ஸ்பெஷல் -1
Published:Updated:

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...
ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...
ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...
ப.திருமாவேலன், கார்த்தி, படங்கள்:கே.ராஜசேகரன்
ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...

"எனக்கு இன்னும் நம்ப முடியலைங்க மேடம்... நீங்க எதுக்கும் என் கையில நறுக்குனு

ஒரு தடவை வலிக்கிற மாதிரி கிள்ளுங்களேன்... ப்ளீஸ்!" என்று விஜயலட்சுமி வேண்டுகோள்வைக்க, "அட, என்ன இன்னும் அசட்டுத்தனமா பேசிண்டு... அதான் நாம ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம்ல. இதோ போட்டோஸ்லாம் எடுக்கப்போறாங்க. பக்கத்துல உட்காருங்க! அட, ஏன் இவ்ளோ தள்ளி உட்கார்றீங்க. நல்லா பக்கத்துல வந்து உட்காருங்க. என் கையைக் கெட்டியா புடிச்சுக்குங்க. ஆங்... என் வளையல் குத்துதா... இப்போ நம்புறீங்களா?" என்று உற்சாகமூட்டுகிறார் சுதா ரகுநாதன். 'ஸ்மைல் ப்ளீஸ்' தேவை இல்லாத சந்தோஷமும் ஆனந்தமும் விஜயலட்சுமி குடும்பத்தினரிடம் பிரதிபலிக்க... ஃப்ளாஷ்!

இங்கே ஒரு ஃப்ளாஷ் பேக்!

"எனக்குச் சின்ன வயசில் இருந்தே கர்னாடக சங்கீதம் என்றால் உயிர். சாதகம் எல்லாம் செய்தேன். ஆனால், திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு, இசைபற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், என் கணவர் எனக்குக் கிடைத்த வரம். திருமணத்துக்குப் பிறகு, என்னை இசை சம்பந்தமான படிப்பு படிக்கவைத்து, அதில் இளநிலை பட்டம் பெறவைத்தார். ஆனாலும், எனக்குள் இதுவரை ஒரு நிறைவேறாத ஆசை. கர்னாடக மேடைக் கச்சேரிகளின் சூப்பர் ஸ்டார் சுதா ரகுநாதனுடன் சேர்ந்து, ஒரு கீர்த்தனையாவது பாட வேண்டும். விகடன் நிறைவேற்றிவைக்குமா?' - சேந்தமங்கலம் விஜயலட்சுமி அனுப்பி இருந்த கடிதத்தின் சாராம்சம் இது.

சுதா ரகுநாதனிடம் விவரம் தெரிவித்து அனுமதி கேட்டபோது, "எப்போ விஜயலட்சுமி ஃபேமிலி என்னை வந்து சந்திப்பாங்க?" என்று கேள்வியைப் பதிலாக்கினார். பன்னீர்த் தூவலாக மழை பொழிந்துகொண்டு இருந்த ஒரு காலை வேளையில்... கணவர் வெங்கடேஷ், குழந்தைகள் அஷ்மிதா, கணபதி ஆகியோருடன் சென்னையை அடைந்தார் விஜயலட்சுமி. காலாண்டுத் தேர்வுகளுக்குக் கல்தா கொடுத்து வந்திருந்தார்கள் அஷ்மிதாவும் கணபதியும். குறிப்பிட்ட நேரத்தில் சுதா ரகுநாதன் வீட்டில் விஜயலட்சுமி குடும்பத்தினர் ஆஜர். தனது டிரேட் மார்க் பட்டுப் புடவை, பொன்னகை, முகம் கொள்ளாத புன்னகையுடன் அவர்களை வரவேற்றார் சுதா ரகுநாதன். அறிமுகப்படலங்கள் இனிதே அரங்கேறியது.

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...

சுதா ரகுநாதன் பாடிய பாடல்....

"பசங்களையும் கூட்டிட்டு வந்துட்டீங்க... அவங்களுக்கு மியூஸிக்ல ஆர்வம் உண்டா?" என்று கேட்டார் சுதா ரகுநாதன்.

"என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? விகடன் ஆபீஸ்ல இருந்து போன் வந்ததுமே எனக்கு முன்னாடி குதிச்சுக் கிளம்புனதே அவங்கதான். ரெண்டு பேருமே இப்பப் பாட்டு கத்துட்டு இருக்காங்க. ஓரளவுக்கு பாடக்கூட செய்வாங்க!" என்றார் வெங்கடேஷ்.

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...

"அட, ரொம்ப சந்தோஷம். கண்ணுங்களா எனக்காக ஒரே ஒரு பாட்டுப் பாடுங்க!" என்று சுதா கேட்கவும், சின்னச் சின்ன வெட்கம், தயக்கங்களுக்குப் பிறகு, 'வெண்ணெய்யுண்ட கண்ணனே' என்ற பாட்டை கோரஸாகப் பாடத் துவங்கினார்கள் அஷ்மிதாவும் கணபதியும். முழுதாக ஐந்து நிமிடங்கள் பாடி முடித்த பிறகு கைதட்டிய சுதா, "ஆனா, இன்னும் நீங்க நிறைய சாதகம் பண்ணணும். குரல் உச்சஸ்தாயியிக்குப் போகும்போது ரெண்டு பேருக்கும் சின்ன நடுக்கம் இருக்கு. அதைச் சரிபண்ணிட்டா எல்லாமே பக்கா!" என்று மேலும் சில டிப்ஸ்கள் கொடுத்தார்.

