<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" id="Cat. heading" width="609"><tbody><tr><td align="right" class="blue_color" height="25" valign="middle"><div align="right">கிருஷ்ணா டாவின்ஸி </div></td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td><span class="Brown_color">ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் </span></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"> <tbody><tr> <td align="left" class="Brown_color" height="35" valign="top"><span class="orange_color_heading"></span></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"><tbody><tr><td align="left" class="Brown_color" height="35" valign="top"><span class="orange_color_heading">ரஹ்மான் ஏன் அன்பைத் தேர்ந்தெடுத்தார்?</span></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td class="orange_color">வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்</td> </tr> </tbody></table> <p><strong></strong></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p><strong>செ</strong>ன்னை நகரத்தின் ஒரு நடுத்தரக் குடும் பத்தில் பிறந்து, நான்கு வயதில் பியானோ வாசித்த சிறுவன் திலீப், 25 வயதில் அல்லா ரக்கா ரஹ்மானாகமாறி, 17 வருட நீண்ட பயணத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் கோடாக் தியேட்டரில் ஆஸ்கர் பரிசு வழங்கும் விழாவில், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் காத்திருந்தார். </p> <p>ஆஸ்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. ரஹ்மான் இரண்டு பரிசுகளை வென்றார். எப்போதும் போல் அடக்கமாகப் புன்னகை செய்தபடி அந்தப் பரிசுகளைப் பெற்றுக்கொண்டார். ஆனால், டெலிவிஷன் பெட்டிகளின் முன்னால் நகத்தைக் கடித்தபடி இருந்த கோடிக்கணக்கான இந்தியர்களில் பலர் அந்தக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள். ஆஸ்கர் கமிட்டியின் 80 வருடத்துச் சரித்திரத்தில் இரண்டு ஆஸ்கர் வென்ற ஒரே இந்தியர். </p> <p><strong></strong></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p><strong></strong>ரஹ்மான் ஆஸ்கர் பரிசு பெற்றபோது மேடையில் சொன்ன வார்த்தைகள். "எல்லாப் புகழும் இறைவனுக்கே. என் வாழ்க்கையில் அன்பா... வெறுப்பா? இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டம் ஒன்று இருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இந்த இடத்தில் நிற்கிறேன்."</p> <p>ரஹ்மானின் அந்தப் பேச்சுக்கான அடிப்படை, அவர் கடைப்பிடிக்கும் 'சூஃபியிஸம்' என்கிற ஸ்பிரிச்சுவல் தத்துவம். ''நான் நம்புவது ஒன்றே ஒன்றைத்தான். இந்த உலகத்தில் இசை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதைத் தவிர வேறு எதன் மீதும் எனக்கு நாட்டமில்லை'' என்கிறார் ரஹ்மான். அதன் அர்த்தம் மிகவும் விசாலமானது. சூஃபியிஸம் என்பது இஸ்லாத்தின் உள்ளீடான, கொஞ்சம் புதிரான இறையியல் மனோதத்துவம். நபிகள் நாயகத்தின் பிரதான சீடர்களால் பரப்பப் பட்ட சூஃபியிஸம் ஒரு மனிதனின் தனிப்பட்ட இதயச் சுத்திகரிப்புக்கும், அந்த நிலையின் மூலம் இறைவனின் கருணையைச் சென்றடையும் வழி என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சூஃபி குருவை மனதார ஏற்றுக்கொண்ட பின், அவர் காட்டும் மார்க்க வழிகளில் பயணித்தால், அமைதியுடன் வாழலாம் என்று இதைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள். ரஹ்மானும் அவர்களில் ஒருவர்.