ஸ்பெஷல் -1
Published:Updated:

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா
ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா
ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா
ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா
சார்லஸ் , படங்கள்:பொன்.காசிராஜன்
ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா

'நான் சௌம்யா மகாதேவன். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் கல்லூரியில்

மனிதவள மேம் பாடு படிப்பு படித்துக்கொண்டு இருக்கிறேன். 18 வருடங்களாக கர்னாடகஇசை கத்துட்டு இருக்கேன். 2006 சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஸ்பெஷல் ஜூரி அவார்டு ஜெயிச்சிருக்கேன். சினிமாவில் ஒரு பாடல் பாட ஆசை. அதுவும் அந்த வாய்ப்பு ஜி.வி.பிரகாஷ் சார் மியூஸிக்ல அமையணும்கிறது என் கனவு. வாய்ப்பு இருக்கா விகடன்?' - மென்மையாக விகடன் மெயில் பாக்ஸைத் தட்டியது சௌம்யாவின் மெயில்.

உற்சாகமானார் ஜி.வி.பிரகாஷ்குமார். "வாவ்... சர்ப்ரைஸ்! சொன்னா நம்ப மாட்டீங்க. கர்னாடக சங்கீதப் பரிச்சயம் உள்ள ஃப்ரெஷ் டேலன்ட்ஸை நானும் தேடிட்டு இருக்கேன் பாஸ். சௌம்யாவை அழைச்சுட்டு வாங்க. வாய்ஸ் டெஸ்ட்ல தேறிட் டாங்கன்னா, நிச்சயம் என் மியூஸிக்ல அவங்க பாடுவாங்க!"

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா

சௌம்யாவைத் தொடர்புகொண்டு, தகவல் தெரிவித்ததும் எதிர் முனையில் சில நொடி மௌனம். "சார், நிஜமாதான் சொல்றீங்களா... அப்படியே வானத்துல பறக்குற மாதிரி இருக்கு. என் ஃப்ரெண்ட்ஸ் யாரும் சொல்லிக் கலாய்க்கலையே. நான் ஏமாற்றத் தைத் தாங்க மாட்டேன் சார்!" என்று இளகிய குரலில் கேட் டார் சௌம்யா. விளக்கியதும், மகிழ்ச்சியும் உற்சாகமும் கூட்டணி போட்டுக் குதூகலித்தது அவரிடம்.

"இப்போ நான் தோழிகளோடு வயநாடு டூர் வந்து இருக்கேன். உடனே கிளம்பி வந்துடவா?" என்று பரபரத்தார்.

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா

'திருப்தியாக சுற்றுலா முடித்த பிறகு வாருங்கள்!' என்றோம். சுற்றுலா முடிந்து வந்தவரை, ஜி.வி.பிர காஷ் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றோம்.

"சார், 'மதராசபட்டினம்' மியூஸிக் ரிலீஸ் ஆனதில் இருந்து, தினமும் 'பூக்கள் பூக்கும் தருணம்' பாட்டு கேட்டுட்டே இருப்பேன். அந்தப் பாடல் உருவான இடத்தில் இப்போ நானும் பாடப்போறேன்னு நினைச்சாலே... த்ரிலிங்கா இருக்கு" என்று சௌம்யா சிலிர்க்க, "ஹாய் சௌம்யா... வெல்கம் டு மை ஸ்டுடியோ!" என்று சிரித்தார் ஜி.வி.பிரகாஷ்.

அறிமுகப்படலம் இனிதே நிறைவேறியது. "சார்... 'சிக்கு புக்கு... சிக்கு புக்கு ரயிலே' பாட்டுல இருந்தே உங்களை ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். சின்ன வயசுலயே பெரிய ரீச் சார் நீங்க!" என்று சௌம்யா ஆரம்பிக்க... "அட, நான் இன்னும் எதுவுமே சாதிக் கலீங்க. எனக்குப் பிடிச்ச வேலையில் இப்பதான் முதல் அடி எடுத்துவெச்சிருக்கேன்!" என்று அடக் கம் காட்டினார் ஜி.வி.பி.

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா

"ஓ.கே. வாய்ஸ் டெஸ்ட் பண்ணிரலாமா? என்ன பாட்டு பாடப்போறீங்க?" என்று ஜி.வி. மேட்டருக்கு வர... சுறுசுறுப்பா னார் சௌம்யா. "சார், கோச்சுக் காதீங்க... நான் உங்க மியூஸிக்ல வந்த பாட்டு எதுவும் பாடப்போறது இல்லை. ஏன்னா, ஏற்கெனவே அதைப் பாடினவங்களோட குரல் உங்க மனசுல நல்லாப் பதிவாகி இருக்கும். அதனால் நான் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்களும் தியாகராஜர் கீர்த்தனைகளும் பாடுறேன்!" என்றார்.

