ஸ்பெஷல் -1
Published:Updated:

எட்எட்டு!

எட்எட்டு!

எட்எட்டு!
எட்எட்டு!
எட்எட்டு!
விகடன் டீம்
எட்எட்டு!

கலந்துகொண்ட நிகழ்ச்சி

ஜோதிமணி
தேசியப் பொதுச் செயலாளர், இளைஞர் காங்கிரஸ்.

எட்எட்டு!

"டெல்லியில் நடந்துகொண்டு இருக்கும் ஆசிய அளவிலான பெண் கள் மாநாடு. ஆசியாவின் 23 நாடுகளில் இருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் 400 பெண் தலைவர்கள் கலந்துகொண்டு இருக்கும் மாநாடு இது. ஹிலாரி கிளின்டனின் Vital voices என்ற அமைப்புதான் இதை நடத்துகிறது. உலகம் முழுக்கப் பெண்களுக்கான அரசியல், பொருளாதாரச் சுதந்திரம் எப்படி இருக்கிறது, பிரச்னைகள் என்னென்ன என விவாதிக்கிறோம். தேச எல்லைகள் மாறினாலும் பெண்களின் பிரச்னைகள் பல நாடுகளில் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. இவற்றைத் தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் எனப் பலரும் தங்களின் சொந்த அனுபவங்களில் இருந்து உதாரணங்களைச் சொன்னார்கள்!"

படித்த புத்தகம்

தமிழ்நதி, கவிஞர்.

எட்எட்டு!

"அண்மையில் வாசித்தவற்றுள் 'தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வும் கலையும்' புத்தகத்தில் மனம் லயித்தேன். மலையாளத்தில் ஜி.என்.பணிக்கரால் எழுதப்பட்ட இந்நூலை, உத்திரகுமாரன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இதில் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம் மற்றும் தனிப்பட்ட வாழ்வு குறித்து விரிவாகப் பேசப்பட்டு இருக்கிறது. கொடிய வறுமை, காதல்கள், புற உலகில் இருந்து தன்னைச் சுருக்கிக்கொண்டமையினால் உருவாகிய வெறுமை, படைப்பு மனதின் நெருக்கடிகளால் அவருக்குள் நடந்த மனப் போராட்டங்கள்... எல்லாவற்றையும்பற்றி விவரிக்கப்பட்டு இருக்கிறது. இவருடைய ஒவ்வொரு நாவல்கள்பற்றியும் அவை எழுதப்பட்ட பின்னணி பற்றியும்கூட ஆராயப்பட்டு இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கி யின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்களை வாசிக்கும் எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு வ.உ.சி. நூலகம் வெளியிட்டு இருக்கும் இந்நூல் வழிகாட்டியாக இருக்கும்!"

சென்ற இடம்

கார்த்தி, நடிகர்.

எட்எட்டு!

"ஒவ்வொரு படம் ஷூட்டிங் முடிஞ்சதும் அந்த நேரத்துல மனசுக்குப் பிடிச்ச நாட்டுக்குப் பறந்துடுவேன். ஷூட்டிங் டென்ஷன் இல்லாம ஃப்ரீயா, ஜாலியா கொஞ்ச நாள் சுத்துனாதான் அடுத்த படத்துக்கு என்னைத் தயார்ப்படுத்திக்க முடியும். 'நான் மகான் அல்ல' முடிஞ்சதும் க்ரீஸ் போனேன். அவ்வளவு பழமையான நகரம். எந்த விஷயத்தைப் பத்திக்கேட்டாலும் 200 வருஷ வரலாறோடுதான் ஆரம்பிக் கிறாங்க. சன்டோரினி என்ற இடத்தில் தங்கி இருந்தேன். அந்த இடத்தைச் சுற்றி கடலும் மலையும் பார்க்கவே அவ்வளவு பிரமாதமான ஸ்பாட். அங்கே மட்டும் மொத்தம் 25 பீச் இருக்கு. வெள்ளை, சிவப்பு, கறுப்புன்னு ஒவ்வொரு பீச்சும் ஒவ்வொரு நிறத்தில். அடுத்த பயணமும் சன்டோரினிதான்!"

சந்தித்த நபர்

விஜய் ஆண்டனி இசையமைப்பாளர்.

எட்எட்டு!

"நான் அடிக்கடி சந்திப்பவர்தான். போனவாரம்கூடப் பார்த்தேன். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அவரைப் பார்த்து நான் மேலும் ஆச்சர்யம் அடைகிறேன். அவரிடம் இருந்து பணிவையும் அடக்கத்தையும் கற்றுக்கொள்கிறேன். நான் சொல்வது தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை. 'அந்நியன்' பிரமாண்டம் அனுமதித்தவர். 'தசாவதாரம்' பட இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கிசானை அழைத்து வந்தவர். 'வேலாயுதம்' படத் தயாரிப்பாளர். மகா மெகா புராஜெக்ட் களாகப் பண்ணிட்டு இருப்பார். எந்த இடத்திலும் அவரைப் பார்க்க முடியாது. ஆனா, எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பார். எல்லா சமயங்களிலும் சத்தம் இல்லாமல் பின்னால் இருப்பார்!"

பாதித்த சம்பவம்

வண்ணநிலவன், எழுத்தாளர்.

எட்எட்டு!