</p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>இது ஓர் ஆசிரியர் - மாணவன் உறவு முறை போலத்தான். ஆனால், எந்த வழிகாட்டிப் புத்தகங்களும் கோட்பாடுகளும் கிடையாது. ஒரு குருவின் மூலம், 'தான்' என்கிற எண்ணம் நீக்கப்பட்டு, கடவுளிடம் பரிபூரணமாகச் சரணடைவதுதான் இதன் ஆதாரத் தத்துவம். ரஹ்மானும் அப்படித்தான் சூஃபியிஸத்தில் சரணடைந்தார். முதலில் அவருக்குக் கிடைத்த குரு, அரிஃபுல்லா முகம்மது காத்ரி (பிர் காத்ரி). அதற்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்தவர் ஆந்திராவில் இருக்கும் அவருடைய மகன் கரிமுல்லா ஷா. இன்று வரை அவர்தான் ரஹ்மானின் சூஃபி குரு. மாலிக் பாபா என்று அவரை அழைக்கிறார் ரஹ்மான். தான் தொடங்கிய இசைக் கல்லூரிக்கு 'கே.எம். மியூஸிக் கான்சர்வேட்டரி' என்று பெயரிட் டார் ரஹ்மான். கே.எம். என்பது கரி முல்லாவின் சுருக்கம். அதே போல் 'பஞ்சதன்' ஸ்டுடியோவும் இப்போது 'ஏ.எம்.' ஸ்டுடியோ ஆகிவிட்டது. ஏ.எம். என்பது அரிஃபுல்லா முகம்மதுவின் சுருக்கம்.</p> <p>'லகான்', 'கஜினி' போன்ற படங்களில் ரஹ்மானுடன் பணியாற்றிய அமீர்கான், ரஹ்மானின் சூஃபியிஸ ஈடுபாட்டைப் பற்றி ஆச்சர்யமாகப் பேசுகிறார். "அவரிடம் அது பிரமாதமாக வொர்க்-அவுட் ஆகி இருக்கிறது. தான் நம்பும் தத்துவத்தில் முழுவதுமாகச் சரணடைந்திருப்பதால்தான் அவரிடமிருந்துஇப்படி ஓர் அபூர்வமான இசை பிறப்பதாக நான் நினைக்கிறேன். எதற்கும் அலட்டிக்கொள்ளாத அமைதியான மனிதராகவும் அவரை அந்தத் தத்துவம் மாற்றியிருக்கிறது!'' என்கிறார் அமீர்கான்.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p>ஒரு முறை பெங்களூரு பாலஸ் மைதானத்தில் ரஹ்மானின் மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. திடீரென்று பெரும்மழை பொழிந்தது. சூறாவளிக் காற்று அடித்தது.மைதானத் துக்குள் வெள்ளம் புகுந்து, மேடையின் பின்புலத்தில் இருந்த செட் சரிந்து விழுந்தது. ரசிகர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்கள். கிரீன் அறைக்குள் சென்ற ரஹ்மான் கதவைச் சாத்திக்கொண்டார். அமைதியாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அரை மணி நேரத் துக்குப் பிறகு வெளியே வந்தார். மேடைக்குச் சென்றார். ரசிகர் களிடம் "இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டுமா அல்லது ரத்துசெய்து விடலாமா?" என்று கேட்டார். ரசிகர்கள் "நிகழ்ச்சி வேண்டும்" என்றார்கள். புன்னகைத்த ரஹ்மான் கச்சேரியை ஆரம் பித்தார். மழையும் காற்றும் அதிசயம் போல் நின்றது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கச்சேரி நடந்தது. கடைசிப் பாடலான 'வந்தே மாதரத்தின்' இறுதி 'பாரை' ரஹ்மான் வாசித்த போது மழை மீண்டும் கொட்ட ஆரம்பித்தது. ரஹ்மான் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்படவே இல்லை. இதுதான் அவருடைய ஆளுமை.</p> <p>ரஹ்மான் இரண்டு முறை ஹஜ் யாத்திரை சென்று வந்துவிட்டார். ஒரு முறை ஹஜ் பயணம் செய்தபோது தெருவில் ஒருவர் 'மய்யா... மய்யா' என்று குடிநீரை வித்தியாசமான ஓசையில் விற்றுக்கொண்டு சென்றாராம். அரபி மொழியில் மய்யா என்றால் தண்ணீர். அதுதான் ஹிந்தி 'குரு' படத்தில் 'மய்யா... மய்யா' பாடலாயிற்று. (பாடியவர் மரியம் டாலர் என்கிற கனடா நாட்டுப் பாடகி) <br /> 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு அடுத்து ரஹ்மானின் பெரும் சாதனையாக 'டில்லி 6' படப் பாடல்களைச் சொல்லலாம். ஸ்லம்டாக்கைவிடச் சிறப்பான இசை என்று இதைப்பற்றி விமர் சகர்கள் எழுதினார்கள். லண்ட னின் 'ஆர் அண்ட் பி' பாடகர் ஆஷ் கிங், ஜாஸ் பாடகி விவியன் போச்சா, மொஹித் சௌஹான் (மஸாக்கலி புகழ்), ரேகா பரத் வாஜ், ஷ்ரேத்தா பண்டிட், சுஜாதா மஜூம்தார், கைலாஷ் கெர் மற்றும் ஜாவேத் அலி (ரஹ்மானின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒன்பது நிமிட அரிஸியான் என்கிற சூஃபி வகை கவாலி பாடலைப் பாடியவர்கள்) என்று தேடித் தேடி இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர்களை அறிமுகப்படுத்தினார் ரஹ்மான். ஆஸ்கர் பரிசுக்காக லாஸ் ஏஞ்சலீஸ் சென்றபோது இந்தப் படத்தின் வேலைகளில் மூழ்கி இருந்தார் அவர்.