"நீங்க இதுவரை பல மேடைகளில் பாடி இருப்பீங்க. அதுல நீங்க எங்கே பாடினதை ரொம்பவும் பெரிய கௌரவமா நினைக்கிறீங்க?" என்று கேட்டாள் அஷ்மிதா. "இந்திய சுதந்திரப் பொன்விழா சமயம், நாடாளுமன்றத்தில் பாட அழைச்சிருந்தாங்க. என் முதல் கச்சேரியின் அரங்கேற்ற தினத்தைவிட ரொம்பவே பதற்றமா இருந்தேன். நாடாளுமன்ற அவைக்குள் நுழைஞ்சதும் வார்த்தையே வரலை. அஞ்சு நிமிஷம் எனக்குள்ளேயே சின்ன போராட்டம் நடத்தி, இயல்பு நிலைக்குத் திரும்பி திருப்திகரமாகப் பாடினேன். அது மறக்கவே முடியாத அனுபவம்!"

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...

"நீங்க பாடகி ஆகலைன்னா என்னவா ஆகி இருப்பீங்க?" அஷ்மிதாவின் அடுத்த கேள்வி. "சின்ன வயசுல நான் எல்லா பாடத்திலேயும் நல்லா படிப்பேனாம். அப்பவே ஐ.ஏ.எஸ்., ஆகணும்னு சொல்லிட்டு இருப்பேனாம். ஆனா, அம்மா என்னை பாட்டு கிளாஸுக்கு அனுப்ப ஆரம்பிச்சதுல இருந்து மனசு அந்தப் பக்கம் தாவிருச்சு!"

உடனே அஷ்மிதாவை முந்திக்கொண்டு, "உங்களுக்கு எந்தப் பாடம் படிக்க ரொம்பப் பிடிக்கும்?" என்று கேட்டான் கணபதி. "ம்ம்ம்... எல்லாப் பாடங்களும் பிடிக்கும். ஆனா, இங்கிலீஷ் ரொம்பவே பிடிக்கும்!" என்றார் சுதா. உடனே, கணபதி முகத்தில் சின்ன பிரகாசம். "இன்னிக்கு எனக்கு அந்த எக்ஸாம்தான்!" என்றான் குறும்புக் குரலில். "அச்சச்சோ, நீங்க எக்ஸாம்ஸ் விட்டுட்டா வந்திருக்கீங்க... சொல்லியிருந்தா, நாம உங்க எக்ஸாம் முடிஞ்ச பிறகு பார்த்திருக்கலாம்ல!" என்றார் சுதா.

"அதெல்லாம் பரவாயில்லைங்க. நீங்க கொஞ்சம் இடம் கொடுத்தா பேசிட்டே இருக்குங்க வாலுங்க!" என்று சுதாவிடம் சொல்லிவிட்டு, குழந்தைகள் பக்கம் திரும்பி தெலுங்கில் ஏதோ கண்டிப்புடன் கூறினார் விஜயலட்சுமி. உடனே, "ஏன்ட்டி இதி!" என்று சுதாவும் அவர்களுடன் தெலுங்கில் மாட்லாடத் துவங்கினார். பல நிமிடங்கள், பல திசைகளில் தொடர்ந்தது உரையாடல். தனது விதவிதமான 500 கணபதி கலெக்ஷன்களைக் காண்பித்த சுதா தனது பாடல் தொகுப்புகள் அடங்கிய சி.டி., சாக்லேட்கள் என்று பரிசுப் பொருட்கள் வழங்கியும் திக்குமுக்காட வைத்தார்.

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...

"உங்ககூட பாடணும்னு ஆசைப்பட்டாங்க. அது மட்டும்தான் பாக்கி!" என்று நாம் சுதாவிடம் நினைவுபடுத்த, "ஓ... பேஷா! என்ன விஜயா ரெடியா?" என்று சுதா சொல்ல, விஜயலட்சுமி முகத்தில் முத்து முத்தாக வியர்வை.

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...

"நான் ஏதோ விளையாட்டா ஆசைப்பட்டேன். உங்ககூட நான் பாடுறதாவது... நீங்க எங்க குடும்பத்துக்காக ஒரு ஸ்பெஷல் மினி கச்சேரி பண்ணுங்க... அது போதும் எனக்கு!" என்றார் விஜயலட்சுமி. 'ஏன்?' என்பதுபோல கண்களாலேயே விசாரித்த சுதா... பிறகு, கனிவாகச் சிரித்துவிட்டு, சின்ன செருமலுடன் கண்களை மூடிக்கொண்டார்.

"குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா..." என்று சுதா ரகுநாதன் பாடத் துவங்க 15 நிமிடங்களுக்கு அறை எங்கும் இசைப் பிரவாகம்!

(ஃப்ளாஷ்பேக் இங்கே நிறைவுற, இதன் பிறகான விஜயலட்சுமியின் நெகிழ்வும் மகிழ்வும்தான் கட்டுரையின் ஆரம்ப வரிகள்!)

ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...
ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...
ஆசை: சுதா ரகுநாதனுடன் சரிகமபதநி...