<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>உ</strong></span></span>ங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.<br /> <br /> இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 26ஆம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘வகுப்பறை’ என்கிற தலைப்பில், நான்கு வரியில் கவிதை எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><span style="font-size: larger;">க</span>றை கரம்... யார் கரம்? </strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ந்த வகுப்பில் உள்ள மாணவர்களில் தினேஷ் மட்டும் ரொம்ப சேட்டைக்காரப் பையன். <br /> <br /> ரப்பர் பல்லியை சக மாணவர்கள் மேல் திடீரெனத் தூக்கிப் போட்டு, அவர்களை அலறவைப்பான். யாராவது புதுசாக நோட்டுப் புத்தகம் வாங்கி வந்திருப்பது தெரிந்தால் போச்சு.<br /> <br /> அதை எடுத்துப் பிரித்து, கைக்கு வந்த பக்கங்களில் பேனாவால் கன்னா பின்னாவென்று கிறுக்கி வைத்துவிட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவான். <br /> <br /> கோடை விடுமுறை முடிந்து அன்றைக்குதான் பள்ளிக்கூடம் திறந்தது. இடைப்பட்ட லீவு நாள்களில், அந்தப் பள்ளிக்குப் புது டிஸ்டெம்பர் அடித்து, வண்ணமயமாக ஆக்கியிருந்தது பள்ளி நிர்வாகம். வகுப்பறைகள் எல்லாம் புது வண்ணத்தில் ஜொலித்தன.</p>.<p>முதல் நாளில், அந்த வகுப்பறைக்குள் தினேஷ்தான் முதலாவதாக வந்தான். சுவர்கள் அப்பழுக்கு இல்லாமல் புத்தம்புதுசாக டிஸ்டெம்பர் அடித்திருப்பதைக் கண்டதும், ஏதாவது கிறுக்குத்தனம் செய்ய வேண்டுமென்று மனசு பரபரத்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அவனைத் தவிர, அங்கு வேறு யாருமில்லை.<br /> <br /> தன் பையிலிருந்து பேனாவை எடுத்தான். மூடியைத் திறந்து, பேனாவின் கழுத்தைத் திருகினான். கறுப்பு இங்க்கைக் கொஞ்சம் உள்ளங்கையில் கொட்டிக்கொண்டான். <br /> <br /> பின்பு, தன் கையை அழுத்தமாக மூடித் திறந்து, பிசைந்து, உள்ளங்கைப் பகுதி முழுவதிலும் இங்க் பரவிப் படியுமாறு செய்துகொண்டான்.<br /> <br /> பின்னர், இளம் மஞ்சள் டிஸ்டெம்பர் பூசியிருந்த சுவர் அருகே போனான். அதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தன் கைத் தடத்தை இரண்டு இடங்களில் பதித்தான். கறுப்பு மசியில் அவன் கை அச்சாக சுவரில் பதிந்தது.<br /> <br /> இப்போது, நீங்கள் இந்தப் பள்ளிக்குப் புதிதாக வந்திருகும் மாணவர். புதிய மாணவர் மட்டுமா? சுட்டி துப்பறிவாளரும் ஆயிற்றே. உங்கள் அறிவுத்திறன் பற்றி தெரிந்த ஆசிரியர், அந்த வகுப்பின் ஆறு மாணவர்களை சுவர் அருகில் நிறுத்தி இருக்கிறார். <br /> <br /> இதோ… அந்த ஆறு மாணவர்கள். அவர்கள் நின்றிருக்கும் விதத்தை உற்றுப் பாருங்கள். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்.<br /> <br /> 1... 2... 3... 4... 5... 6... இவர்களில் யார் தினேஷ் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?<br /> <br /> விடையைக் கண்டுபிடித்து அந்த எண்ணை விடைக்கான கூப்பனில் எழுதி அனுப்புங்கள்... பரிசை வெல்லுங்கள்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓவியம்: ராமமூர்த்தி</strong></span></p>.<p style="text-align: center;"><strong>கடைசி தேதி: 15.07.2019</strong></p>