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p>ரஹ்மானின் சமூகப் பணிக்கான வேலைகளும் ஓசைப்படாமல் தொடர்கின்றன. உலக சுகாதாரக் கழகத்தின் (கீபிளி) டி.பி. நோய் எதிர்ப்புப் பிரசாரத்தின் உலகத் தூதுவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. 'சேவ் தி சில்ட்ரன்' அமைப்புக்காக அவர் இணைந்து பணியாற்றுகிறார். உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான ஃப்ரூஹோல்மேன், நீல் பிரிம்ரோஸ் போன்றவர்களுடன் இணைந்து ரஹ்மான் இசையமைத்த 'இந்தியன் ஓஷன்' என்கிற பாட்டின் மூலம் கிடைத்த பணம் இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்குப் போய்ச் சேர்ந்தது. தி பானியன், ஃபிரீ ஹக்ஸ் காம்பேய்ன் போன்றவற்றுக்காகவும் அவர் இசையமைத்து நிதி திரட்டித் தருகிறார். <br /> <br /> கே.எம். மியூஸிக் கல்லூரியில் பல ஏழைக் குழந்தைகள் இசை கற்கிறார்கள். ஏழைக் குழந் தைகளின் இலவசக் கல்விக்கான ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேஷன் வேலைகள் நடக்கின்றன.</p> <p>கனவின் இசை தொடர்ந்து பயணிக்கிறது... வெவ்வேறு சிகரங்களை நோக்கி!<br /> </p> </td> </tr> <tr> <td align="left" colspan="3" valign="top"> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td align="left" valign="top"> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="right" valign="middle" width="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascript:history.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>
<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" id="Cat. heading" width="609"><tbody><tr><td align="right" class="blue_color" height="25" valign="middle"><div align="right">கிருஷ்ணா டாவின்ஸி </div></td> <td align="right" valign="middle" width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr><td><span class="Brown_color">ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான் </span></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"> <tbody><tr> <td align="left" class="Brown_color" height="35" valign="top"><span class="orange_color_heading"></span></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="Brown_color_heading" id="Artical Heading" width="100%"><tbody><tr><td align="left" class="Brown_color" height="35" valign="top"><span class="orange_color_heading">ரஹ்மான் ஏன் அன்பைத் தேர்ந்தெடுத்தார்?</span></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td class="orange_color">வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்</td> </tr> </tbody></table> <p><strong></strong></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p><strong>செ</strong>ன்னை நகரத்தின் ஒரு நடுத்தரக் குடும் பத்தில் பிறந்து, நான்கு வயதில் பியானோ வாசித்த சிறுவன் திலீப், 25 வயதில் அல்லா ரக்கா ரஹ்மானாகமாறி, 17 வருட நீண்ட பயணத்துக்குப் பிறகு, அமெரிக்காவின் கோடாக் தியேட்டரில் ஆஸ்கர் பரிசு வழங்கும் விழாவில், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் காத்திருந்தார். </p> <p>ஆஸ்கர் பரிசு அறிவிக்கப்பட்டது. ரஹ்மான் இரண்டு பரிசுகளை வென்றார். எப்போதும் போல் அடக்கமாகப் புன்னகை செய்தபடி அந்தப் பரிசுகளைப் பெற்றுக்கொண்டார். ஆனால், டெலிவிஷன் பெட்டிகளின் முன்னால் நகத்தைக் கடித்தபடி இருந்த கோடிக்கணக்கான இந்தியர்களில் பலர் அந்தக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தில் கண்ணீர்விட்டு அழுதார்கள். ஆஸ்கர் கமிட்டியின் 80 வருடத்துச் சரித்திரத்தில் இரண்டு ஆஸ்கர் வென்ற ஒரே இந்தியர். </p> <p><strong></strong></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p><strong></strong>ரஹ்மான் ஆஸ்கர் பரிசு பெற்றபோது மேடையில் சொன்ன வார்த்தைகள். "எல்லாப் புகழும் இறைவனுக்கே. என் வாழ்க்கையில் அன்பா... வெறுப்பா? இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டம் ஒன்று இருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இந்த இடத்தில் நிற்கிறேன்."