கோல்டன் ஸ்டார்' கணேஷ்... கன்னட சினிமாவின் வெள்ளி விழா நாயகன்! தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று துணிந்து பந்தயம் கட்டும் வெற்றிக் குதிரை. மிகச் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து பல வருடப் போராட்டங்களுக் குப் பிறகு சின்னத்திரையில் தலை காட்டி சில்வர்ஸ்க்ரீன் ஹீரோ அந்தஸ்தைப் பிடித்த திறமைசாலி. பெங்களூரு, பனசங்கரி பகுதியில்அடுக்கு மாடிக் குடியிருப்பில் கணேஷைச் சந்திக்கச் சென்றபோது, வாசலுக்கே வந்து "வாங்க வாங்க!" என்று வாஞ்சையோடு அழைத்துச் செல்கிறார்.
"நீங்கள் கோல்டன் ஸ்டார் கணேஷ் ஆன கதை சொல்லுங்க?"
"நெலமங்களான்னு ஒரு குக்கிராமத்து விவசாயக் குடும்பம் என்னுடையது. சமயங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் அளவுக்கு வறுமைதான். ஆனாலும் மாசச் சம்பளத்துக்கு ஏதோ ஒரு கவர்ன்மென்ட்வேலைக்குஅல்லா டாம, பெருசா
சாதிக்கணும்னு அப்பா-அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு பெங்களூருக்கு வந்தேன். ஒரு நண்பனின் நண்பனை நம்பி! அப்பவே சினிமாதான் என் கனவு. ஆனால், சினிமா தியேட்டரில் படம் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு அப்போ கஷ்டம். இருந்தாலும், மனம் தளராம சினிமா வாய்ப்புக்கு கால் தேய நடந்தே அலைஞ்சேன். சின்னச் சின்னதா டி.வி. சீரியல் வாய்ப்புகள் கிடைச்சது. 'வட்டாரா'ன்னு ஒரு சீரியலில் வில்லன் கேரக்டர் கிடைச்சது. சின்ன ரோல்தான். ஆனால், பளிச்சுனு அது ஹிட் ஆகவும் 1,000 எபிசோடுகள் நடிக்கவெச்சுட்டாங்க. தொடர்ந்து வில்லன், ஹீரோவின் நண்பன், அண்ணன், தம்பின்னு சீரியல் வாய்ப்புகளா கிடைச்சுது. ஆனாலும், சினிமா வாய்ப்பு கனவாகத்தான் இருந்தது.
ஆனா, நான் நடிச்ச எல்லா சீரியல்களும் 500, 1,000 எபிசோடுகள் கடந்து ஓடிட்டு இருந்தன. ஒரு கட்டத்தில் ரொம்ப சலிப்பாயிருச்சு. அப்போதான் தமிழ் சேனலின் ஹிட் ஆகியிருந்த காமெடி டைம் நிகழ்ச்சி கன்னடத்தில் பண்ணாங்க. அதை நடத்தும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஒரே வாரத்தில் பயங்கர ரீச். 'காமெடி டைம் கணேஷ்'னு எங்கே போனாலும் சுத்தி வளைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த பளிச் அடையாளம்தான் 'செல்லாட்டா' பட வாய்ப்பைத் தந்தது. நான் அதுவரை ஏங்கித் தவித்த வாய்ப்பு. உயிரைக் கொடுத்து நடிச்சேன். படம் ரிலீஸ் ஆச்சு. முதல் ஷோ முடியிற வரை என்உயிர் என் கிட்ட இல்லை. 'சாதாரண ஹிட் இல்லைப்பா... சூப்பர் டூப்பர் ஹிட்'னு சொன்னாங்க. கடவுளுக்கு நன்றி!
|