
சைபர் ஸ்பைடர்
twitter.com/BlackLightOfl: ``ஜெயலலிதாவை ஒருசமயத்தில் எதிர்த்துப் பேசினேன்'' -செல்லூர் ராஜு.
உடனே அலாரம் அடிச்சித் தூக்கத்தைக் கலைச்சுவிட்டிருக்குமே!
twitter.com/Mr_Kirukkan: வருஷம்பூராவும் கெத்தா திரியுற கோலிய, ரெண்டு மாசம் தல கவுந்து சுத்தவிடுறதுக்குன்னே இந்த ஐபிஎல்லைக் கண்டுபிடுச்சிருக்காய்ங்க!
ttwitter.com/m3rcel:
அ.தி.மு.க-வோட அறவழிப் போராட்டம்னா என்னண்ணே?
அதாவது தம்பி, உண்ணாவிரதம் இருக்கிறமாதிரி போவோம்... பாதியில வந்திருவோம். ராஜினாமா பண்ற மாதிரி போவோம்... பாதியில வந்திருவோம்!
நீ சொல்றது அரைவழிப் போராட்டம்.
அதான்...அதான்..!


twitter.com/Kannan_Twitz:
நைட்ல துணி துவைக்கிறதுதான் எப்பவுமே பெஸ்ட்!
ஏன்?
அழுக்குத் தெரியாது, சீக்கிரம் வேலை முடிஞ்சுடும்!
twitter.com/CreativeTwitz: என்னப்பா, உண்ணாவிரதப் போராட்டத்துல கூட்டம் எப்டி இருந்துச்சு? மூணு பந்தி முடிஞ்சு நாலாவது பந்தியிலதான் உட்கார இடம் கிடைச்சுதுப்பா!
twitter.com/Thaadikkaran: `இந்த டிரெஸ்ல நீ நல்லா இருக்கேன்'னு சொன்னாப் போதும், `வேற டிரெஸ்ஸே இல்லையா?'னு சொல்லும்வரை அந்த டிரெஸ்ஸை உடுத்துவது டிசைன்!
twitter.com/BoopatyMurugesh: கடையடைப்புப் போராட்டம்னு ஹோட்டலையெல்லாம் மூடி மக்களைச் சாப்பிடவிடாம பண்ண ஸ்டாலின் எங்க.., உண்ணாவிரதப் போராட்டத்தில்கூட எல்லோருக்கும் வயிறாரச் சோறு போட்ட சின்ராசு, எடப்பாடி எங்க?
லாலலலாலா...
twitter.com/sultan_Twitz: ``போராட்டங்களால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை" - தமிழிசை # அது சரி, நீங்க காண்டு ஆகுறீங்கல்ல... அது போதும்!


twitter.com/Kozhiyaar: ஏன் விவசாயிகள் எந்த வளர்ச்சித் திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்க்கிறார்கள்?ஏன்னா, எவ்வளவு வளர்ச்சி வந்தாலும் சோற்றைத்தான் திங்கணும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்!
twitter.com/abuthahir707: ஞாயிற்றுக்கிழமை மட்டும் வழக்கத்துக்கு மாறாக மொபைலுக்கு சார்ஜ் போட வேண்டியுள்ளது.
twitter.com/Kozhiyaar: உங்களுக்கு ஒரு செயலில் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறதெனில், அதைச் சார்ந்த அனைத்துச் செயல்களுமே தவறானவைதான்!
facebook.com/Mano Red : ஒயின் ஷாப் பக்கத்துல ஃபாஸ்ட் ஃபுட் கடை வெச்சுச் செழிப்பா வாழ்ற மாதிரி, ஃபாஸ்ட் ஃபுட் கடை பக்கத்துல மெடிக்கல் ஷாப் வெச்சுச் செழிப்பா வாழ்றானுக!

facebook.com/ Viyan Pradheep : ஸ்டாலின் உடல் எடை கம்மியா இருக்கிறதால் அடிக்கடி தூக்கிட்டுப்போயிடறாங்க. துரைமுருகனைத் தூக்க முடியுமா?
twitter.com/Vinithan_Offl: பேனாவை எழுதிப்பார்த்து வாங்கியவர்களைவிடக் கிறுக்கிப்பார்த்து வாங்கியவர்கள்தான் அதிகம்.
twitter.com/nathanjkamalan: எதையுமே கண்டுக்காமல் இருக்கும்போது மனிதனும் கடவுளாகிறான்!