</p> <p>ரஹ்மானின் அந்தப் பேச்சுக்கான அடிப்படை, அவர் கடைப்பிடிக்கும் 'சூஃபியிஸம்' என்கிற ஸ்பிரிச்சுவல் தத்துவம். ''நான் நம்புவது ஒன்றே ஒன்றைத்தான். இந்த உலகத்தில் இசை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதைத் தவிர வேறு எதன் மீதும் எனக்கு நாட்டமில்லை'' என்கிறார் ரஹ்மான். அதன் அர்த்தம் மிகவும் விசாலமானது. சூஃபியிஸம் என்பது இஸ்லாத்தின் உள்ளீடான, கொஞ்சம் புதிரான இறையியல் மனோதத்துவம். நபிகள் நாயகத்தின் பிரதான சீடர்களால் பரப்பப் பட்ட சூஃபியிஸம் ஒரு மனிதனின் தனிப்பட்ட இதயச் சுத்திகரிப்புக்கும், அந்த நிலையின் மூலம் இறைவனின் கருணையைச் சென்றடையும் வழி என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சூஃபி குருவை மனதார ஏற்றுக்கொண்ட பின், அவர் காட்டும் மார்க்க வழிகளில் பயணித்தால், அமைதியுடன் வாழலாம் என்று இதைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள். ரஹ்மானும் அவர்களில் ஒருவர்.</p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"> <tbody><tr> <td><div align="center"> </div></td> </tr> </tbody></table> <p>இது ஓர் ஆசிரியர் - மாணவன் உறவு முறை போலத்தான். ஆனால், எந்த வழிகாட்டிப் புத்தகங்களும் கோட்பாடுகளும் கிடையாது. ஒரு குருவின் மூலம், 'தான்' என்கிற எண்ணம் நீக்கப்பட்டு, கடவுளிடம் பரிபூரணமாகச் சரணடைவதுதான் இதன் ஆதாரத் தத்துவம். ரஹ்மானும் அப்படித்தான் சூஃபியிஸத்தில் சரணடைந்தார். முதலில் அவருக்குக் கிடைத்த குரு, அரிஃபுல்லா முகம்மது காத்ரி (பிர் காத்ரி). அதற்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்தவர் ஆந்திராவில் இருக்கும் அவருடைய மகன் கரிமுல்லா ஷா. இன்று வரை அவர்தான் ரஹ்மானின் சூஃபி குரு. மாலிக் பாபா என்று அவரை அழைக்கிறார் ரஹ்மான். தான் தொடங்கிய இசைக் கல்லூரிக்கு 'கே.எம். மியூஸிக் கான்சர்வேட்டரி' என்று பெயரிட் டார் ரஹ்மான். கே.எம். என்பது கரி முல்லாவின் சுருக்கம். அதே போல் 'பஞ்சதன்' ஸ்டுடியோவும் இப்போது 'ஏ.எம்.' ஸ்டுடியோ ஆகிவிட்டது. ஏ.எம். என்பது அரிஃபுல்லா முகம்மதுவின் சுருக்கம்.</p> <p>'லகான்', 'கஜினி' போன்ற படங்களில் ரஹ்மானுடன் பணியாற்றிய அமீர்கான், ரஹ்மானின் சூஃபியிஸ ஈடுபாட்டைப் பற்றி ஆச்சர்யமாகப் பேசுகிறார். "அவரிடம் அது பிரமாதமாக வொர்க்-அவுட் ஆகி இருக்கிறது. தான் நம்பும் தத்துவத்தில் முழுவதுமாகச் சரணடைந்திருப்பதால்தான் அவரிடமிருந்துஇப்படி ஓர் அபூர்வமான இசை பிறப்பதாக நான் நினைக்கிறேன். எதற்கும் அலட்டிக்கொள்ளாத அமைதியான மனிதராகவும் அவரை அந்தத் தத்துவம் மாற்றியிருக்கிறது!'' என்கிறார் அமீர்கான்.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p>ஒரு முறை பெங்களூரு பாலஸ் மைதானத்தில் ரஹ்மானின் மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. திடீரென்று பெரும்மழை பொழிந்தது. சூறாவளிக் காற்று அடித்தது.மைதானத் துக்குள் வெள்ளம் புகுந்து, மேடையின் பின்புலத்தில் இருந்த செட் சரிந்து விழுந்தது. ரசிகர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்கள். கிரீன் அறைக்குள் சென்ற ரஹ்மான் கதவைச் சாத்திக்கொண்டார். அமைதியாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அரை மணி நேரத் துக்குப் பிறகு வெளியே வந்தார். மேடைக்குச் சென்றார். ரசிகர் களிடம் "இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டுமா அல்லது ரத்துசெய்து விடலாமா?" என்று கேட்டார். ரசிகர்கள் "நிகழ்ச்சி வேண்டும்" என்றார்கள். புன்னகைத்த ரஹ்மான் கச்சேரியை ஆரம் பித்தார். மழையும் காற்றும் அதிசயம் போல் நின்றது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கச்சேரி நடந்தது. கடைசிப் பாடலான 'வந்தே மாதரத்தின்' இறுதி 'பாரை' ரஹ்மான் வாசித்த போது மழை மீண்டும் கொட்ட ஆரம்பித்தது. ரஹ்மான் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்படவே இல்லை. இதுதான் அவருடைய ஆளுமை.