டி.வி. விகடன்
விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
தொடர்கள்
Published:Updated:

''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!

''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!

''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!
நா.கதிர்வேலன், படங்கள்:கே.ராஜசேகரன்
''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!
''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!
இதுவரை சொல்லாதது!-இந்த வாரம்: பிரகாஷ்ராஜ்
''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!
''விழுங்க விழுங்க விஷம்!''
''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!
''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!

'வாழ்த்துக்கள்', 'சந்தோஷம்', 'எனக்கு அப்பவே தெரியும்... உங்களைவிட்டா வேற யாரு இருக்கா?' - விதவிதமான புகழ் மாலைகள் பிரகாஷ்ராஜின் தோள்களில் விழுந்துகொண்டே இருக்கின்றன. இந்தியாவின் 'சிறந்த நடிகர்' விருது வந்த வேளை. ''ஏற்கெனவே 'சொல்லாததும் உண்மை'ன்னு எல்லாமே சொல்லிட்டேன். ஆனாலும், 'இதுவரை சொல்லாததும்' கொஞ்சம் இருக்கே!'' - பிரியப்பட்டுப் பேசுகிறார் பிரகாஷ்ராஜ்.

மறக்க முடியாத நாள்:

''இதோ இப்போ தேசிய விருது கிடைச்ச இந்த இனிய நாள்னு வெச்சுக்கலாம். 'இப்பவாச்சும் பொறுப்பு வந்திருச்சா?'ன்னு கேட்கிறாங்க. பொறுப்பு வந்ததால்தானே, 'காஞ்சிவரம்' மாதிரி படத்தில் நடிக்கிறேன். 'மொழி' தயாரிக்கிறேன். 'தேசிய விருதுக்குப் பிறகு என்ன?'ன்னு கேட்டால், 'அது ஒரு மைல் கல்' அவ்வளவுதான்!

ஒரு நடிகனுக்கு தேசிய விருது என்பது அந்த வருஷத்தின் சிறந்த நடிப்புக்கே தவிர மொத்த வாழ்க்கைக்குமான கிரீடம் கிடையாது. அந்தக் கிரீடம் சிவாஜி, நாகேஷ், எஸ்.பி.ரங்காராவ் இவங்களுக்கு கடைசி வரை கிடைக்கவே இல்லை. இது எனது தனிப்பட்ட பயணம். லவ்வர் பாயா ஆரம்பிச்சு 'தாரே ஜமீன் பர்'னு பொறுப்புடன் ஒரு படம் எடுத்த அமீர்கானின் பக்குவத்துக்கு முன்னாடி, 15 வருஷமாகச் சிறப்பாக நடிக்கிற மோகன்லாலின் அனுபவத்துக்கு முன்னாடி, டி.வி. சீரியல் நடிகனா ஆரம்பிச்சு ஸ்டார் ஹீரோவா உயர்ந்து நிக்கிற ஷாரூக்குக்குப் பக்கத்தில், வில்லனா அறிமுகமாகி பெரியாரைக் கண் முன்னாடி நடமாடவிட்ட சத்யராஜ் முன்னாடி ஒப்பிட்டால், நான் ஒண்ணும் செய்யவே இல்லை. இது அவை அடக்கம் கிடையாது. உண்மையிலும் உண்மை. அதனால், இந்த நாள் கிட்டத்தட்ட எனக்குப் பிறந்த நாளா அமைந்துவிட்டது. 'சம்ப ளம் வாங்காமல் நடிச்சிட்டேன்'னு பாராட்டு வேறு. காசில்லாமல் நடிக்க நான் என்ன முட்டாளா? தேசிய விருதுதான் எனக்குச் சம் பளம்!''

மிகச் சிறந்த நண்பன்:

''ஒருத்தரும் இல்லை. ஆனால், எனக்கு நானே நல்ல நண்பன். அவன் பேசுவதை மட்டும்தான் நான் கேட்பேன். இன்னொரு நண்பனைத் தேர்ந்தெடுக்கச் சொல்வதுகூட அவன்தான். எனக்குப் பெரிய தீர்ப்புக்களை சொல்கிற நீதிபதியும்அவன் தான். சமயங்களில் அவன் சொல்றதைக்கூட கேட்காமல் ஒதுங்கி இருக்கேன். 'இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாதே!'ன்னு 'காஞ்சிவரம்' வாய்ப்பு வந்தப்ப எச்சரிச்சவனும் அவன்தான்!''

அடிக்கடி வரும் கனவு:

''இன்னும் முழிக்கவே இல்லையே. கனவிலேயேதான் இன்னமும் இருக்கேன். என்கனவு கள் விசித்திரமானவை. இந்தத் தேசிய விருதுகூட என் கனவில் வந்தது. 'இந்த இடத்துக்குப் போகணும்'னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே கனவுல அது வந்துடும். நான் கனவை முழுக்க நம்புவேன். அதன் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ள ஆசைப்படுவேன். நான் நம்பியது மட்டுமே எனது கனவில் வரும். கனவில் பேசிப் பார்த்து ரிகர்சல் பண்ணுவேன். சந்தோஷமா மறுநாள் மேடையில் முழங்குவேன். கனவுகளை என்னிடம் இருந்து உருவிவிட்டால், நானே இல்லை. கனவில் வாழும் பிரகாஷ்ராஜ் அப்படியே வாழ்ந்துவிட்டுப் போகட்டும்!''

