<p><strong>facebook.com/Vigneswari Suresh </strong></p><p>ஃபேஸ்புக்கைத் திறந்தாலே யாராவது ஒரு கிழவனார், காதலியைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டி ருக்கிறார்.</p><p><strong>twitter.com/SKP KARUNA</strong></p><p>இந்தியப் பிரதமர், சீன அதிபரின் மாமல்லபுரச் சந்திப்புக்கு, சீன அதிபரை வரவேற்றும், இந்தியப் பிரதமரைத் திரும்பிப் போகச் சொல்லியும் ட்வீட் போடறதுலே என்ன லாஜிக்? போயிட்டா யாருடன் சீன அதிபர் பேச்சுவார்த்தை நடத்துவார்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடனா?</p><p>#உங்களுக்குஎங்கே மொட்டை போட்டாங்க</p>.<p><strong>twitter.com/சப்பாணி </strong></p><p>இந்த நகைக்கடைக்காரங்க பில்போடும்போது கால்குலேட்டரில் எல்லா கீயையும் யூஸ் பண்ணுறாங்க.</p><p><strong>twitter.com/ஜோக்கர்</strong></p><p>சிம்பு டு ஃபேன்ஸ் </p><p>எதுக்குக் கவலைப்படுறே?! அடுத்தவாரம் வெளிநாடு போறேன், வர்றப்ப நாலஞ்சு ஸ்டில் விடுவேன். இன்னும் 2, 3 படம் புக் பண்ணப்போறேன். எல்லாம் உனக்குத்தான்.</p><p>ஏன் படம் ரிலீஸ் ஆகலைன்னு நீயும் கேட்கக்கூடாது. இன்னும் நீ என் ஃபேனாதான் இருக்கியான்னு நானும் கேட்கமாட்டேன்.</p>.<p><strong>twitter.com/Pandidurai</strong></p><p>என்னுடைய புத்தகம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கையில் இருக்கும் என்று நினைக்கிறேன், நான் எண்ணிய திட்டங்களை அவர் அங்கே நிறைவேற்றிவருகிறார் - சீமான்.</p><p>எங்களைத் தமிழ் படிக்கச் சொல்லிட்டு தெலுங்குல புக்கு எழுதிருக்கீங்களா, சொல்லுங்க நீங்க வந்தேறிதானே!</p>.<p><strong>facebook.com/Meenamma Kayal</strong></p><p>திரும்பிச் செல்வதற்கு வீடும், வீட்டில் உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு சிலரும் இருந்தால் மட்டுமே அது பண்டிகை. இல்லையென்றால் விடுமுறைநாள்.</p><p><strong>facebook.com/ரமேஷ் வைத்யா</strong></p><p>‘ஆஹாஹா... மிகுந்த குறும்போடு கூடிய நகைச்சுவையாக உள்ளது’</p><p>என்பதன் சுருக்கம்தான், ‘யோவ்’ போலிருக்கிறது.</p>.<p><strong>twitter.com/Zen Selvaa</strong></p><p>மணிரத்னம், ரேவதி ஆகியோர்மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு ரத்து.</p><p>இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்பது வழக்கு தொடுத்தவர்களுக்கே தெரியும். தெரிந்திருந்தும் வழக்கு தொடுக்கிறார்கள் என்றால், தண்டனை பெற்றுத் தருவதற்காக அல்ல, எதிர்ப்ப வர்களை எச்சரிப்பதற்காக - மிரட்டு வதற்காகத்தான்.</p><p><strong>twitter.com/mohanram.ko</strong></p><p>நான்கு நாள்கள் விடுமுறை முடிந்து, அலுவலகம் கிளம்பும்போது ‘இன்னைக்கு போகாம விட்டுடலாமா’ன்னு நம்ம மனசுக்குள் இருந்து ஒரு சிம்பு எட்டிப் பார்க்கிறார்.</p>.<p><strong>twitter.com/அபிவீரன் akkutwitz </strong></p><p>தமிழகத்தில் பகுத்தறிவு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது! </p><p><strong>- ஹெச்.