சினிமா
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி.... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
ராமதாஸுக்கும் ஒபாமாவுக்கும் கூட்டு!
நானே கேள்வி... நானே பதில்!

"டைமிங் சென்ஸ்னா என்ன?"

"ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து, பாடகர் யேசுதாஸ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நல்லி குப்பு சாமி, 'யேசுதாஸ் என் ஜவுளிக் கடையின் கஸ்டமர்' என்றார். வைரமுத்து உடனே குறுக்கிட்டு, 'கஸ்ட மரின் கணவர்' என்றார். அரங்கமே சிரிப்பில் ஆர்ப் பரித்தது. இதுதான் பாஸ் டைமிங் சென்ஸ்!"

- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

"கடைசியாக ராமதாஸ் யாருடன்தான் கூட்டணி வைப்பார்?"

"அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தும் வெளியேறியாச்சு. தி.மு.க-வில் இருந்தும் கூட்டணிக்கான க்ரீன் சிக்னல் இல்லை. அவருக்குத் தேவை அன்புமணி மத்திய அமைச்சராவதுதான். அதற்கு ஒப்புக்கொண்டால், பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியுடனோ அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனோகூடக் கூட்டணி வைப்பார்!"

- எஸ்.திருமலை, கோயம்புத்தூர்.

நானே கேள்வி... நானே பதில்!

" 'விரைவில் மதுவிலக்கை நிறைவேற்றுவேன்' என்று கருணாநிதி அறிவித்தார். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா உரையின்போது கருணாநிதி இதனை அறிவிப்பார் என்றும் சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒன்றும் நடப்பதைப்போலத் தெரியவில்லையே?"

"உஷ், 'அடக்கமாக' அரசு கேபிள் டி.வி. செயல்படுவதைப்போல, 'அடக்கமாக' மதுவிலக்கும் அமலுக்கு வந்திருக்கலாம். டோன்ட் டிஸ்டர்ப்!"

- எஸ்.மணிமேகலை, ராமநாதபுரம்.

"இந்தியாவில் விலைவாசி உயர்வு யாரைப் பாதிப்பது இல்லை?"

" 'தீராத பக்கங்கள்' என்ற வலைப்பூவில் மாதவராஜ் என்னும் பதிவர், நாடாளுமன்ற கேன்டீனில் விற்கப்படும் பொருட்களின் விலைப் பட்டியலை வெளியிட்டு இருந்தார். அந்தப் பட்டியல் இதுதான். டீ- ரூ.1. சூப் - ரூ 5.50. பருப்பு - ரூ.1.50. சப்பாத்தி - ரூ.1.00. சாதம் - ரூ.2.00. தோசை - ரூ.4.00. வெஜ் புலாவ் - ரூ.8.00. தக்காளி சாதம்-ரூ.7.00. மீன் குழம்பு-ரூ.13.00. கோழி-ரூ.24.50. இப்போது புரிகிறதா, யாரை விலைவாசி உயர்வு பாதிப்பது இல்லை என்று. பாவம், இந்த விலை வாசியையும்கூடத் தாங்க முடியவில்லை என்றுதான் அவர்களுக்கு இப்போது சம்பளம் உயர்த்தப் பட்டது!"

- எஸ்.நாகவள்ளி, மதுரை.

"ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விஜயகாந்த்துக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்து இருக்கிறாரே?"

"இளங்கோவனின் ராசியே அப்படித்தான். ஆளும் கட்சிக் கூட்டணியில் அவர் கட்சி இருக்கும். அவர் எதிர்க் கட்சிக் கூட்டணியில் இருப்பார். முன்னே அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருந்தபோது, அவர் தி.மு.க \ வுடன் நெருக்கமாக இருந்தார். இப்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்போது எதிர்க் கட்சிகளுடன் நெருக்கமாக இருக்கிறார்!"

- எஸ்.கே.ரித்திகா, சென்னை-91.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!