''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!

சென்டிமென்ட்:

''எந்த சென்டிமென்ட்டும் என்னிடம் கிடையாது. என்னிடம் அவற்றுக்கு இடம் இல்லை. மனிதனைப் பின்னுக்கு இழுக்கிற சக்தியாக இந்த சென்டிமென்ட்டுகளைக் கருதுகிறேன்!''

பொக்கிஷமாகப் பாதுகாப்பது:

''ஒண்ணுமே இல்லை. எதுவுமே நிலையில்லாதபோது எதைப் பாதுகாத்து வைக்கணும். எல்லாமே வேடிக்கையா இருக்கு!''

தத்துவம்:

''ஒரு வேலையை முடிக்கணும்னா, முதலில் தொடங்கு!''

பணம்:

''என்கிட்டே எப்பவும் பணம் இருக்காது. நான் அதிகம் என் உடைகளை உடுத்துவது இல்லை. ஒவ்வொரு நாளும் புதுத் துணியிலேயே இருக்கேன். 10 வருஷமா ஏதோ ஒரு கதாபாத்திரத்தோட பாக்கெட்தானே என் கையில் இருக்கு. என் உடையை நான் போடும்போது தூங்கிட்டு இருப்பேன். என்னோட அசிஸ்டென்ட்தான் பணம் வெச்சிருப்பான். அவன்கிட்ட பணம் இல்லாத போதுதான், 'என் பாக்கெட்டில் பணம் இல்லை'ன்னு சொல்வேன். ஆனால், அதைச் செலவழிக்கிற கனவுகள் மட்டும் நிறைஞ்சு வழியுது!''

''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!

10 வருடங்களுக்குப் பிறகு:

''நான் அப்பவும் நடிகனாக இருக்கணும்னு ஆசைப்படுவேன். ஆனால், இன்னும் பக்குவமானவனாக, இப்ப இருக்கிற மாதிரி இல்லாதவனாக இருக்கணும். நிச்சயம் இன்னொரு தொடுவானத்தில் இருப்பேன். இப்ப கண்ணுக்குத் தெரிவது என் தொடுவானம் இல்லை!''

கடைசியாக அழுதது:

''கன்னடப் பட சூட்டிங் அடர்ந்த காட்டுக்குள் நடக்குது. எப்பவோ விட்டுவிட்டுக் கிடைக்குது சிக்னல். துண்டு துண்டாக் கேட்கும் வார்த்தைகள் மூலமா 'தேசிய விருது கிடைச்ச செய்தி' தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பு!

அவ்வளவு சந்தோஷம். கண்ணீர் மலர்ந்து நின்னது. சந்தோஷத்தையும் துக்கத்தையும் சேர்ந்து சொல்றதுக்கு கண்ணீர் மட்டுமே ஆதாரமா இருப்பது ஆச்சர்யமா இருக்கு. அதற்குப் பிறகு நீண்ட தனிமை. அந்த அழுகை தந்த பரவசம் இப்பவும் மனசுல இருக்கு!''

ஆசைப்பட்டு நடக்காதது:

''நிறைய நிறைய நான் ஆசைப்பட்டதில் 10 சதவிகிதம்தான் நடந்திருக்கு. நியாயமான ஆசைகள்கூட நிறைவேறியது இல்லை. அதனால் வருத்தமும் இல்லை. புரிதல் கிடைச்சிருக்கு!''

அதிர்ச்சியடைய வைத்தது:

''என் சின்னப் பொண்ணு, 'நீ வாயை மூடு. உனக்கு ஒண்ணுமே தெரியாது!'ன்னு சமீபத்தில் என்கிட்ட சொன்னா. உள்ளதை இப்படிப் போட்டு உடைச்சிட்டாளே இந்தச் சின்னப் பொண்ணுன்னு எனக்கு அதிர்ச்சி ஆயிருச்சு!''

''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!

இதுவரை சொல்லாதது:

''நான் எந்த அளவுக்கு நேசிப்பவன்னு யாருக்குமே தெரியாது. அதை எப்படி வெளிப்படுத்துறன்னு இன்னும் யோசிக்கிறேன். நான் ரொம்ப தைரியசாலின்னு எல்லோரும் நினைக்கிறாங்க. நான் தைரியசாலியும் இல்லை... தெளிவானவனும் இல்லை!''

உங்களைக் காயப்படுத்துபவர்களுக்கு:

''என் நண்பர்களுக்கு என்னைத் தெரியும். எனது இரண்டு மகள்களுக்கு என்னை அப்படியே புரியும். பெண்களை மதிப்பது என் தாய்க்குத் தெரியும். உயிரில்லாத கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. எனக்கு யாராவது தொடர்ந்து விஷம் கொடுத்துக்கொண்டே இருந்தால், நான் சிவபெருமான் ஆகிவிடுவேன்!''

 
''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!
''விழுங்க விழுங்க விஷம்!'' -இதுவரை சொல்லாதாது!