ராஜா #</strong></p><p>மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் அகத்தியர்னு சொல்றதுதான் பகுத்தறிவா ராசா? </p><p><strong>twitter.com/ஜால்ரா காக்கா</strong></p><p>நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார் RK. சுரேஷ்</p><p>ஊர்ல சூரி காமெடி புடிக்கலைன்னு சதீஸ் காமெடி பார்த்தானாம் ஒருத்தன்.</p>.<p><strong>facebook.com/Umanath Selvan</strong></p><p>கிண்டி - மாமல்லபுரம் சாலையில் இந்த உக்கிர வெயிலில் ஒரு நொடிகூட நிற்காத கார்களுக்காக வரவேற்கக் காத்திருக்கும் பிஞ்சுக்குழந்தைகளை நினைக்கும்போது அடி வயிறு பற்றிக்கொண்டு எரிகிறது. </p>.<p><strong>twitter.com/GreeseDabba2</strong></p><p>இன்றைய தேதியில், மொபைலைப் பார்த்துக்கொண்டே யார் மேலும் மோதாமல் நடப்பதை, வேலைக்கு மனு அளிக்கும்போது ஒவ்வொருவரும் தங்கள் ரெஸ்யூமில் ஒரு கூடுதல் தகுதியாகவே குறிப்பிடலாம்.</p>.<p><strong>twitter.com/Vicky_stirring</strong></p><p>சலூனில் நமக்கு முன்னர் முடிவெட்டி ட்ரிம் செய்து முடித்தவுடன் இறங்கப் போறார் என நினைக்கும்போது க்ரீம் போடுங்க என்கிறப்ப வரும் பாருங்க ஒரு கடுப்பு...</p><p>நமக்குள் தூங்கிட்டு இருக்கும் மிருகம் எழுந்து க்ரீம் போட்டு என்ன சாதிக்கப் போற எனக் கேட்கும் அளவுக்கு. </p><p><strong>twitter.com//Annaiinpillai</strong></p><p>காலையில் 6 மணிக்கு முன்னாடி எழுந்து படிச்ச கடைசித் தலைமுறை 90ஸ் கிட்ஸாகத்தான் இருக்கும்..!</p><p><strong>twitter.com/prakashT</strong></p><p>பக்குவம் என்பது யாதெனில், விலக்கிய பாத்திரங்களை பத்திரமாய் அடுக்கி வைப்பதில் இருக்கு என்கிறார் நவீன கணவர் ஒருவர்.</p>
<p><strong>facebook.com/Vigneswari Suresh </strong></p><p>ஃபேஸ்புக்கைத் திறந்தாலே யாராவது ஒரு கிழவனார், காதலியைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டி ருக்கிறார்.</p><p><strong>twitter.com/SKP KARUNA</strong></p><p>இந்தியப் பிரதமர், சீன அதிபரின் மாமல்லபுரச் சந்திப்புக்கு, சீன அதிபரை வரவேற்றும், இந்தியப் பிரதமரைத் திரும்பிப் போகச் சொல்லியும் ட்வீட் போடறதுலே என்ன லாஜிக்? போயிட்டா யாருடன் சீன அதிபர் பேச்சுவார்த்தை நடத்துவார்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடனா?</p><p>#உங்களுக்குஎங்கே மொட்டை போட்டாங்க</p>.<p><strong>twitter.com/சப்பாணி </strong></p><p>இந்த நகைக்கடைக்காரங்க பில்போடும்போது கால்குலேட்டரில் எல்லா கீயையும் யூஸ் பண்ணுறாங்க.</p><p><strong>twitter.com/ஜோக்கர்</strong></p><p>சிம்பு டு ஃபேன்ஸ் </p><p>எதுக்குக் கவலைப்படுறே?! அடுத்தவாரம் வெளிநாடு போறேன், வர்றப்ப நாலஞ்சு ஸ்டில் விடுவேன். இன்னும் 2, 3 படம் புக் பண்ணப்போறேன். எல்லாம் உனக்குத்தான்.</p><p>ஏன் படம் ரிலீஸ் ஆகலைன்னு நீயும் கேட்கக்கூடாது. இன்னும் நீ என் ஃபேனாதான் இருக்கியான்னு நானும் கேட்கமாட்டேன்.</p>.<p><strong>twitter.com/Pandidurai</strong></p><p>என்னுடைய புத்தகம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கையில் இருக்கும் என்று நினைக்கிறேன், நான் எண்ணிய திட்டங்களை அவர் அங்கே நிறைவேற்றிவருகிறார் - சீமான்.</p><p>எங்களைத் தமிழ் படிக்கச் சொல்லிட்டு தெலுங்குல புக்கு எழுதிருக்கீங்களா, சொல்லுங்க நீங்க வந்தேறிதானே!