''நல்ல கதைகளும் புது விஷயங்களும் தொடர்ந்து ஜெயிச்சுட்டே இருக் கிறதுதான் என்னை மாதிரியானவங்களுக்கு மூலதனம். இப்போ என்னோட டைம்'' சமீரா டப்பிங் தியேட்டருக்கு வெளியே கை குலுக்குகிறார் பன்னீர்செல்வம். 'ரேனிகுண்டா' படத்தின் ரஷ் பார்த்தால், அவர் மீதான மரியாதை அதிகமாகிறது.
''சினிமாவில் நான் அப்படிக் கஷ்டப்பட்டேன்... இப்படிக் கஷ்டப்பட்டேன்னு ஆரம்பிக்கிறதில் எனக்கு விருப்பம் இல்லை. சினிமாவுக்கும் எனக்குமான காதல் கொஞ்சம் உணர்வுபூர்வமான விளையாட்டு. விதவிதமான கதைகளோடு வேற வேற இடங்கள்ல திரிஞ்சுருக்கேன். 'என்னடா, இப்பிடிப் பந்தாடுறாங்க?'ன்னு அலைஞ்சிருக்கேன். இப்போதான் தோணுது... எல்லாமே 'ரேனிகுண்டா'வுக்காகத்தான். இப்படி ஒரு கதை, இப்படி ஒரு டீம்னு வந்து நிக்கிறப்போ நடந்து வந்ததெல்லாம் கரெக்ட்னு புரியுது.
ஒரு குழந்தை வயித்துல இருக்கும்போது அந்த அம்மா சந்தோஷமா இருக்கணும். நல்ல மியூஸிக் கேட்கணும். சும்மா அந்தக் குழந்தைகிட்ட ஏதாவது பேசிட்டிருக்கணும்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. கருவுல இருக்கிற பிள்ளைக்கே அவ்வளவு நல்ல சூழ்நிலை தேவைப்படுதுன்னா, தெருவுல நிக்கிற பிள்ளைகளுக்கு? அதைத்தான் இந்தப் படம் பேசுது.
இன்னிக்கு இருக்கிற இளைஞர்களை நீங்க ஏதோ ஒரு விதத்துல நிர்க்கதியா நிறுத்தினீங்கன்னா, அவன் வேற மாதிரி வெளிப்படுவான். அப்படித் தடம் மாறிப் போற இளைஞர்களோட கதை இது. எங்கேயோ ஒரு ஊர்ல லாட்ஜ் போட்டுத் தங்கி, முன்ன பின்ன தெரியாத ஒருத்தரைக் கழுத்தறுத்து வீசிட்டுப் போற கூலிப் படையில இருக்கிற நிறைய பேர் 18, 20 வயசுப் பசங்க. நினைக்கவே அதிர்ச்சியா இருக்கு. இந்த வயசுல எங்கேயிருந்து வந்துச்சு உசுரெடுக்கிற வெறி..? எது இவங்களை இப்படித் திருப்பியது? வெறும் 2,000, 3,000 ரூபாய்க்குக் கொலை பண்ற கொடூரத்துக்குள்ளே இவங்க எப்படிப் போனாங்கன்னு அவங்க |