<p style="text-align: left;"><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: larger;"><strong>உ</strong></span></span>ங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.<br /> <br /> இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 26ஆம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘வகுப்பறை’ என்கிற தலைப்பில், நான்கு வரியில் கவிதை எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong><span style="font-size: larger;">க</span>றை கரம்... யார் கரம்? </strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>அ</strong></span>ந்த வகுப்பில் உள்ள மாணவர்களில் தினேஷ் மட்டும் ரொம்ப சேட்டைக்காரப் பையன். <br /> <br /> ரப்பர் பல்லியை சக மாணவர்கள் மேல் திடீரெனத் தூக்கிப் போட்டு, அவர்களை அலறவைப்பான். யாராவது புதுசாக நோட்டுப் புத்தகம் வாங்கி வந்திருப்பது தெரிந்தால் போச்சு.<br /> <br /> அதை எடுத்துப் பிரித்து, கைக்கு வந்த பக்கங்களில் பேனாவால் கன்னா பின்னாவென்று கிறுக்கி வைத்துவிட்டு, ஒன்றும் தெரியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிடுவான். <br /> <br /> கோடை விடுமுறை முடிந்து அன்றைக்குதான் பள்ளிக்கூடம் திறந்தது. இடைப்பட்ட லீவு நாள்களில், அந்தப் பள்ளிக்குப் புது டிஸ்டெம்பர் அடித்து, வண்ணமயமாக ஆக்கியிருந்தது பள்ளி நிர்வாகம். வகுப்பறைகள் எல்லாம் புது வண்ணத்தில் ஜொலித்தன.</p>.<p>முதல் நாளில், அந்த வகுப்பறைக்குள் தினேஷ்தான் முதலாவதாக வந்தான். சுவர்கள் அப்பழுக்கு இல்லாமல் புத்தம்புதுசாக டிஸ்டெம்பர் அடித்திருப்பதைக் கண்டதும், ஏதாவது கிறுக்குத்தனம் செய்ய வேண்டுமென்று மனசு பரபரத்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அவனைத் தவிர, அங்கு வேறு யாருமில்லை.<br /> <br /> தன் பையிலிருந்து பேனாவை எடுத்தான். மூடியைத் திறந்து, பேனாவின் கழுத்தைத் திருகினான். கறுப்பு இங்க்கைக் கொஞ்சம் உள்ளங்கையில் கொட்டிக்கொண்டான். <br /> <br /> பின்பு, தன் கையை அழுத்தமாக மூடித் திறந்து, பிசைந்து, உள்ளங்கைப் பகுதி முழுவதிலும் இங்க் பரவிப் படியுமாறு செய்துகொண்டான்.<br /> <br /> பின்னர், இளம் மஞ்சள் டிஸ்டெம்பர் பூசியிருந்த சுவர் அருகே போனான். அதில், அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தன் கைத் தடத்தை இரண்டு இடங்களில் பதித்தான். கறுப்பு மசியில் அவன் கை அச்சாக சுவரில் பதிந்தது.<br /> <br /> இப்போது, நீங்கள் இந்தப் பள்ளிக்குப் புதிதாக வந்திருகும் மாணவர். புதிய மாணவர் மட்டுமா? சுட்டி துப்பறிவாளரும் ஆயிற்றே. உங்கள் அறிவுத்திறன் பற்றி தெரிந்த ஆசிரியர், அந்த வகுப்பின் ஆறு மாணவர்களை சுவர் அருகில் நிறுத்தி இருக்கிறார். <br /> <br /> இதோ… அந்த ஆறு மாணவர்கள். அவர்கள் நின்றிருக்கும் விதத்தை உற்றுப் பாருங்கள். உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள்.<br /> <br /> 1... 2... 3... 4... 5... 6... இவர்களில் யார் தினேஷ் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?<br /> <br /> விடையைக் கண்டுபிடித்து அந்த எண்ணை விடைக்கான கூப்பனில் எழுதி அனுப்புங்கள்... பரிசை வெல்லுங்கள்!</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஓவியம்: ராமமூர்த்தி</strong></span></p>.<p style="text-align: center;"><strong>கடைசி தேதி: 15.07.2019</strong></p>