</p>.<p><strong>facebook.com/Meenamma Kayal</strong></p><p>திரும்பிச் செல்வதற்கு வீடும், வீட்டில் உங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு சிலரும் இருந்தால் மட்டுமே அது பண்டிகை. இல்லையென்றால் விடுமுறைநாள்.</p><p><strong>facebook.com/ரமேஷ் வைத்யா</strong></p><p>‘ஆஹாஹா... மிகுந்த குறும்போடு கூடிய நகைச்சுவையாக உள்ளது’</p><p>என்பதன் சுருக்கம்தான், ‘யோவ்’ போலிருக்கிறது.</p>.<p><strong>twitter.com/Zen Selvaa</strong></p><p>மணிரத்னம், ரேவதி ஆகியோர்மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கு ரத்து.</p><p>இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது என்பது வழக்கு தொடுத்தவர்களுக்கே தெரியும். தெரிந்திருந்தும் வழக்கு தொடுக்கிறார்கள் என்றால், தண்டனை பெற்றுத் தருவதற்காக அல்ல, எதிர்ப்ப வர்களை எச்சரிப்பதற்காக - மிரட்டு வதற்காகத்தான்.</p><p><strong>twitter.com/mohanram.ko</strong></p><p>நான்கு நாள்கள் விடுமுறை முடிந்து, அலுவலகம் கிளம்பும்போது ‘இன்னைக்கு போகாம விட்டுடலாமா’ன்னு நம்ம மனசுக்குள் இருந்து ஒரு சிம்பு எட்டிப் பார்க்கிறார்.</p>.<p><strong>twitter.com/அபிவீரன் akkutwitz </strong></p><p>தமிழகத்தில் பகுத்தறிவு தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது! </p><p><strong>- ஹெச்.ராஜா #</strong></p><p>மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் அகத்தியர்னு சொல்றதுதான் பகுத்தறிவா ராசா? </p><p><strong>twitter.com/ஜால்ரா காக்கா</strong></p><p>நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார் RK. சுரேஷ்</p><p>ஊர்ல சூரி காமெடி புடிக்கலைன்னு சதீஸ் காமெடி பார்த்தானாம் ஒருத்தன்.</p>.<p><strong>facebook.com/Umanath Selvan</strong></p><p>கிண்டி - மாமல்லபுரம் சாலையில் இந்த உக்கிர வெயிலில் ஒரு நொடிகூட நிற்காத கார்களுக்காக வரவேற்கக் காத்திருக்கும் பிஞ்சுக்குழந்தைகளை நினைக்கும்போது அடி வயிறு பற்றிக்கொண்டு எரிகிறது. </p>.<p><strong>twitter.com/GreeseDabba2</strong></p><p>இன்றைய தேதியில், மொபைலைப் பார்த்துக்கொண்டே யார் மேலும் மோதாமல் நடப்பதை, வேலைக்கு மனு அளிக்கும்போது ஒவ்வொருவரும் தங்கள் ரெஸ்யூமில் ஒரு கூடுதல் தகுதியாகவே குறிப்பிடலாம்.</p>.<p><strong>twitter.com/Vicky_stirring</strong></p><p>சலூனில் நமக்கு முன்னர் முடிவெட்டி ட்ரிம் செய்து முடித்தவுடன் இறங்கப் போறார் என நினைக்கும்போது க்ரீம் போடுங்க என்கிறப்ப வரும் பாருங்க ஒரு கடுப்பு...</p><p>நமக்குள் தூங்கிட்டு இருக்கும் மிருகம் எழுந்து க்ரீம் போட்டு என்ன சாதிக்கப் போற எனக் கேட்கும் அளவுக்கு. </p><p><strong>twitter.com//Annaiinpillai</strong></p><p>காலையில் 6 மணிக்கு முன்னாடி எழுந்து படிச்ச கடைசித் தலைமுறை 90ஸ் கிட்ஸாகத்தான் இருக்கும்..!</p><p><strong>twitter.com/prakashT</strong></p><p>பக்குவம் என்பது யாதெனில், விலக்கிய பாத்திரங்களை பத்திரமாய் அடுக்கி வைப்பதில் இருக்கு என்கிறார் நவீன கணவர் ஒருவர்.</p>