<blockquote>``சீரியஸான நேரத்தில் ஜாலியான கேள்விகளா? கேளுங்க, மனசைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்” என்றபடி தயாரானார், நடிகை ஊர்வசி.</blockquote>.<p>“எத்தனை கேள்விக்கு எனக்கு பதில் தெரியும்னு தெரியாது. உங்களை வெச்சு எனக்குத் தெரியாததைக் கத்துக்கிறேன்’’ என ரெடியானார், தொகுப்பாளினி <strong>பிரியங்கா.</strong></p><p>“பதில் தெரியலைன்னா ‘நோ கமென்ட்ஸ்’னுதான் சொல்லுவேன் பரவாயில்லையா? சரி ஆசைப்படுறீங்க, கேளுங்க. மாட்டிவிடாமல் இருந்தா சரி” என்றபடி ஜாலி மோடில் கேள்விகளை எதிர்கொண்டார் <strong>நடிகர் கலையரசன். </strong></p><p>போனை அட்டன்ட் செய்து இந்த கான்செப்ட் பற்றிக் கேட்டவுடன், “இப்போவே கேள்விகளைக் கேட்கப்போறீங்களா... சரி கேளுங்க பார்ப்போம்?” என்றார் <strong>வாகை சந்திரசேகர்.</strong></p>.<p>ஓ.பன்னீர்செல்வத்தின் இன்னொரு பெயர் என்ன?</p>.<p><strong>சரியான பதில்:</strong> பேச்சிமுத்து</p><p><strong>ஊர்வசி: </strong>“சினிமாவில் நடிக்கிறவங்க தான் தங்களோட பெயரை மாத்திப்பாங்கன்னு கேள்விப்பட்டி ருக்கேன். அரசியல் வாதிகளும் பெயரை மாத்திப்பாங்களா என்ன? எனக்கு அவரோட ஒரு பெயர்தான் தெரியும்.”</p>.<p><strong>பிரியங்கா:</strong> “அவருக்கு இன்னொரு பெயர் இருக்கா? எனக்கு ஓ.பன்னீர் செல்வம்கிற பெயர்தான் தெரியும்.”</p><p><strong>கலையரசன் :</strong> “ஐயய்யோ! சத்தியமா தெரியாது தல.”</p><p><strong>வாகை சந்திரசேகர் : </strong>“ஓ.பன்னீர்செல்வம்தான் நமக்குத் தெரிஞ்ச பேரு. வேற ஒரு பேரு இருக்கா அவருக்கு?”</p>.<p>தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்றால் என்ன?</p>.<p><strong>சரியான பதில் :</strong> மூன்றுகாலத்துக்கும் பொருந்தும்படி இருக்கும் பெயர்ச்சொல். உதாரணம் : ஊறுகாய்.</p><p><strong>நடிகை ஊர்வசி:</strong> “நான் மலையாளியா இருந்தாலும், தமிழ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததனால எழுத, படிக்க மட்டும் கத்துக்கிட்டேன். ஆனால், இலக்கணம் வரைக்கும் கத்துக்கலையே.”</p><p><strong>பிரியங்கா: </strong>“வினைத்தொகையா? நான் காலேஜ் படிக்கும் போதுதான் தமிழையும் படிக்க ஆரம்பிச்சேன். இப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே. பதிலை நீங்களே சொல்லுங்களேன்” என்றவரிடம், பதிலைச் சொன்னபின், “இதை நான் சொன்னதா எழுதிக்கோங்க ப்ரோ” என்றார்.</p>.<p><strong>கலையரசன் : </strong>“தல இதெல்லாம் எங்க தமிழ் மிஸ் சொல்லிக்கொடுத்திருக்காங்க. ஆனா, இத்தனை வருஷமானதுல மறந்துட்டேன். நீங்களே உதாரணத்தோட சொல்லிடுங்களேன்!” </p><p><strong>வாகை சந்திரசேகர் : “</strong>என்னங்க தமிழ் ஆசிரியர் மாதிரி கேட்குறீங்களே! இலக்கணத்துல அவ்ளோ தூரம் எனக்குத் தெரியலையே!”</p>.<p>ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் யார்?</p>.<p><strong>சரியான பதில் : </strong>ஜோ பிடன்</p><p><strong>ஊர்வசி:</strong> “எனக்கு நம்ம ஊரு அரசியலே தெரியாதுங்க. இதுல, வெளிநாட்டு அரசியல் கேள்வியெல்லாம் கேட்டா எப்படி? ஓட்டு போடுறதைத் தவிர, அரசியலில் வேறு எதையும் நான் பாலோ பண்ணுறது இல்ல.”</p>.<p><strong>பிரியங்கா: </strong>“ ஜோ பிடன். இவரு வின் பண்ணணும்னு நிறைய பேர் ஆசைப்படுறாங்கன்னும் கேள்விப்பட்டேன்.” </p><p><strong>கலையரசன் : </strong>“உள்ளூர் அரசியலே நமக்குப் பஞ்சாயத்தா இருக்கு. இதுல வெளியூர் அரசியல் வேறயா? ஹிலாரி கிளின்டனா நிக்குறாங்க... தெரியலையே!”