Published:Updated:

வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!

வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!

வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!
வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!
வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!
வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!
எஸ்.கலீல்ராஜா, படங்கள்:என்.விவேக்
வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!

விஞர் வாலியின் 80-வது பிறந்த நாள் மற்றும் அவர் இயற்றிய 1,000 திரையிசைப்

பாடல்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா அது. நூலை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். விழாத் துளிகள் இங்கே...

'உலக இயக்குநர்' ஷங்கர், 'தேய்வறி யாச் சூரியன்' சூர்யா, 'இசையரசி' பி.சுசீலா என விழாவில் கலந்துகொண்ட சினிமா வி.ஐ.பி-க்களில் பட்டம் இல்லாதவர்களுக்குப் புதிய பட்டங்கள் கொடுத் தார் வாலி!

வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!

மைக் பிடித்த பத்திரிகையாளர் சோ, "வாலிக்கு 80-வது பிறந்த நாள் விழா என்பதால், இங்கே வயசுப் பிரச்னை வந்திருச்சு. சரோஜா தேவி 'எனக்கு என்ன வயசு ஆகுது'ன்னு விசாரிச்சாங்க. நான் மறைக்க விரும்பலை. எனக்கு 76 முடிஞ்சு 77 ரன்னிங்னு சொன்னேன். ஒரு மாதிரியா பார்த்தாங்க. 'ரன்னிங் இல்லம்மா... வாக்கிங்தான்'னு சொன்னேன். ஆனா, இந்த வயசுக் கணக்கு எல்லாம் வாலிக்குக் கிடையாது. வாலியால் ராமாயணமும் எழுத முடியும். முக்காபுலாவும் எழுத முடியும். ஆன்மிகமும் எழுத முடியும். நாத்திகர் களையும் பாராட்ட முடியும். (கமல் பெரிய சிரிப்போடு தான் தோளில் போட்டிருந்த கறுப்புத் துண்டை எடுத்துக் காட்டுகிறார்.) எதை எழுதினாலும், அதில் முழுக்க முழுக்க ஐக்கியமாகிவிடுவார். அதனால்தான் அவரால் தாக்குப் பிடிச்சு நிற்க முடியுது!" என்றார் நட்பின் பெருமிதத்துடன்!

அழைப்பிதழில் பெயர் இல்லாவிட்டாலும் ரஜினியும் வைரமுத்துவும் ஆச்சர்ய வருகை அளித்து, அரங்கை அதிரவைத்தார்கள். வைரமுத்து வாலிக்கு மோதிரம் ஒன்றைப் பரிசாக வழங்கி மைக் பிடித்தார். "இந்த நிகழ்வு தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவரை நிகழ்ந்தது இல்லை. பாபநாசம் சிவனைப் பாராட்ட, தியாகராஜ பாகவதரும் பி.யு.சின்னப்பா வும் சேர்ந்து வந்தது இல்லை. கண்ணதாசனைப் பாராட்ட, எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ஒன்று சேர்ந்தது இல்லை. ஆனால், வாலியைப் பாராட்ட ரஜினியும் கமலும் கை கோத்து வந்திருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவின் நாகரிகமான திருவிழா!" என்று அரங்கத்தை அதிரவைத்தார்!

வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!

மைக் பிடித்த ரஜினி முகத்தில் கலவையான உணர்ச்சிகள். "அண்ணனுக்கு எப்படித்தான் வார்த்தைகள் இவ்வளவு சரளமாகப் பிறக்கு துன்னு எனக்கு எப்பவும் ஆச்சர்யமா இருக்கும். அதிலும் ரெண்டு வெத்தலை போட்டார்னா, குற்றால அருவியின் தடதடப்புதான். 'சந்திரமுகி'க்குப் பாட்டெழுத வெத்தலையும் கையுமா உட்கார்ந்தவர் 'தேவுடா தேவுடா ஏழு மலை தேவுடா'னு பின்னிட்டார். தன் எதிராளி யின் பலத்தில் பாதியை எடுத்துக்குவார் வாலி. நம்ம வாலி அண்ணனுக்கும் அதேதான். எதிராளியின் பலமும் சேர்ந்து ஒன்றரை மடங்கு பிரமாண்டமா நிற்பார். அவரை யாராலும் அடிச்சுக்க முடியாது!"

வாழ்த்துரை வழங்க வந்த கமல்ஹாசன், "இந்த விழாவுக்காக நான் கவிஞன் மாதிரி வேஷம் போட்டு வந்திருக்கேன். வாலி பல வேஷம் போடுவார். சில சமயம் பூ மாதிரி இருப்பார். சில சமயம் கரும்பு மாதிரி இருப்பார். நான் வண்டு. 'அபூர்வ சகோதரர்கள்' படம் பண்ணும்போது பூன்னு நினைச்சு கரும்பைக் கடிச்சிட்டேன். என் பல் உடைஞ்சு போச்சு. 'இன்னும் நல்லா எழுதலாமே'ன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன். அவருக்கு இன்னும்கிற வார்த்தை கேட்கலை. 'என்னது?'ன்னு முறைச்சுப் பார்த்தார். கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டார். அப்புறம் சமாதானப்படுத்தினதும் 'என்னய்யா வேணும்'னு இறங்கி வந்தார். அப்படி அவர் எழுதின பாட்டுதான், 'உன்னை நினைச்சேன்... பாட்டு படிச்சேன்'. என்னை நினைச்சு நொந்துபோய் எழுதி னார்னு நினைக்குறேன். 'போதுமா... நான் புறப்படுறேன்'னு கிளம்பி, அவார்டையும் வாங்கிட்டுப் போயிட்டார். அவர் ஆரம்பத்துல ஒருத்தர்கிட்ட எப்படிப் பழகுகிறாரோ, அப்படியேதான் கடைசி வரை பழகுவார். ஷங்கர் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தப்ப எப்படி மதிச்சுப் பேசுனாரோ, இப்பவும் அப்படித்தான் பழகுவார். இப்பவும் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' கமல்ஹாசனாக வாலி அண்ணன் காலைத் தொட்டு வணங்குகிறேன்!" என்று வாலியின் பாதம் தொட்டு வணங்கி அமர்ந்தார்.

வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!

இறுதியாக ஏற்புரை ஏற்க வந்த வாலி, "வைரமுத்து எனக்கு மோதிரம் போட்டார். எதுக்குத் தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் 'மோதுறோம்... மோதுறோம்'னு எல்லோரும் நினைச்சுட்டு இருக்கீங்களே... அதை ஒழிச்சுக் கட்டத்தான். ரஜினி, கமல் இன்னும் தங்கள் வேர்களை மறக்காத விழுதுகள். அதனால்தான் அவர்களை அசைக்க முடியவில்லை. இன்று எனக்குக் கிடைத்திருக்கும் புகழ், வாழ்க்கை, பணம் எல்லாம் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் போட்ட பிச்சை!" என்று நன்றி மறக்காமல் புகழுரைகளை ஏற்றுக்கொண்டார் வாலி!

வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!
வாலி 1000: சில சமயம் பூ... சில சமயம் கரும்பு!