<p><strong>ராட்டினம்</strong></p><p><strong>கோ</strong>யில் திருவிழாவில் ராட்டினத்தைப் பார்த்து உற்சாகமான தருண், ‘‘அப்பா, ராட்டினத்துல சுத்தலாம்ப்பா’’ என்றான்.</p><p>‘‘நீ போய் சுற்று. இந்தா காசு’’ என்று 20 ரூபாயைக் கொடுத்த அப்பா, அம்மாவுடன் வேறு பொருள்கள் வாங்குவதில் கவனமானார்.</p><p>சற்று நேரத்தில் உற்சாகத்துடன் திரும்பி வந்தான் தருண். ‘‘என்னடா சுத்தினியா... மிச்சம் எங்கே?’’ என்று கேட்டார் அம்மா.</p><p>‘‘சரியா போச்சும்மா’’ என்றான்.</p>.<p>அப்பா திடுக்கிட்டார். ‘‘தருண், அந்தப் பக்கமா கிராஸ் பண்ணி வந்தப்போ, 10 ரூபாய்னு சொல்றது காதுல விழுந்துச்சு. மறந்துட்டு வந்து பொய் சொல்றியா?’’ என்றார்.</p><p>தயங்கிய தருண், ‘‘இ... இல்லேப்பா... ஒரு பையன் தனியா நின்னு ஆசையா பார்த்துட்டிருந்தான். அவனையும் சேர்த்து கூட்டிட்டுப் போனேன்’’ என்றான்.</p><p>‘‘நல்ல விஷயம் செஞ்சிருக்கே... அதுக்கு ஏன் மாத்தி சொல்றே? இந்தா, இன்னொரு முறையும் சுத்தலாம்’’ என்று தட்டிக்கொடுத்தார் அப்பா.</p><p><strong>- இரா.இரமணன், செம்பட்டி</strong></p>.<p><strong>வல்லவன் ஆயுதம்</strong></p><p><strong>‘‘அ</strong>ரவிந்த், நகம் வெட்டச் சொல்லி நேத்தே சொன்னேனில்லே, இன்னும் ஏன் வெட்டலை?’’</p><p>இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கோபமாகக் கேட்டார் அம்மா.</p><p>நான்காம் வகுப்புப் படிக்கும் அரவிந்த், ‘‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு மிஸ் சொல்லியிருக்காங்க. அதான், நகங்களை வெட்டாமல் வெச்சிருக்கேன்’’ என்றான் அரவிந்த்.</p>.<p>அம்மாவுக்குக் குழப்பம், ‘‘அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? யாருடனாவது சண்டை வந்தால், நகத்தால் கீறலாம்னு வெச்சிருக்கியா என்ன...’’ என்றார் பதற்றமாக.</p><p>‘‘இல்லேம்மா... நீ பிஸ்கெட் டப்பாவை டைட்டா மூடி வெச்சுடறே. எனக்கு திறக்கறதுக்குக் கஷ்டமாக இருக்கு. இனிமே நகங்களைப் பயன்படுத்தி ஈஸியா திறக்கலாம்லே’’ என்றான் அரவிந்த்.</p><p>அவன் குறும்பில் சிரித்த அம்மா, ‘‘இனிமே டைட்டா மூடலை. முதல்ல, நகங்களை வெட்டு’’ என்று அரவிந்த் தலையைக் கோதிவிட்டார்.</p><p><strong>- பவன் பிரசாத், சென்னை-117</strong></p>.<p><strong>சக்சஸ் கனவு</strong></p><p><strong>தூ</strong>ங்கி எழுந்ததும் ஓடிவந்த அமுதன், பாட்டியின் கழுத்தை செல்லமாகச் சுற்றிக்கொண்டு, ‘‘பாட்டி... அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்வியே’’ என்றான்.