"நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு இருக்கும் அற்புதமான தொகுப்பு The mahatma and the poet நூல். 1915 முதல் 1941-ல் தாகூர் மறையும் வரை அவருக்கும் காந்திக்கும் இடையிலான கடிதப் பரிமாற்றங்கள் (தந்தி வாசகங்களும் உண்டு), பத்திரிகை விவாதங்கள் ஆகியவற்றின் தொகுப்பு. தேசிய இயக்கம்பற்றிய தாகூரின் கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றைப் புறக்க ணிக்காமல், சிறுமைப்படுத் தாமல் காந்தி தொடர்ந்து பதில் அளிக்கிறார். காந்தி யின் பல வரிகள் கூரிய சிந்தனைகளைக் கவித்துவத்துடன் வெளிப்படுத்து வதாக இருப்பது வியப்பு அளிக்கிறது!"
பாதித்த செய்தி
இந்திரா சௌந்தர்ராஜன், எழுத்தாளர்.
|