"ஆர்.சூடாமணி என்னும் எழுத்தாளரை என்னுடைய 15 வயதில் இருந்து படித்து வருகிறேன். மனித உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் அவரது எழுத்து எனக்கு மிகப் பிடிக்கும். உதவியை ஏற்றுக்கொள்வதில் உண்டாகும் மன சங்கடங்களைவைத்து அவர் எழுதிய கதையின் தலைப்பு எனக்கு நினைவில் இல்லை. ஆனால், அந்தக் கதையை எப்போதும் என்னால் மறக்க முடியாது. 'நான்காவது ஆசிரமம்' என்ற அவரது கதை பலராலும் நேசித்து வாசிக்கப் பட்டது. 150-க்கும் மேற்பட்ட சிறுகதை கள், நாடகங்கள், நாவல் என்று எழுதிய சூடாமணி, போதிய அங்கீகாரம் கிடைக்காமலேயே கடந்த வாரம் சென்னையில் காலமானார். திருமணம் செய்துகொள்ளாமல் எழுத்துக்காகவே தன்னை அர்ப்பணித்திருந்த அவரது மரணம் என்னை மிகவும் பாதித்தது!"

வாங்கிய பொருள்

நதியா, நடிகை.

எட்எட்டு!

"நான் ஒரு முஸ்லிம். என் கணவர் இந்து. எப்போதுமே விநாயகர் சதுர்த்தியும் ரம்ஜானும் அடுத்தடுத்த நாட்களில்தான் வரும் என்பதால், எங்கள் வீட்டில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த வருடம் மும்பையில் முதன்முதலாக ரம்ஜானும் விநாயகர் சதுர்த்தியும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டது. குடும்பத்தோடு உற்சாகமாகச் சென்று விநாயகருக்குக் குடை, நகைகள், ஜரிகைவைத்த துணி, ஸ்வீட்ஸ் என்று எக்கச்சக்க பர்ச்சேஸ். அப்படியே எனக்கு ரம்ஜான் டிரெஸ்ஸும். பல வருடங்களுக்குப் பிறகு, மனசு முழுக் கச் சந்தோஷம் நிரப்பிய ஷாப்பிங்!"

கேட்ட இசை

ஹரிணி, பாடகி.

எட்எட்டு!

"நான் ஒரு சாய்பாபா பக்தை. அவர் சம்பந்தமான பக்திப் பாடல்கள் வெளியான உடனே தேடிப் பிடிச்சு வாங்கிடுவேன். சமீபத்தில் பிரபல கஜல் பாடகர் அனுப் ஜலோடா பாடிய சாய்பாபா பக்திப் பாடல்களைக் கேட்டேன். உணர்ச்சிபூர்வமான இசை. அதில் ஒலித்த 'குரு நம்மை அதிகாரம் செய்வது, நம்மிடம் உள்ள உரிமையினால்தான்' என்ற வரிகளை நான் முணுமுணுத் துக்கொண்டே இருக்கிறேன். எனக்கு மிகப் பிடித்த சிந்து பைரவி ராகத்தில் அந்தப் பாடல்கள் அமைந்திருப்பதால், எங்கள் வீட்டில் எப்போதும் அந்தப் பாடல்கள்தான் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன!"

பார்த்த படம்

கே.பாக்யராஜ், இயக்குநர்.

எட்எட்டு!

"சவப் பெட்டியில் இருக்கும் ஹீரோயின் உடல் திடீரெனக் கண் விழிக்கிறது. 'நான் இறக்கவில்லை' என்று அங்கு இருக்கும் மருத்துவரிடம் கூற, 'இறந்த பின் எல்லா ஆத்மாக் களும் இப்படித்தான் அடம்பிடிக்கும்' என்று ஊசி«பாட்டு மயங்கவைக்கிறார். காதலி இறந்ததைக் கேள்விப்பட்டு காதலன் ஓடி வருகிறான். ஆனால், அவனை உள்ளே விட மறுக்கின்றனர். கதவுக்கு வெளியே கேட்கும் காதலனின் குரல், பாதி மயக்கத்தில் இருக்கும் காதலிக்குக் கேட்கிறது. பிறகு, மருத்துவரை ஏமாற்றி காதலனுக்குப் போன் செய்து பேசுகிறாள். ஆனால், யாரோ விளையாடுவதாக நினைத்து இணைப்பைத் துண்டிக்கிறான். க்ளைமாக்ஸில் எவ்வளவு கெஞ்சியும் ஒரு மயக்க ஊசியைப் போட்டு சவப் பெட்டியில்வைத்து குழிக்குள் இறக்கி மண்ணைத் தள்ள ஆரம்பிக்கின்றனர். எல்லோரும் சென்றபின் நள்ளிரவில் கல்லறைக்கு வரும் காதலன் பதற்றத்துடன் தோண்ட ஆரம்பிக்கிறான். உள்ளே ஹீரோயின் பெட்டியைத் தட்டிக்கொண்டு இருக்கிறாள். பெட்டியைத் திறந்ததும் இருவரும் முத்தமிட்டுக் கொள்கின்றனர். ஒரு ஃப்ளாஷ§க்குப் பிறகு, மேஜை மீது படுத்திருந்த ஹீரோ திடீரெனக் கண் விழித்து 'நான் எங்கிருக்கிறேன்?' என்று கேட்க, அதே பழைய மருத்துவர், 'நான்கு மணி நேரத்துக்கு முன்பு உன் காதலியைப் பார்க்க அதிவேகமாக காரை ஓட்டி வந்தபோது விபத்துக்கு உள்ளாகி இறந்துவிட்டாய். இதோ உன் டெத் சர்ட்டிஃபிகேட்!' என்கிறார். காதலன், 'நோ... நான் சாகவில்லை. நான் உயிரோடுதான் இருக்கிறேன்' என்று கத்த, படம் முடிவடைகிறது. 'After Life' என்ற இந்தப் படம் சமீபத்தில் பார்த்ததிலேயே என்னை மிகவும் பாதித்தது!"

எட்எட்டு!
எட்எட்டு!