செல்போன் விகடன்
Published:Updated:

பாதை பழசு... பயணம் புதுசு!

பாதை பழசு... பயணம் புதுசு!

பாதை பழசு பயணம் புதுசு  
பாதை பழசு... பயணம் புதுசு!
நா.கதிர்வேலன்
.
பாதை பழசு... பயணம் புதுசு!
.

பாதை பழசு... பயணம் புதுசு!

''அண்ணே, நம்ம ரூட்டே தனி! 'சாமி'க்குப் பின்னாடி திரும்ப ஒரு போலீஸ் கதையைக் கையில் எடுத்திருக்கேன். நம்ம இந்திய அரசாங்க முத்திரையில் மூணு சிங்கம் கம்பீரமா நிற்கும். அதுக்குப் பின்னாடி நாலாவது ஒரு சிங்கம் மறைஞ்சு நிக்கும். நாம யாருமே பார்க்காத அந்த நாலாவது சிங்கம்தான் நம்ம துரைசிங்கம்!'' - கர்ஜிக்கிறார் ஹரி. கமர்ஷியல் மாஸ் டைரக்டர்.

'' 'சிங்கம்'னு பேரைப் பிடிச்சு அசத்திட்டீங்களே?''

''எப்படி இவ்வளவு நாள் இந்த டைட்டிலை விட்டு வெச்சாங்கன்னு ஆச்சர்யமா இருக்கு. காதல், காவியம்னு வார்த்தையைக் கேள்விப் பட்டாலே, ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டுக் கிளம்பி ஓடி வந்திருவேன். நான் ஐ.பி.எஸ்., ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஐ.பி.எஸ்., பிரிலிமினரி எக்ஸாம் எழுதியும் பார்த்தேன். மார்க் கிடைக்கலை. 'நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது'ன்னு சினிமாவுக்கு வந்துட்டேன். நல்ல போலீஸ்காரங்களைப் பார்த்தா, ஏக்கமாக இருக்கும். அதனால, அவங்களைக் கௌரவிக்கிற மாதிரி படம் எடுக்குறேன். இந்தக் கதை தூத்துக்குடி நல்லூரில் ஆரம்பிச்சு, ஆந்திரா நெல்லூரில் முடியும். இடைவேளைக்குப் பிறகு, இரண்டாவது ரீல்லயே க்ளைமாக்ஸ் ஆரம்பிச்சிரும். படகு, கப்பல், ஹெலிகாப்டர், விமானம், பஸ், ஜீப், ரயில், பைக்குனு துரைசிங்கம் பயணிக்காத வாகனம் இல்லை. போகாத ரூட் இல்லை. தீப்பிடிக்கிற வேகத்தில் திரைக்கதை இருக்கும். ரொம்ப சூடான படம்!''

பாதை பழசு... பயணம் புதுசு!

''சிங்கத்துக்கு எப்படிப் பொருந்தியிருக்கார் சூர்யா?''

'' சூர்யா, 'காக்க காக்க' படத்தில் செம ஸ்டைலான போலீஸ் அதிகாரியா நடிச்சிருந்தார். 'சாமி'யில் நான் அதிரடியான ஒரு போலீஸ் அதிகாரியைக் காட்டினேன். இரண்டிலும் பார்க்காத போலீஸ்தான் சிங்கம். பாதை பழசுதான். ஆனா, பயணம் புதுசு. 'உடம்பும் முகமும் கல்லு மாதிரி இருக்கணும்'னு ஒரு வரிதான் சொன்னேன். ஜிம்முக்குப் போய் உடம்பை இறுக்கி, முறுக்கி, மீசையைச் செதுக்கி வந்து நின்னார். எனக்கு அப்பவே பாதிப் படம் முடிஞ்ச மாதிரி இருந்தது. 'ஆறு'ல சூர்யா ஒளிஞ்சு நின்னு அடிச்சார். 'வேலு'வில் எதிர்த்து நின்னு அடிச்சார். 'சிங்கத்தில்' இழுத்துட்டுப் போய் அடிப்பார்!''

பாதை பழசு... பயணம் புதுசு!

''எந்த ஹீரோவா இருந்தாலும் 'ஹரி'ன்னு சொன்னாலே 'சரி'ங் கிறாங்க! அப்படி என்ன மந்திரம் வெச்சிருக்கீங்க?''

''மந்திர தந்திரம் எல்லாம் கிடையாது. நான் பக்கா லோக்கல் ஆளு. என் படத்தில்

பாதை பழசு... பயணம் புதுசு!

நடிக்கிற ஹீரோவை பி, சி ஏன் டி சென்டர் வரைக்கும் இழுத்துட்டுப் போயிரு வேன். ஹரி டைரக்ஷனை நம்பி யாரும் படம் பார்க்க வர்றதில்லை. ஹீரோக்களை நம்பித்தான் வர்றாங்க. நான் அவங்க முதுகுக்குப் பின்னாடி பதுங்கிட்டு பில்ட்-அப் கொடுக்குறேன்... அவ்வளவுதான். பக்கா கமர்ஷியலா ஸ்கோர் பண்றதால, ஹீரோக்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. நான் பாரதிராஜா, பாலா, அமீர், செல்வராகவன் மாதிரி இல்லை. என்னை மட்டும் வெச்சுக்கிட்டு ஜெயிக்க என்னால் முடியாது. நான் காவிய டைரக்டர் கிடையாது. பெரிய கிரியேட்டரும் கிடையாது. அதனால கமர்ஷியல் படம் பண்றேன். ஒவ்வொரு தயாரிப்பாளரும் படம் முடிஞ்சதும், 'எனக்கே அடுத்த படம் பண்ணிக் கொடு ஹரி'ன்னு அன்பாக் கேட்கிறாங்க. அந்த அன்பு போதும் சார்!''

 
பாதை பழசு... பயணம் புதுசு!
பாதை பழசு... பயணம் புதுசு!