##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எப்படி வந்திருக்கு 'பொன்னர்-சங்கர்’?''
'' 'படம் எடுத்த தியாகராஜன் கைகளுக்கு முத்தம் கொடுக்கணும்’னு கலைஞர் அய்யாவே சொல்லிட்டார். இனிமே நான் என்ன சொல்ல? 'ஒரு வரலாற்றுப் படம் பண்ணணும். அதை கலைஞர்தான் எழுதணும்’ங்கிறது என்னோட ரொம்ப நாள்ஆசை. நானும் அப்பாவும் கலைஞரிடம் விருப்பத்தைச் சொன்னோம். அவர் உடனே 'பொன்னர்-சங்கர்’ புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். கதை, களம், சூழல் தொடர்பான ஆராய்ச்சிக்கே ஒன்றரை வருஷம் எடுத்துக்கிட்டோம். 2009-ல் ஆரம்பிச்ச ஷூட்டிங், போன மாசம்தான் முடிஞ்சுது. 'பொன்னர்-சங்கர்’ கண்டிப்பா உங்களுக்குப் புது அனுபவமா இருக்கும்!''
'' 'பொன்னர்-சங்கர்’ சீரியஸான முயற்சியா? இல்லை, கலைஞரைத் திருப்திப்படுத்த எடுத்த படமா?''
''படம் பார்க்காமல் நீங்கள் கேட்ட இந்தக் கேள்வி என்னை வருத்தப்பட வைக்கிறது. 'என் படைப்புகளைப் படமாக எடுங்க’ன்னு கலைஞர் யாரிடமும் கேட்டது கிடையாது. இந்தப் படம் முழுக்க முழுக்க எங்களோட ஆசையால் உருவானது. ஷூட்டிங்கிலேயே பிஸியா இருந்ததால் இன்டர்வியூ, விளம்பரம் எதுவும் நாங்க கொடுக்கலை. அதனால எங்களோட உழைப்பு உங்களுக்குத் தெரியலை. படம் பார்த்துட்டு சொல்லுங்க!''
''இந்தப் படம் எந்த வகையில் பிரமாண்டமா வந்திருக்கு?''
''30 ஆயிரம் வீரர்கள், 3 ஆயிரம் குதிரைகளை வெச்சு ஒரு போர்க் காட்சியை எடுத்திருக்கோம். அவ்வளவு பேருக்கும் தேவையான பழமையான உடை, ஆயுதங்கள் உருவாக்கி இருக்கோம். அதற்கு

எவ்வளவு பெரிய உழைப்பு தேவைப்படும்னு யோசிச்சுப் பாருங்க. ஒரிஜினல் கோட்டை மாதிரியே அச்சு பிசகாம செட்டு கள் போட்டிருக்கோம். இசையமைப்பாளர் இளையராஜா, கேமராமேன் ஷாஜிகுமார், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஜோதா அக்பர் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சனா கோச்சார்னு பெரிய டீம் ஒண்ணா சேர்ந்து பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கோம்!''
''நல்ல விஷயம்... பிஸியான பிரசாந்த்தைத் திரும்பப் பார்க்க முடியுமா?''
''சினிமா, ஃபேமிலி லைஃப் இரண்டிலும் சின்னச் சின்ன சறுக்கல்கள். அதான் இடைவெளிக்குக் காரணம். பிரச்னைகள் எல்லாம் முடிஞ்சு, இப்போ ஃப்ரீயா இருக்குறேன். 'பொன்னர்-சங்கர்’ படத்தில் ஓர் அறிமுக நடிகரைப்போல் என் உழைப்பைக் கொட்டி நடிச்சிருக்கேன். இந்தப் படம் என்னை அடுத்தடுத்த லெவலுக்குக் கூட்டிச் செல்லும் என்று நம்புகிறேன். அப்பாவுக்கும் கலைஞர் அய்யாவுக்கும் நன்றி!''