Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
மன்மோகன் C/O ஒபாமா!
நானே கேள்வி... நானே பதில்!

"ஜெயலலிதா காங்கிரஸுக்குக் கூட்டணி அழைப்பு விடுத்ததைப்பற்றிய

கேள்விக்கு 'மேலிடம்தான் முடிவு செய்யும்' என்கிறாரே மன்மோகன் சிங், அது என்ன மேலிடம்?"

"மன்மோகனுக்கு மேலிடம் என்றால், ஒருவேளை ஒபாமாவாக இருக்குமோ?"

- ஆ.கபிலன், காயல்பட்டினம்.

"சமீபத்தில் ரசித்த எஸ்.எம்.எஸ்?"

"50 வருடங்களுக்கு முன்பு ஒரு போன் காலுக்கு ஆகும் செலவு

4. ஒரு வடை சாப்பிட ஆகும் செலவோ

1. இப்போது அப்படியே உல்டா. தற்போது ஒரு போன் கால் கட்டணம்

1. ஆனால், வடையின் விலையோ

4. வட போச்சே!"

- எம்.ஹரிஹரன், சென்னை-64.

"தமிழ் சினிமாவில் உடனடியாக தயாரிப்பாளர் ஆக, என்ன வழி?"

"முன்பு எல்லாம் உங்கள் கையில் நிதி இருந்தால் நீங்கள் தயாரிப்பாளர். இப்போது உங்கள் பெயரில் 'நிதி' இருந்தால்தான் நீங்கள் தயாரிப்பாளர்!"

- க.ஞானசேகர், பழநி.

" 'நான் ஒரு போராளி என்று அனைவருக்கும் தெரியும்' என்கிறாரே ராமதாஸ்?"

"உண்மைதானே. மகனுக்கு ஒரே ஒரு ராஜ்ய சபா ஸீட் வாங்க தி.மு.க, அ.தி.மு.க-விடம் எவ்வளவு போராட்டங்களை நடத்தி இருக்கிறார்!"

- தீ.அசோகன், சென்னை-19.

நானே கேள்வி... நானே பதில்!

" 'ஏழைகளால் மட்டும்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும்' என்கிறாரே ராகுல் காந்தி?"

"கரீட்டாத்தானே சொல்லியிருக்காரு. இத்ல உங்களுக்கு இன்னா கொயப்பம்? ஏழைகளால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும் என்பதால்தானே, காங்கிரஸ் அரசு தன் பொருளாதாரக் கொள்கைகள் மூலம் ஏழைகளின் எண்ணிக்கையை அதிகம் ஆக்குகிறது!"

- அதிபன், ஈரோடு.

"அதிகம் புத்திசாலிகள் ஆசிரியர்களா, மாணவர்களா?"

"எப்போதுமே இளைய தலைமுறைதான்! ஒரு பள்ளியில் பிரார்த்தனைக் கூட்டம். கண் களை மூடி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது பள்ளி விதி. பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும், ஆசிரியர் ஒரு மாணவனை மட்டும் அழைத்து, 'எல்லோரும் கண்ணை மூடிக் கிட்டுதான் இருக்கணும்னு தெரியும்ல, நீ ஏன் கண்ணைத் திறந்துக்கிட்டே இருந்தே?' என்று கேட்டார். உடனே மாணவன் கேட்டான், 'அதை எப்படி சார் நீங்க பார்த்தீங்க?' "

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!