ஸ்பெஷல் -1
Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

சி.பி.எம். மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணனிடம்...

"தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தான் ஆளும் மேற்கு வங்கத்தில் பெரும்பான்மையான ரேஷன் கடைகளைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டது என்கிறாரே கருணாநிதி?"

"மேற்கு வங்க அரசு குறித்த உச்ச நீதிமன்றத்தின் ஆய்வு அறிக்கையைச் சுட்டிக்காட்டி, முதல்வர் பேசி இருக்கிறார். நீதிமன்றம் கூறியுள்ள விஷயங்களை நிவர்த்தி செய்ய வேண்டியது அந்த அரசின் கடமை. தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை வரைமுறைப்படுத்த கோவிந்தராஜன் கமிஷன் அளித்த பரிந்துரைகளைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதித் தது உயர் நீதிமன்றம். ஆனால், இதுநாள் வரை அந்தத் தடையை நீக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. அதுபற்றி முதல்வரும் ஒரு வார்த்தைகூட கருத்து சொல்லவில்லை. இது, தமிழக அரசு 11 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு எதிராகவும் இருக்கிறதோ என்ற சந்தேகத்தை விதைக்கிறது!"

5 கேள்விகள்

தங்கபாலுவிடம்...

"தமிழக காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்கிறாரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?"

"தமிழக காங்கிரஸின் மாநிலத் தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை நண்பர் இளங்கோவனுக்கு யார், எப்போது கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. மாநிலத் தலைவரை நியமிப்பதற்கும் இதுபற்றி கருத்து சொல்வதற் கும் அன்னை சோனியாவைத் தவிர மற்றவர்களுக்குத் தகுதி இல்லை!"

கொளத்தூர் மணியிடம்...

"இலங்கைத் தமிழர்களுக்காக அதிகம் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான் என்கிறாரே கார்த்தி சிதம்பரம்?"

"1987-ல் உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முதன்மையான அம்சமே 'வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும்' என்பதுதான். ஆனால், அதற்கே காங்கிரஸ் அரசு ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட வில்லை. அமைதிப் படையின் அட்டூழியங்கள், புலிகளுக் குச் செய்த துரோகங்கள், இறுதிப் போரின்போது இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்கி தமிழர்களைக் கொல்ல உதவியது, இதைத்தான் தியாகங்கள் என்கிறாரோ?"

5 கேள்விகள்

ஸ்ரேயாவிடம்...

"திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டதாகச் சொல்கிறார்களே?"

"ஹை... இப்போ இதுதான் டாபிக்கலா? 'எனக்கு கல்யாணம்'கிறது எப்படி வதந்தியோ, அதே மாதிரிதான் எனக்குப் பட வாய்ப்புகள் இல்லைங்கிறதும் வதந்திதான். ஆனா, என் ஃபேமிலி பேட்டிக்காக நீங்க சில வருஷங்கள் காத்திருக்கணும்!"

சுப்பிரமணியன் சாமியிடம்...

"புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் வைகோவை நாடு கடத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?"

"காஞ்சிபுரம் ம.தி.மு.க. மாநாட்டில், 'சுப்பிரமணியன் சாமியின் தலையை வெட்டி இலங்கைக்கு அனுப்ப வேண்டும்' என்று பேசி இருக்கிறார் ஒருவர். அவர்களை நாடு கடத்துவதுதான் சரி!''

5 கேள்விகள்
5 கேள்விகள்