</p><p><strong>வாகை சந்திரசேகர் :</strong> “இந்திய வம்சாவளிப் பெண் யாரோன்னு நினைக்கிறேன்.”</p>.<p>‘ரஜினியுடனான அரசியல் முரண்பாடு முடிந்துவிட்டது’ என்று சொன்ன அரசியல் கட்சித் தலைவர் யார்?</p>.<p><strong>சரியான பதில்: </strong> சீமான்</p><p><strong>ஊர்வசி:</strong> “சமீபத்தில்தான் இப்படி நியூஸைப் பார்த்தேன். ரஜினி சார் அவருக்கு போன் பண்ணிப் பேசியதாகவும் அந்தச் செய்தியில் போட்டிருந்தாங்க. ஆனால், அவர் யாருன்னு தெரியலையே.”</p>.<p><strong>பிரியங்கா:</strong> “நான் கமல் சார்னு சொல்லுவேன். நீங்க இல்லைன்னு சொல்லுவீங்க. அப்படித்தானே.” </p><p><strong>கலையரசன் : </strong>“அவருடைய அரசியலைப் பத்தி நிறைய பேர் கருத்து சொல்லிருக்காங்க. அதுல இதைச் சொன்னது யாருன்னு தெரியலையே... சீமானா?”</p><p><strong>வாகை சந்திரசேகர் : </strong>“சீமான்”</p>.<p>காஜல் அகர்வால் திருமணம் செய்யவிருக்கும் தொழிலதிபரின் பெயர் என்ன?</p>.<p><strong>சரியான பதில் :</strong> கௌதம் கிச்லு</p><p><strong>நடிகை ஊர்வசி: </strong>“தொழிலதிபரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க; மும்பையில் கல்யாணம்னு கேள்விப்பட்டேன். ஆனால், அவர் பெயர் எனக்குத் தெரியாது.”</p><p><strong>பிரியங்கா:</strong> “தொழிலதிபர்னு தெரியும். ஆனால், பெயர் தெரியலை.” </p><p><strong>கலையரசன் : </strong>“கெளதம் கிச்லு... கரெக்டா?”</p><p><strong>வாகை சந்திரசேகர் : </strong>“அந்தச் செய்தியைப் பார்த்தேன். ஆனா, முழுமையா படிக்கலையே.”</p>
<blockquote>``சீரியஸான நேரத்தில் ஜாலியான கேள்விகளா? கேளுங்க, மனசைக் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்” என்றபடி தயாரானார், நடிகை ஊர்வசி.</blockquote>.<p>“எத்தனை கேள்விக்கு எனக்கு பதில் தெரியும்னு தெரியாது. உங்களை வெச்சு எனக்குத் தெரியாததைக் கத்துக்கிறேன்’’ என ரெடியானார், தொகுப்பாளினி <strong>பிரியங்கா.</strong></p><p>“பதில் தெரியலைன்னா ‘நோ கமென்ட்ஸ்’னுதான் சொல்லுவேன் பரவாயில்லையா? சரி ஆசைப்படுறீங்க, கேளுங்க. மாட்டிவிடாமல் இருந்தா சரி” என்றபடி ஜாலி மோடில் கேள்விகளை எதிர்கொண்டார் <strong>நடிகர் கலையரசன். </strong></p><p>போனை அட்டன்ட் செய்து இந்த கான்செப்ட் பற்றிக் கேட்டவுடன், “இப்போவே கேள்விகளைக் கேட்கப்போறீங்களா... சரி கேளுங்க பார்ப்போம்?” என்றார் <strong>வாகை சந்திரசேகர்.</strong></p>.<p>ஓ.பன்னீர்செல்வத்தின் இன்னொரு பெயர் என்ன?</p>.<p><strong>சரியான பதில்:</strong> பேச்சிமுத்து</p><p><strong>ஊர்வசி: </strong>“சினிமாவில் நடிக்கிறவங்க தான் தங்களோட பெயரை மாத்திப்பாங்கன்னு கேள்விப்பட்டி ருக்கேன். அரசியல் வாதிகளும் பெயரை மாத்திப்பாங்களா என்ன? எனக்கு அவரோட ஒரு பெயர்தான் தெரியும்.”</p>.<p><strong>பிரியங்கா:</strong> “அவருக்கு இன்னொரு பெயர் இருக்கா? எனக்கு ஓ.பன்னீர் செல்வம்கிற பெயர்தான் தெரியும்.”</p><p><strong>கலையரசன் :</strong> “ஐயய்யோ! சத்தியமா தெரியாது தல.”</p><p><strong>வாகை சந்திரசேகர் : </strong>“ஓ.பன்னீர்செல்வம்தான் நமக்குத் தெரிஞ்ச பேரு. வேற ஒரு பேரு இருக்கா அவருக்கு?”</p>.<p>தமிழ் இலக்கணத்தில் வினைத்தொகை என்றால் என்ன?</p>.