</p><p>‘‘ஆமாம்... அதுக்கு என்ன?’’ என்று கேட்டார் பாட்டி.</p><p>‘‘இன்னிக்கு நீ எனக்கு 10 ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுக்கிற மாதிரி கனவு வந்துச்சு. எப்போ வாங்கித் தரே?’’ என்று கேட்டான்.</p>.<p>‘இன்னிக்கு லீவு நாள்னு தெரிஞ்சு திட்டம் போடறியா’ என்று நினைத்துக்கொண்ட பாட்டி தொடர்ந்தார்...</p><p>‘‘எனக்கும் ஒரு கனவு வந்துச்சே... ஒரேயடியா அவ்வளவு ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுன்னு ஒன்பது ஐஸ்க்ரீம்களைத் திருப்பிக் கொடுத்துட்டேன்’’ என்றார்.</p><p>‘‘ஓகே... என் பிளான் சக்சஸ்! அப்போ, ஒண்ணு வாங்கிக்கொடுங்க’’ என்று துள்ளினான் அமுதன்.</p><p><strong>- வே.சாரா, வேலூர்</strong></p>.<p><strong>வாழ்த்துகள்</strong></p><p><strong>‘த</strong>ந்தையர் தின வாழ்த்துகள் அப்பா’</p><p>‘நன்றி திவ்யா குட்டி’</p><p>‘இந்தாங்க சாக்லேட்!’</p><p>‘வாவ்... தேங்க்யூ!’</p>.<p>‘அப்படியே முத்தமும்’</p><p>‘சூப்பர்... சூப்பர்... இந்தா திவ்யா குட்டி என்னோட முத்தமும் ஐஸ்க்ரீமும்!’</p><p>‘ஹா... ஹா... முத்தத்துக்கு இந்த எமோஜி இல்லேப்பா, இது வரணும்’ என்று வாட்ஸ் அப்பில் மாற்றி அனுப்பினாள் திவ்யா.</p><p><strong>- சி.கார்த்திகேயன், சாத்தூர்</strong></p>
<p><strong>ராட்டினம்</strong></p><p><strong>கோ</strong>யில் திருவிழாவில் ராட்டினத்தைப் பார்த்து உற்சாகமான தருண், ‘‘அப்பா, ராட்டினத்துல சுத்தலாம்ப்பா’’ என்றான்.</p><p>‘‘நீ போய் சுற்று. இந்தா காசு’’ என்று 20 ரூபாயைக் கொடுத்த அப்பா, அம்மாவுடன் வேறு பொருள்கள் வாங்குவதில் கவனமானார்.</p><p>சற்று நேரத்தில் உற்சாகத்துடன் திரும்பி வந்தான் தருண். ‘‘என்னடா சுத்தினியா... மிச்சம் எங்கே?’’ என்று கேட்டார் அம்மா.</p><p>‘‘சரியா போச்சும்மா’’ என்றான்.</p>.<p>அப்பா திடுக்கிட்டார். ‘‘தருண், அந்தப் பக்கமா கிராஸ் பண்ணி வந்தப்போ, 10 ரூபாய்னு சொல்றது காதுல விழுந்துச்சு. மறந்துட்டு வந்து பொய் சொல்றியா?’’ என்றார்.</p><p>தயங்கிய தருண், ‘‘இ... இல்லேப்பா... ஒரு பையன் தனியா நின்னு ஆசையா பார்த்துட்டிருந்தான். அவனையும் சேர்த்து கூட்டிட்டுப் போனேன்’’ என்றான்.</p><p>‘‘நல்ல விஷயம் செஞ்சிருக்கே... அதுக்கு ஏன் மாத்தி சொல்றே? இந்தா, இன்னொரு முறையும் சுத்தலாம்’’ என்று தட்டிக்கொடுத்தார் அப்பா.</p><p><strong>- இரா.இரமணன், செம்பட்டி</strong></p>.<p><strong>வல்லவன் ஆயுதம்</strong></p><p><strong>‘‘அ</strong>ரவிந்த், நகம் வெட்டச் சொல்லி நேத்தே சொன்னேனில்லே, இன்னும் ஏன் வெட்டலை?’’