</p> <p>ரஹ்மான் இரண்டு முறை ஹஜ் யாத்திரை சென்று வந்துவிட்டார். ஒரு முறை ஹஜ் பயணம் செய்தபோது தெருவில் ஒருவர் 'மய்யா... மய்யா' என்று குடிநீரை வித்தியாசமான ஓசையில் விற்றுக்கொண்டு சென்றாராம். அரபி மொழியில் மய்யா என்றால் தண்ணீர். அதுதான் ஹிந்தி 'குரு' படத்தில் 'மய்யா... மய்யா' பாடலாயிற்று. (பாடியவர் மரியம் டாலர் என்கிற கனடா நாட்டுப் பாடகி) <br /> 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு அடுத்து ரஹ்மானின் பெரும் சாதனையாக 'டில்லி 6' படப் பாடல்களைச் சொல்லலாம். ஸ்லம்டாக்கைவிடச் சிறப்பான இசை என்று இதைப்பற்றி விமர் சகர்கள் எழுதினார்கள். லண்ட னின் 'ஆர் அண்ட் பி' பாடகர் ஆஷ் கிங், ஜாஸ் பாடகி விவியன் போச்சா, மொஹித் சௌஹான் (மஸாக்கலி புகழ்), ரேகா பரத் வாஜ், ஷ்ரேத்தா பண்டிட், சுஜாதா மஜூம்தார், கைலாஷ் கெர் மற்றும் ஜாவேத் அலி (ரஹ்மானின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒன்பது நிமிட அரிஸியான் என்கிற சூஃபி வகை கவாலி பாடலைப் பாடியவர்கள்) என்று தேடித் தேடி இந்தப் படத்தில் சூப்பர் சிங்கர்களை அறிமுகப்படுத்தினார் ரஹ்மான். ஆஸ்கர் பரிசுக்காக லாஸ் ஏஞ்சலீஸ் சென்றபோது இந்தப் படத்தின் வேலைகளில் மூழ்கி இருந்தார் அவர்.</p> </td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="left" height="500" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" class="block_color_bodytext" colspan="3" valign="top"><p>ரஹ்மானின் சமூகப் பணிக்கான வேலைகளும் ஓசைப்படாமல் தொடர்கின்றன. உலக சுகாதாரக் கழகத்தின் (கீபிளி) டி.பி. நோய் எதிர்ப்புப் பிரசாரத்தின் உலகத் தூதுவர் பதவி அவருக்கு அளிக்கப்பட்டது. 'சேவ் தி சில்ட்ரன்' அமைப்புக்காக அவர் இணைந்து பணியாற்றுகிறார். உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான ஃப்ரூஹோல்மேன், நீல் பிரிம்ரோஸ் போன்றவர்களுடன் இணைந்து ரஹ்மான் இசையமைத்த 'இந்தியன் ஓஷன்' என்கிற பாட்டின் மூலம் கிடைத்த பணம் இந்தோனேஷியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரண நிதிக்குப் போய்ச் சேர்ந்தது. தி பானியன், ஃபிரீ ஹக்ஸ் காம்பேய்ன் போன்றவற்றுக்காகவும் அவர் இசையமைத்து நிதி திரட்டித் தருகிறார். <br /> <br /> கே.எம். மியூஸிக் கல்லூரியில் பல ஏழைக் குழந்தைகள் இசை கற்கிறார்கள். ஏழைக் குழந் தைகளின் இலவசக் கல்விக்கான ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேஷன் வேலைகள் நடக்கின்றன.</p> <p>கனவின் இசை தொடர்ந்து பயணிக்கிறது... வெவ்வேறு சிகரங்களை நோக்கி!<br /> </p> </td> </tr> <tr> <td align="left" colspan="3" valign="top"> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td align="left" valign="top"> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"> <tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td align="right" valign="middle" width="5"></td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_bluecolor_english_text" width="100%"> <tbody><tr> <td width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"><a class="big_bluecolor_english_text style1" href="#" onclick="Javascript:history.back()"></a> </td> <td align="right" width="59"><a class="big_bluecolor_english_text" href="#"></a></td> <td width="15"> </td> </tr> </tbody></table></div>