"சென்னிமலையில ஒரு துணிக்கடைக்குப் போயிருக்காரு எங்க ஊரு பார்ட்டி ஒருத்தர். கடை வாசல்ல சைக்கிளை நிறுத்திட்டு உள்ளே போயிருக்காரு. வாசல்ல நின்ன சைக்கிள்ல கீரை இருந்திருக்கு. இவர் கடைக்குள்ள இருந்தாலும், பார்வை முழுக்க வெளியேஇருந்த கீரைக் கட்டு மேலயே இருந்திருக்கு. திடீர்னு ஒரு மாடு வந்து கீரையைத் திங்கவும்,இவர் பதற்றப்பட்டு ஓடியாந்து இருக்காரு. ஓடியாந்த வேகத்துல, துணிக் கடை கண்ணாடிக் கதவுல மோதி, மூஞ்சி பூரா ரத்தம்... கண்ணாடி வேற உடைஞ்சுபோச்சாம். கடைக்காரரு காச்மூச்சுனு கத்த, 'கீரையும்போச்சு, ரத்தமும்போச்சு, எல்லாத்துக்கும் உன் கடை கண்ணாடிதான் காரணம்'னு இவர் கத்த... ஒரே பிரச்னை. கடைசியில கடைக்காரர்கிட்ட காசு வாங்கிட்டுதான் வந்திருக்காரு நம்ம ஆளு. எப்படிப் பாருங்க எங்க ஊரு ஆளுங்க!"
வாங்கிய பொருள்
பூஜா, நடிகை.
|