"பக்கா பிளானோடுதான் வந்தி ருக்கீங்க. ஓ.கே. டேக்!" என்று சிரித் தார் ஜி.வி.பிரகாஷ்.

ஹெட்போன் மாட்டிக்கொண்டு, மைக் முன் சில நொடிகள் கண் மூடி நின்றார் சௌம்யா. 'ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் வயசு' என்று மென்மெலடியில் துவங்கினார். பாதி பாடல் கடந்ததும்... சட்டென்று 'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு' என்று உச்சஸ்தாயிக்குத் தடம் மாறினார். தொடர்ந்து 'வால் பாற வட்டப் பாற', 'எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்' என்று அடுத்த 15 நிமிடங்களுக்குப் பாடிக்கொண்டே இருந்தார் சௌம்யா.

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா

குரலின் ஏற்ற இறக்கங்களைக் கூர்ந்து கவனித்து வந்த ஜி.வி.பிர காஷ் ஒரு கட்டத்தில், 'கர்னாட்டிக்ல ஏதாவது பாடுங்க!" என்றார். தியாகராஜர் கீர்த்தனை ஒன்றை நாசிகா பூஷணி ராகத்தில் பாடத் தொடங்கினார் சௌம்யா. சில நிமிடங்களுக்குப் பிறகு 'போதும்!' என்று ஜி.வி.பிரகாஷ் சைகை செய்தார். ஹெட்போன் கழற்றி விட்டுப் பதற்றம் கலந்த எதிர்பார்ப்புடன் ஜி.வி. பிரகாஷ் முகம் நோக்கினார் சௌம்யா.

"ஸாரி சௌம்யா!" என்று ஜி.வி. கைகளை உயர்த்த, சௌம்யா முகத்தில் சின்ன வாட்டம். தொடர்ந்தார் ஜி.வி.பி.. "நான் சும்மா ஆர் வத்துல வந்திருப்பீங்க. பிரமா தமாப் பாடுவீங்களான்னு எனக்கு சந்தேகமா இருந்துச்சு. ஆனா, எதிர்பார்க்கவே இல்லை. அசத்திட்டீங்க. உங்க குரல் ரொம்ப ஃப்ரெஷ். கேட்க இனிமையாவும் இருக்கு. நீங்க இப்பவே என் டீம்ல சேர்ந்துக்கலாம். கொஞ்ச நாள் நீங்க க்ரூப்ல பாடணும். அடுத்து, சீக்கிரமே சினிமாவில் பாடுவீங்க. பென்னி தயாள், ராகுல் நம்பியார் மாதிரியான பாட கர்கள் இப்படித்தான் வந்தாங்க!" என்ற ஜி.வி-யின் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் சௌம்யாவின் முகத்தில் ஜலதரங்க ரியாக்ஷன்கள். இறுதியில் சின்னதாக ஆனந்தக் கண்ணீரும் எட்டிப்பார்த்தது.

"சார், இன்னிக்கு நடந்த எல்லாமே எனக்குக் கனவு மாதிரி இருக்கு. இப்பவும் என்னால் எதையும் நம்ப முடியலை. கனவிலாவது இப்படி ஒரு விஷயம் நடந் துராதான்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்ப அது நிஜத்திலேயே... தேங்க்யூ சார்... தேங்க்யூ ஸோ மச்!" என்று சௌம்யா நெகிழ,

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா

"உங்க நன்றியை விகடனுக்கு பாஸ் பண்ணுங்க!" என்று சிரித் தார் பிரகாஷ். சினிமா பாடல்களுக்கு ஏற்ற சில பயிற்சிகளுக்குப் பிறகு, வெகு விரைவி லேயே சௌம்யாவைப் பாடவைப்பேன் என்று உறுதி அளித்தார் ஜி.வி.பிரகாஷ்.

தொடர்ந்து காபி பிரேக். சௌம்யாவின் செல்போன் நம்பரைக் கேட்டு வாங்கிக்கொண்டு, "சீக்கிரமே உங்களுக்கு என் எஸ்.எம்.எஸ். வரும். ரெக்கார்டிங்குக்கு வந்துடுங்க. ஆல் தி பெஸ்ட்!" என்று வாழ்த்தி வழி அனுப்பினார் ஜி.வி.பிரகாஷ்.

"சார் ஒரு நிமிஷம்!" எனப் பக்கத்துக் கடைக்கு ஓடிப் போய் கை நிறைய சாக்லேட் களை வாங்கி வந்து தந்தார் சௌம்யா. அது அவ்வளவு இனிப்பு!

ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா
ஆசை : பாட்டுப் பாட வா!:ஜி.வி.பிரகாஷின் இசையில் செளம்யா