<p><strong>சரியான பதில் :</strong> மூன்றுகாலத்துக்கும் பொருந்தும்படி இருக்கும் பெயர்ச்சொல். உதாரணம் : ஊறுகாய்.</p><p><strong>நடிகை ஊர்வசி:</strong> “நான் மலையாளியா இருந்தாலும், தமிழ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததனால எழுத, படிக்க மட்டும் கத்துக்கிட்டேன். ஆனால், இலக்கணம் வரைக்கும் கத்துக்கலையே.”</p><p><strong>பிரியங்கா: </strong>“வினைத்தொகையா? நான் காலேஜ் படிக்கும் போதுதான் தமிழையும் படிக்க ஆரம்பிச்சேன். இப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே. பதிலை நீங்களே சொல்லுங்களேன்” என்றவரிடம், பதிலைச் சொன்னபின், “இதை நான் சொன்னதா எழுதிக்கோங்க ப்ரோ” என்றார்.</p>.<p><strong>கலையரசன் : </strong>“தல இதெல்லாம் எங்க தமிழ் மிஸ் சொல்லிக்கொடுத்திருக்காங்க. ஆனா, இத்தனை வருஷமானதுல மறந்துட்டேன். நீங்களே உதாரணத்தோட சொல்லிடுங்களேன்!” </p><p><strong>வாகை சந்திரசேகர் : “</strong>என்னங்க தமிழ் ஆசிரியர் மாதிரி கேட்குறீங்களே! இலக்கணத்துல அவ்ளோ தூரம் எனக்குத் தெரியலையே!”</p>.<p>ட்ரம்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் யார்?</p>.<p><strong>சரியான பதில் : </strong>ஜோ பிடன்</p><p><strong>ஊர்வசி:</strong> “எனக்கு நம்ம ஊரு அரசியலே தெரியாதுங்க. இதுல, வெளிநாட்டு அரசியல் கேள்வியெல்லாம் கேட்டா எப்படி? ஓட்டு போடுறதைத் தவிர, அரசியலில் வேறு எதையும் நான் பாலோ பண்ணுறது இல்ல.”</p>.<p><strong>பிரியங்கா: </strong>“ ஜோ பிடன். இவரு வின் பண்ணணும்னு நிறைய பேர் ஆசைப்படுறாங்கன்னும் கேள்விப்பட்டேன்.” </p><p><strong>கலையரசன் : </strong>“உள்ளூர் அரசியலே நமக்குப் பஞ்சாயத்தா இருக்கு. இதுல வெளியூர் அரசியல் வேறயா? ஹிலாரி கிளின்டனா நிக்குறாங்க... தெரியலையே!”</p><p><strong>வாகை சந்திரசேகர் :</strong> “இந்திய வம்சாவளிப் பெண் யாரோன்னு நினைக்கிறேன்.”</p>.<p>‘ரஜினியுடனான அரசியல் முரண்பாடு முடிந்துவிட்டது’ என்று சொன்ன அரசியல் கட்சித் தலைவர் யார்?</p>.<p><strong>சரியான பதில்: </strong> சீமான்</p><p><strong>ஊர்வசி:</strong> “சமீபத்தில்தான் இப்படி நியூஸைப் பார்த்தேன். ரஜினி சார் அவருக்கு போன் பண்ணிப் பேசியதாகவும் அந்தச் செய்தியில் போட்டிருந்தாங்க. ஆனால், அவர் யாருன்னு தெரியலையே.”</p>.<p><strong>பிரியங்கா:</strong> “நான் கமல் சார்னு சொல்லுவேன். நீங்க இல்லைன்னு சொல்லுவீங்க. அப்படித்தானே.” </p><p><strong>கலையரசன் : </strong>“அவருடைய அரசியலைப் பத்தி நிறைய பேர் கருத்து சொல்லிருக்காங்க. அதுல இதைச் சொன்னது யாருன்னு தெரியலையே... சீமானா?”</p><p><strong>வாகை சந்திரசேகர் : </strong>“சீமான்”</p>.<p>காஜல் அகர்வால் திருமணம் செய்யவிருக்கும் தொழிலதிபரின் பெயர் என்ன?</p>.<p><strong>சரியான பதில் :</strong> கௌதம் கிச்லு</p><p><strong>நடிகை ஊர்வசி: </strong>“தொழிலதிபரைக் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்க; மும்பையில் கல்யாணம்னு கேள்விப்பட்டேன். ஆனால், அவர் பெயர் எனக்குத் தெரியாது.”</p><p><strong>பிரியங்கா:</strong> “தொழிலதிபர்னு தெரியும். ஆனால், பெயர் தெரியலை.” </p><p><strong>கலையரசன் : </strong>“கெளதம் கிச்லு... கரெக்டா?”</p><p><strong>வாகை சந்திரசேகர் : </strong>“அந்தச் செய்தியைப் பார்த்தேன். ஆனா, முழுமையா படிக்கலையே.”</p>