‘‘காவிரிப்
பிரச்னைக்காகப் போராடினதெல்லாம்..?’’
‘‘அது அரசியல் இல்லை... ஒரு தமிழனின் உணர்வு. லட்சக்கணக்கான
தமிழ் உழவர்களின் வாழ்க்கை. அதில் நான் விளையாடலை. அப்படி
ஏதாச்சும் என் மனசில் இருந்தா, ‘போடுங்கம்மா ஓட்டு!’ன்னு
நானும் இன்னிக்கு வீதி வீதியா வேன்ல வந்துட்டிருப்பேனே.
‘கர்நாடகத்துக்குப் போற நெய்வேலி மின்சாரத்தைத் தடுப்போம்’னு
பண்ணினது ஒரு போராட்டத்தின் குறியீடு. அதை அரசியலாக்கிட்டாங்க.
நான் ஏதோ அ.தி.மு.க-வுக்கு ஆதரவா போராட்டம் பண்றதா
சொன்னாங்க. விஜயகாந்த் அதை அவரோட கட்சிக் கூட்டமாக்கப்
பார்த்தார். ரஜினிகாந்த் அவர் பங்குக்கு தன்னால் முடிஞ்ச அளவுக்கு
தமிழர்களுக்குத் துரோகம் பண்ணினார். எல்லோரோடவும் சேர்ந்து
போராட வராம, நதிகளை இணைக்கணும்னு போராட்டத்தையே
திசை திருப்பினார்.
ஆசை இருந்து அரசியலுக்குப் போக விரும்புறவங்க தாராளமா
போகட்டும். ஆனா, மக்கள் பிரச்னையை வெச்சு விளையாடக்
கூடாது. அப்படிப் பண்ணினால், நடக்கக் கூடாததெல்லாம் நடக்கும்.
ரஜினிக்கு இப்போ அதுதான் நடக்குது!’’
‘‘விஜயகாந்த்தைப்
பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமா வர்றாங்களே?’’
‘‘சார், ‘ஆட்டுக் கார அலமேலு’ படம் வெற்றிகரமா ஓடினப்போ,
அந்த ஆட்டை லாரியில் ஏத்தி ஊர் ஊரா அனுப்பிச்சாங்க. மக்கள்
கட்டுச்சோறு கட்டிக்கிட்டு வந்து ஆட்டைப் பார்த்துட்டுப் போனாங்க.
ஏன்னா, தமிழனுக்கு சினிமான்னா, பெத்த தாய்- தகப்பனகூட
மறந்துடுவான்.
விஜயகாந்த் ஒரு நேர்மையான அரசியல்வாதியா, படிப்படியா
உழைத்து மேலே வர என் வாழ்த்துக்கள். இப்பவும் சினிமால விஜயகாந்த்,
ரஜினிகாந்த் எல்லாம் என் நண்பர்கள்தான். ஆனா, அரசியல்னு
வந்துட்டா, விமர்சனங் களைச் சந்திச்சேதான் ஆகணும்!’’
‘‘நடுவில்
நீங்கள் அ.தி.மு.க. ஆதர வாளர் அவதாரம் எடுத்தீர்களே?’’
‘‘96-ல் அ.தி.மு.க-வைக் கடுமையாக எதிர்த்தவங்கள்ல நானும்
ஒருத்தன். ஆனா, இந்த அம்மாவோட கடந்த அஞ்சு வருஷ ஆட்சி,
மிகச் சிறந்த ஆட்சி. சங்கராச்சாரியார் கைதுல தொடங்கி மழை
நீர் சேகரிப்புத் திட்டம் வரை ஜெயலலிதா நல்லாட்சி தந்திருக்காங்க.
இப்பவும் எனக்கு கலைஞரோட உழைப்பு, ஞாபக சக்தி, நட்புணர்வு
எல்லாமே பிடிக்கும். கருத்து பேதம் கடந்து என்னை ஒரு கலைஞனா
கட்டித் தழுவிக்கிற மனுஷன் அவர். அது வேற.
ஆனா, காமராஜரைத் தோற்கடிச்ச தி.மு.க-வின் கொள்கைகள்
மீது எனக்கு உடன்பாடில்லை. ‘ஒரு ரூபாய்க்கு அரிசி தருவோம்,
இல் லைன்னா சவுக்கால அடிங்க’ன்னு வாக் குறுதி தந்து ஆட்சிக்கு
வந்தார் அண்ணா. அதை நிறைவேற்ற முடியலை. இப்போ அதே
ஃபார்முலாவில் கலர் டி.வி. தர்றதா கலைஞர் வாக்குறுதி தர்றதை
ரசிக்க முடியலை.
தமிழ்நாட்டைத் தன் குடும்பமா நினைச்சவர், இப்போ தன் குடும்பத்
தையே தமிழ்நாடா பார்க்க ஆரம்பிச் சுட்டார். தமிழகத்தில்
கலைஞர் தொடங்கின வாரிசு அரசியல் இன்னிக்கு எல்லாக் கட்சியையும்
பாதிச்சிருக்கு.
தி.மு.க. மட்டுமல்ல, இன்னிக்கு எல்லாக் கட்சிகளும் கொள்கைகளைக்
கூட்டணிங்கிற குப்பைத் தொட்டியில் கொட்டியிருச்சு. எனக்கு ஓட்டு
போடுற உரிமை உண்டுன்னா, என் கருத்தைச் சொல்ற உரிமையும்
இருக்கு!’’
‘‘நீங்களே
உங்கள் மகன் மனோஜை ஹீரோவாக்க முயற்சி செய்தவர்தானே.
வாரிசை ஹீரோவாக்குவது தவறில்லை. அரசியல்வாதியாக்கினால்
தவறா?’’
‘‘நான் என் மகனை சினிமாவுக்குக் கொண்டு வரச் செய்த முயற்சியில்,
கலைஞன் என்பதைத் தாண்டி அப்பா என்கிற பாசம் என் கலைக்கு
குறுக்கே நின்னுச்சு.
வாரிசை யாரும் உருவாக்கக் கூடாது. உருவாக வேண்டும். அந்தத்
தவறை நான் செய்யப்போய் என் கலைத் திறமையும் பாதிக்கப்பட்டுச்சு.
என் மகன் திறமைக்கும் தீமை வந்துச்சு. அதை நான் இப்போது
உணர்றேன். அதனால்தான் சொல்றேன். வாரிசு சினிமாவே தீங்கான
துன்னா, வாரிசு அரசியல் இன்னும் ஆபத்து!’’
‘‘உங்கள்
இரண்டு பிள்ளை களுக்கும் ஒரே நேரத்தில் காதல் திருமணமாமே?’’
‘‘வீட்ல சீக்கிரம் கல்யாண விசேஷம் இருக்கு. அது காதல் கல்யாணங்களா
இல்லையான்னு சீக்கிரமே சொல்றேன். தமிழ்நாட்டுல திருப்புமுனையா
இருந்த காதல் படங்களை எடுத்த நான் எப்படி காதலுக்கு விரோதியா
இருப்பேன். உண்மையான காதலை இந்த பாரதிராஜா எப்போதும்
வரவேற்பான். அது உண்மையான காதலாக இருக்கணும், அவ்வளவுதான்.
அதை எடைபோடுற தகுதியும் அனுபவமும் எனக்கு உண்டு. ஏன்னா,
நான் இன்னும் வாழ்க்கையைக் காதலிச்சு வாழ்றவன். அது எல்லோருக்கும்
தெரியும்!’’
|