க்ளைமாக்ஸ் விகடன்
சினிமா
Published:Updated:

என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!

என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!


"என்னைத் தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!"
என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!
என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!
எஸ்.ஷக்தி
என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!
என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!

"ஞான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனா, மலையாளப் படவுலகை ஆட்டிவைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா, தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு. அதுதான் உங்க ஆசையா சூப்பர் ஸ்டார்களே?" - ரௌத்திரமும் வேதனையும் வெடிக்கும் குரலில் கேட்கிறார் திலகன்.

சமரசங்கள் செய்துகொள்ளாத சாதனைக் கலைஞன் திலகன். சமீப நாட்களாக மம்மூட்டி, மோகன்லாலுக்கு எதிராக இவர் போர்க் கொடி உயர்த்திவிட்டார். மலையாளப் படவுலகமே 'மேக்டா', 'பெஃப்கா' என்று இரு அமைப்புகளாகப் பிரிந்து முட்டி மோதிக்கொண்டு இருக்கிறது. ஆரம்ப நாட்களில் பிரச்னைகளின் மையப் புள்ளியாக இருந்த வினயன் இயக்கிய 'யட்சியும் நானும்' படத்தில் யாரும் நடிக்கக் கூடாது எனத் தடை விதித்தது மலையாள நடிகர்கள் சங்கமான 'அம்மா'. அதை மீறியது முதல் திலகன் மீது தடைக் கற்கள். தொடர்ந்து மோகன்லால், சுரேஷ் கோபி, திலீப் என்று மெகா ஸ்டார்களின் கூட்டணியில் உருவான 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த

திலகனை அந்தப் படத்தில் இருந்து நீக்கினார்கள். இடையில், இன்னமும் அனல் தணியாமல் இருக்கிறார் திலகன்.

"சமயங்களில் ரொம்பவும் 'ஓவர் ரியாக்ட்' செய்கிறீர்கள் என்று உங்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார்களே?"

"பின்னே ஞான் கலைஞனாயிற்றே! உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சிவசப்படணும். அடித்தால், திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்துநொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்கள் இன்றைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?"

"தொடர்ந்து மம்மூட்டி, மோகன்லாலைக் குறிவைத்துத் தாக்குவதன் நோக்கம் என்ன?"

என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!

"ஏன் தாக்கக் கூடாது என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள்? வினயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே. அவரது படத்தில் நடித்ததற்காகத் தடைபோடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்மூட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இப்போதும் சொல்கிறேன்... கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக்கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. மம்மூட்டி அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்றைக்குச் சிலரது கைகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் உருப்படாத கதைகளில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் திரும்பினால் 10 கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்தி ரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப்போகிறார்கள்? இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்குத் தேவை இல்லாத குப்பைகள்!"

"அவர்கள் இருவரையும்தான் மலையாள சினிமாவின் மாஃபியாக்கள் என்றீர்களா?"

"கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை நாடறியும். இடையில் எனக்குக் கொஞ்சம் உடல் நலம் குறைந்ததுஉண்மைதான். அதற்காக, என்னை புக் பண்ண விரும்பும் டைரக்டர்களிடம், 'திலகனை உங்கள் படத்தில் புக் செய்தால் கூடவே ஒரு ஆம்புலன்ஸையும் ஸ்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். எதற்குப் பணத்தை வேஸ்ட் பண்றீங்க?' என்று சொல்லிக் கெடுக்கிறார்கள். கூடவே, என்னை 'அம்மா'வில் இருந்தும் தூக்கி எறிந்துவிட்டார்கள். சீரியலில் நடிப்பதையும் தடுத்துவிட்டார்கள். இவ்வளவையும் செய்பவர்களை மாஃபியா என்றுதானே சொல்ல வேண்டும்!"

என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!

"தற்கொலை செய்வேன் என்பது கவனம் ஈர்க்கும் ஒரு மிரட்டல் ஸ்டன்ட்தானா?"

"அது மிரட்டல் இல்லை. உண்மை. எனக்குள் இருக்கும் கலைஞன் தினமும் புதுப் புது வேஷம் தேடி ஏங்குகிறான். அந்தப் பசியை நான் போக்காவிட்டால், அவன் செத்துவிடுவான். இந்தக் கலைஞன் செத்த பிறகு திலகன் என்ற வெற்று உடம்பு வாழ்ந்து என்ன பயன்? நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பல முறை புகார் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுக்குச் சாதகமாகவே நடக்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை எடுக்கவே இல்லை.

கொஞ்ச காலம் பொறுப்பேன். எல்லாத் திசைகளும் இப்படிச் சூனியமாகிவிட்டால், பேபியின் வீட்டு முன் தற்கொலைதான் செய்துகொள்ளவேண்டும்!"

என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!
என்னை தற்கொலைக்குத் தூண்டும் சூப்பர் ஸ்டார்கள்!