வர்யா, விக்ரம்.... மூணு பேரில் யார் ஸ்கோர் பண்ணு வாங்க?"

விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?

"அபிஷேக் இதுக்கு முன்னாடியே எனக்கு நண்பர். என் 'தூள்' படத்தை 16 தடவை பார்த்துட்டு, ஸீன் ஸீனாப் பிரிச்சுச் சொல்வார். ஐஸ்வர்யா... நடிப்பில் பிரமாதம். ஸ்பாட்டுக்கு வந்துட்டா, அபிஷேக்கைத் தன் கணவராப் பார்க்க மாட்டாங்க. ஒரு விரோதியைப் பார்க்கிற மாதிரி பார்த்துட்டு... ஒரு சின்ன சிரிப்பு, கண்ல மின்னல் காட்டி அவரை ஓவர்டேக் செய்யப் பார்ப்பாங்க. இதில் நான் எம்மாத்திரம்? ஆனா, அதெல்லாமே கேமரா ஆன்ல இருக்கும் வரைதான். ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துட்டு, 'நான் உங்க ஃபேன் ஆகிட்டேன் விக்ரம்'னு சொன்னாங்க. அப்படிச் சுலபத்தில் சொல்ற ஆள் இல்லை. அவங்க அவ்வளவு நல்லவங்களா இருக்காங்களேன்னு நாம விட்டுக் கொடுக்க முடியுமா என்ன? 'வீரா' கெட்டவன் ஆயிட்டான்!" - கண் சிமிட்டுகிறார் விக்ரம்

விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?

'உலக வீடியோ வரலாற்றில் முதல்முறையாக' என்ற அறிமுகத்துடன் சென்னையில் அரங்கேறியது 'ராவண்' அகில உலக வீடியோ கான்ஃபரன்ஸிங் பிரஸ் மீட்! சென்னை ஹெச்.சி.எல் அலுவலகத்தில் மணிரத் னமும் விக்ரமும் அமர்ந்திருக்க, மும்பை ஸ்டுடியோவில் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேச்சுவார்த்தையைத் துவக்கினர். சென்னை, டெல்லி, மும்பை, நியூயார்க், துபாய் என ஐந்து இடங்களில் இருந்து பாய்ந்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர். இரவு 10 மணிக்கே சென்னையில், மணிரத்னமும் விக்ரமும் ஆஜர். 30 நிமிடங்கள் தாமதமாக, மும்பை ஸ்டுடியோவுக்குள் நுழைந்த அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும், சென்னையில் ஏற்கெனவே மணிரத்னம் காத்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்கள். "என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என அபிஷேக் கேட்க, "வழக்கம்போல உங்களுக்காக வெயிட் பண்றேன்!" எனப் பட்டெனப் பதில் சொன்னார்மணி!

" 'ராவணன்' படத்துக்கு நான்கு க்ளைமாக்ஸ் எடுத்து வைத்திருக்கிறீர்களாம்?" என்று மணிரத்னத்திடம் கேட்டபோது, "ஒரு படத்துக்கு நச்சென ஒரு க்ளைமாக்ஸை முடிவு செய்து எடுப்பதே பெரிய கஷ்டம். இதில் நான்கைந்து க்ளைமாக்ஸுக்கு நான் எங்கே போவது? இந்தப் படத்துக்கு ஒரே ஒரு க்ளைமாக்ஸ்தான்!" என்றார்.

"நாயகன், பாம்பாய், இருவர், குரு என உங்க ளுடைய அனைத்துப் படங்களுமே ஏதேனும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயக்குகிறீர்கள். 'ராவணன்' படத்தில்கூட மாவோயிஸ்ட் பிரச்னையைத் தொட்டிருப்பதாக ஒரு தகவல். உங்கள் படத்தின் மூலம் ஏதேனும் மெசேஜ் சொல்ல விரும்புகிறீர்களா?" என்று மணிரத்னத்திடம் கேட்க, "ஒரு படம் இயக்கும்போது அந்தந்தக் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களையும் சேர்த்துத்தான் படமெடுக்க முடியும். கண்களை மூடிக்கொண்டு கற்பனையான விஷயங்களை வைத்து மட்டுமே படமெடுக்க என்னால் முடியாது. என் படங்களில் உண்மைச் சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால், மெசேஜ் சொல்ல நான் ஒன்றும் அரசியல்வாதியோ, ஞானியோ கிடையாது. என் வேலை படம் எடுப்பது. அதில் மக்களின் உணர்வுகளைச் சொல்கிறேன். அவ்வளவுதான்!" என்றார் பளிச்சென.

" 'இருவர்' டு 'ராவண்' உங்கள் பார்வையில் மணிரத்னத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?" என்ற கேள்வி ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு. "மணிரத்னத்தின் வளர்ச்சியைப்பற்றி கருத்து சொல்ல எனக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அவர் கூப்பிட்டதால்தான் நான் சினிமாவில் நடிக்கவே வந்தேன். இல்லையென்றால் ஒழுங்காக ஆர்க்கி டெக்சர் படித்து முடித்திருப்பேன். அனைத்துப் படங்களி லும் 100 சதவிகித உழைப்பைக் கொடுப்பவர் மணிரத்னம் சார்!" என்று 'ஐஸ்' மழை பொழிந்தார் ஐஸ்!

- சார்லஸ், படம்: பொன்.காசிராஜன்.

 

விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?
விக்ரம் அபிஷேக் ஐஸ் யார் பெஸ்ட்?