</p><p>இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கோபமாகக் கேட்டார் அம்மா.</p><p>நான்காம் வகுப்புப் படிக்கும் அரவிந்த், ‘‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்னு மிஸ் சொல்லியிருக்காங்க. அதான், நகங்களை வெட்டாமல் வெச்சிருக்கேன்’’ என்றான் அரவிந்த்.</p>.<p>அம்மாவுக்குக் குழப்பம், ‘‘அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? யாருடனாவது சண்டை வந்தால், நகத்தால் கீறலாம்னு வெச்சிருக்கியா என்ன...’’ என்றார் பதற்றமாக.</p><p>‘‘இல்லேம்மா... நீ பிஸ்கெட் டப்பாவை டைட்டா மூடி வெச்சுடறே. எனக்கு திறக்கறதுக்குக் கஷ்டமாக இருக்கு. இனிமே நகங்களைப் பயன்படுத்தி ஈஸியா திறக்கலாம்லே’’ என்றான் அரவிந்த்.</p><p>அவன் குறும்பில் சிரித்த அம்மா, ‘‘இனிமே டைட்டா மூடலை. முதல்ல, நகங்களை வெட்டு’’ என்று அரவிந்த் தலையைக் கோதிவிட்டார்.</p><p><strong>- பவன் பிரசாத், சென்னை-117</strong></p>.<p><strong>சக்சஸ் கனவு</strong></p><p><strong>தூ</strong>ங்கி எழுந்ததும் ஓடிவந்த அமுதன், பாட்டியின் கழுத்தை செல்லமாகச் சுற்றிக்கொண்டு, ‘‘பாட்டி... அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்வியே’’ என்றான்.</p><p>‘‘ஆமாம்... அதுக்கு என்ன?’’ என்று கேட்டார் பாட்டி.</p><p>‘‘இன்னிக்கு நீ எனக்கு 10 ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுக்கிற மாதிரி கனவு வந்துச்சு. எப்போ வாங்கித் தரே?’’ என்று கேட்டான்.</p>.<p>‘இன்னிக்கு லீவு நாள்னு தெரிஞ்சு திட்டம் போடறியா’ என்று நினைத்துக்கொண்ட பாட்டி தொடர்ந்தார்...</p><p>‘‘எனக்கும் ஒரு கனவு வந்துச்சே... ஒரேயடியா அவ்வளவு ஐஸ்கிரீம் சாப்பிடக் கூடாதுன்னு ஒன்பது ஐஸ்க்ரீம்களைத் திருப்பிக் கொடுத்துட்டேன்’’ என்றார்.</p><p>‘‘ஓகே... என் பிளான் சக்சஸ்! அப்போ, ஒண்ணு வாங்கிக்கொடுங்க’’ என்று துள்ளினான் அமுதன்.</p><p><strong>- வே.சாரா, வேலூர்</strong></p>.<p><strong>வாழ்த்துகள்</strong></p><p><strong>‘த</strong>ந்தையர் தின வாழ்த்துகள் அப்பா’</p><p>‘நன்றி திவ்யா குட்டி’</p><p>‘இந்தாங்க சாக்லேட்!’</p><p>‘வாவ்... தேங்க்யூ!’</p>.<p>‘அப்படியே முத்தமும்’</p><p>‘சூப்பர்... சூப்பர்... இந்தா திவ்யா குட்டி என்னோட முத்தமும் ஐஸ்க்ரீமும்!’</p><p>‘ஹா... ஹா... முத்தத்துக்கு இந்த எமோஜி இல்லேப்பா, இது வரணும்’ என்று வாட்ஸ் அப்பில் மாற்றி அனுப்பினாள் திவ்யா.</p><p><strong>- சி.கார்த்திகேயன், சாத்தூர்</strong></p>