ஸ்பெஷல் -1
Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
டாக்டர்ர்ர்!
நானே கேள்வி... நானே பதில்!

"சுயநலவாதியின் அடையாளம் என்ன?"

"அவன், 'உன் வீட்டுக்கு நான் வந்தால் நீ என்ன கொடுப்பாய்? என் வீட்டுக்கு நீ வந்தால் என்ன கொண்டு வருவாய்?' என்று கேட்பவனாக இருப்பான்!"

\ கி.மனோகரன், பொள்ளாச்சி.

"இந்தியாவில் சினிமா, சிற்பம், ஓவியம், இலக்கியம் எல்லாமும் வியாபாரமயமாகி வருகிறதே?"

"ஜப்பான் சென்று வந்த எழுத்தாளர் ஒருவர் இப்படி எழுதி இருந்தார்-'வியாபாரம்கூட கலையம்சமாக உள்ளது ஜப்பானில். கலைகூட வியாபாரமாகிவிட்டது இந்தியாவில்!' அட்சர சுத்த வரிகள் இவை!"

\ ஜி.மாலா கோபாலன், திருவாரூர்.

"பிரம்மச்சாரி, சம்சாரி என்ன வித்தியாசம்?"

"எல்லா பெண்களும் அழகிகள் என்று நினைப்பவன் பிரம்மச்சாரி. 'தன் மனைவியைத் தவிர' என்று நினைப்பவன் சம்சாரி!"

- ஜி.கே.நிதி, வந்தவாசி.

"திருப்பதியில் 15 ஆண்டுகளாக போலி லட்டு தயாரித்து விற்றார்களாமே... இத்தனை வருடங்களாகவா யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை?"

"ஒருவேளை லட்டை சதுரமாகவோ, காரமாகவோ செய்து விற்றிருந்தால் உடனடியாகக் கண்டுபிடித்து இருப்பார்களோ?"

- ஏ.எஸ்.யோகானந்தம், கோபி.

"துன்பம், துயரங்களின்போது 'எனக்கு மட்டும் ஏன் இப்படி' என்று மனம் சஞ்சலத்தில் மேலும் சோர்வுறுகிறதே?"

நானே கேள்வி... நானே பதில்!

"ஆர்தர் ஆஷ் அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீரர். 1983-ம் ஆண்டு அவருக்கு நடந்த ஒரு அறுவை சிகிச்சையின்போது, தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால், ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளானார். எய்ட்ஸ் நோயின் வீரியத்தால் அவர் உடல், நாளுக்கு நாள் மோசமாகி உருக்குலைந்துகொண்டு இருந்தது. அந்த நிலையில், ஆஷைப் பார்த்த அவரது ரசிகர் ஒருவர், 'உங்களை ஏன் கடவுள் இப்படிச் சோதிக்க வேண்டும்?' என்றார். மெல்லிய புன்னகை இதழ்களில் தவழ ஆர்தர் ஆஷ் இப்படிச் சொன்னாராம், 'உலகில் 5 கோடி மக்கள் டென்னிஸ் போட்டியை ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். அதில் 5 லட்சம் பேர் புரொஃபஷனல் வீரர்கள் ஆகிறார்கள். 50 ஆயிரம் பேர் முக்கிய கட்டங்களுக்கு முன்னேறுகிறார்கள். அவற்றுள் 5 ஆயிரம் பேர் கிராண்ட் ஸ்லாம் விளையாடத் தகுதி பெறுகிறார்கள். 50 பேர்தான் அதில் விம்பிள்டன் வரை வருகின்றனர். 4 பேர் செமி பைனல், 2 பேர் பைனல், இறுதியில் ஒரே ஒரு ஆள் விம்பிள்டன் பட்டத்தை வெல்கிறார். என் கையில் விம்பிள்டன் பட்டம் இருந்தபோது 'இது கடவுளால் அளிக்கப்பட்டது!' என்று நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டதைப்போல இதையும் ஏற்றுக்கொள்கிறேன்!"

- எஸ்.சபைனா பானு, காசியாபாத்.

"டாக்டர் ராமதாஸ் ஆட்சிக்கு வந்தால் உண்மையிலேயே மதுவை ஒழித்துவிடுவாரா?"

"சமீபத்தில் நாளிதழில் வந்த செய்தி ஒன்று. ஈரோடு மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன், தன் நண்பர்களோடு ஒரு பாரில் குடித்துக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த வேறு குழுவினருடன் சரவணனின் நண்பர்களுக்கு மோதல் ஏற்பட, இறுதியில் சரவணனை வீச்சரிவாளால் வெட்டிச் சாய்த்துவிட்டனர். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? இறந்துபோன சரவணன், ஈரோடு மாநகர பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர். ஆங்... என்ன கேட்டீர்கள்?"

- ஆ.நகுலன், திண்டுக்கல்.

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!