<p>“என் கட்சியை விட்டு வேறு கட்சிக்குத் தாவும் தலைவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்... டாடா... பைபை... ஸீ யூ தேர் ஸூன்!”</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>“ந</strong>ம்ம தலைவர் ஏன் கட்சியை ரெண்டா பிரிச்சிட்டார்?!” </p><p>“ரெண்டு மகன்களும் இளைஞரணித் தலைவர் </p><p>பதவி வேணும்னு அடம்பிடிக்கிறாங்களாம்..!” </p><p><strong>- கோவை.நா.கி.பிரசாத்</strong></p>.<p><strong>“எ</strong>ன்னங்க... நம்ம பையன் உங்ககூட </p><p>தனியா கொஞ்ச நேரம் பேசணுமாம்!”</p><p>“சாயந்திரம் கூட்டத்துக்கு வரச் சொல்லு!”</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>“உ</strong>ங்க வீட்ல புடவை திருடினது பெண்தான்னு </p><p>எப்படிச் சொல்றீங்க?”</p><p>“புடவைக்கு மேட்ச்சான கலரில் </p><p>பாசிமாலையும் திருடு போயிருக்கு ஏட்டய்யா!”</p><p><strong>- எஸ்.முகம்மது யூசுப்.</strong></p>.<p><strong>“உ</strong>ங்க கிளினிக்குக்கு ஒரு வருசமா வர்றேன்... </p><p>நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது டாக்டர்..!”</p><p>“என் மருத்துவம் அப்படி..!”</p><p>“அதில்லே டாக்டர்... ஒரு வருசத்துக்குள்ள நாலு ஆம்புலன்ஸ் வண்டி வாங்கிட்டீங்களே!”</p><p><strong>- வேம்பார் மு.க.இப்ராஹிம்</strong></p>.<p><strong>“செ</strong>ன்னைக்குப் பக்கத்துல நல்ல வீட்டுமனைகள் இருக்கு. பார்க்கிறீங்களா..?”</p><p>“கல்குவாரி பக்கத்துல இருந்தா சொல்லுங்க...பார்ப்போம்..!”</p><p><strong>- வேம்பார் மு.க.இப்ராஹிம்</strong></p>.<p><strong>“வ</strong>ருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தா </p><p>என்ன தண்டனை தெரியுமா?”</p><p>“என்ன தண்டனை?”</p><p>“உடனே டெல்லி கட்சியில போய்ச் சேர்ந்துடணும்!”</p><p><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></p>.<p><strong>“அ</strong>திக பவுண்டரிகளை அடித்தவர்களுக்கு எப்படி உலகக்கோப்பை கொடுத்தார்களோ அதேபோல, அதிகமுறை தேர்தலில் நின்று தோற்ற எங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்!”</p><p><strong>- மகிழினி மணி.எம்.</strong></p>
<p>“என் கட்சியை விட்டு வேறு கட்சிக்குத் தாவும் தலைவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்... டாடா... பைபை... ஸீ யூ தேர் ஸூன்!”</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>“ந</strong>ம்ம தலைவர் ஏன் கட்சியை ரெண்டா பிரிச்சிட்டார்?!” </p><p>“ரெண்டு மகன்களும் இளைஞரணித் தலைவர் </p><p>பதவி வேணும்னு அடம்பிடிக்கிறாங்களாம்..!” </p><p><strong>- கோவை.நா.கி.பிரசாத்</strong></p>.<p><strong>“எ</strong>ன்னங்க... நம்ம பையன் உங்ககூட </p><p>தனியா கொஞ்ச நேரம் பேசணுமாம்!”</p><p>“சாயந்திரம் கூட்டத்துக்கு வரச் சொல்லு!”</p><p><strong>- அஜித்</strong></p>.<p><strong>“உ</strong>ங்க வீட்ல புடவை திருடினது பெண்தான்னு </p><p>எப்படிச் சொல்றீங்க?”</p><p>“புடவைக்கு மேட்ச்சான கலரில் </p><p>பாசிமாலையும் திருடு போயிருக்கு ஏட்டய்யா!”</p><p><strong>- எஸ்.முகம்மது யூசுப்.</strong></p>.<p><strong>“உ</strong>ங்க கிளினிக்குக்கு ஒரு வருசமா வர்றேன்... </p><p>நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது டாக்டர்..!”</p><p>“என் மருத்துவம் அப்படி..!”</p><p>“அதில்லே டாக்டர்... ஒரு வருசத்துக்குள்ள நாலு ஆம்புலன்ஸ் வண்டி வாங்கிட்டீங்களே!”</p><p><strong>- வேம்பார் மு.க.இப்ராஹிம்</strong></p>.<p><strong>“செ</strong>ன்னைக்குப் பக்கத்துல நல்ல வீட்டுமனைகள் இருக்கு. பார்க்கிறீங்களா..?”</p><p>“கல்குவாரி பக்கத்துல இருந்தா சொல்லுங்க...பார்ப்போம்..!”</p><p><strong>- வேம்பார் மு.க.இப்ராஹிம்</strong></p>.<p><strong>“வ</strong>ருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்தா </p><p>என்ன தண்டனை தெரியுமா?”</p><p>“என்ன தண்டனை?”</p><p>“உடனே டெல்லி கட்சியில போய்ச் சேர்ந்துடணும்!”</p><p><strong>- எஸ்.முகம்மது யூசுப்</strong></p>.<p><strong>“அ</strong>திக பவுண்டரிகளை அடித்தவர்களுக்கு எப்படி உலகக்கோப்பை கொடுத்தார்களோ அதேபோல, அதிகமுறை தேர்தலில் நின்று தோற்ற எங்கள் தலைவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்!”</p><p><strong>- மகிழினி மணி.எம்.</strong></p>