
News
"இடைத்தேர்தலை தலைவர் புறக்கணிப்பு செஞ்சதுக்கான காரணம்?"
"தேர்தல் முடிவை அகக்கணிப்பு செஞ்சிருப்பார்!"

- வீ.விஷ்ணுகுமார்
"தலைவர் சொதப்பிட்டாரா?"
"ஆமாம், டிவி சீரியலில் `இவருக்குப் பதில் இவர்' என்பதை ஏற்றுக்கொள்ளும் சமூகம், கல்லூரியில் மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை'ன்னு பேசிட்டார்.

- கி.ரவிக்குமார்
“தலைவர் ஏன் ரொம்ப ஃபீல் பண்றார்?"
"இப்படி வசதியெல்லாம் இருக்கும்னு தெரிஞ்சிருந்தா, அவர் டாக்டராகியிருப்பாராம்!"

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்
“சிபிஐ அதிகாரிகள் எதுக்குப் போராட்டம் பண்றாங்க?’’
"எல்லாரும் ஆளும் கட்சிக்கு வந்துட்டா, ரெய்டு குறைந்து சிபிஐயில் ஆட்குறைப்பு வரக்கூடாதுன்னுதான்."

- சுந்தரராஜ்