
News
நா.சிபிச்சக்கரவர்த்தி, ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
#Throwbackstory
யோகிபாபு (நகைச்சுவை நடிகர்)


#அந்தஒருநாள்
2004-ம் வருஷம் ஜூலை மாசம் ரெண்டாவது வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு கையில் 100 ரூபாய் மட்டும் எடுத்துக்கிட்டு, திருத்தணி முருகன் கோயிலுக்கு மலை ஏறினேன். நைட் முழுக்க மலை மேலேயே இருந்துட்டு, சூரியன் உதிச்சதும் கிளம்பி வந்தேன். நான் மலையில இருந்து இறங்கும்போதே, என் கஷ்டங்கள் மறைஞ்ச மாதிரி இருந்துச்சு. அந்த நாளுக்கு அப்புறம்தான், என் வாழ்க்கையில முன்னேற்றம் வந்தது.

#வேண்டுவது
தலைக்கனம், பந்தா, வாய்க்கொழுப்பு. இதுல எதையுமே எனக்குக் கொடுத்திடாதய்யா கடவுளே!

#நன்றி
என்னைத் திட்டி வளர்த்த அம்மா விசாலாட்சிக்கும், ஊக்கம் கொடுத்த அண்ணன் ராஜாவுக்கும். அப்புறம்... என்னைக் கேலி பண்ணவங்களுக்கும்!