Published:Updated:

பெட்ரோல் தலைவாங்கும் விலை!

பெட்ரோல் தலைவாங்கும் விலை!


பெட்ரோல் தலை வாங்கும் விலை!
பெட்ரோல் தலைவாங்கும் விலை!
பெட்ரோல் தலைவாங்கும் விலை!
ப.திருமாவேலன்,ந.வினோத்குமார்
பெட்ரோல் தலைவாங்கும் விலை!

ரு லிட்டர் பெட்ரோலின் விலை

(இந்திய மதிப்பில்)
பாகிஸ்தான் - 36 ரூபாய்
பங்களாதேஷ் - 32 ரூபாய்
க்யூபா - 19 ரூபாய்
நேபாளம் - 34 ரூபாய்
பர்மா - 30 ரூபாய்
ஆப்கானிஸ்தான் - 36 ரூபாய்
கதார் - 30 ரூபாய்
இந்தியாவில் மட்டும் ஏன் 53 ரூபாய்?
- என்று கேட்கிறது ஒரு எஸ்.எம்.எஸ்!

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை 16.50 ரூபாய்

மத்திய வரி 11.80, எக்ஸைஸ் டூட்டி 9.75, மாநில அரசு வரி 8 ரூபாய், வாட் மற்றும் செஸ் வரி 4 ரூபாய், ஆக மொத்தம் 50.05 ரூபாய்தான். அப்புறம் ஏன் 53 வசூலிக்கிறீர்கள்?

- என்று கேட்கிறது இன்னொரு எஸ்.எம்.எஸ்.

பெட்ரோல் தலைவாங்கும் விலை!

பெட்ரோலியப் பொருட்கள் சென்னையில் ஒரு விலை. நெல்லையில் ஒரு விலை என்று ஊருக்கு ஊர் வெவ்வேறு விலையில் இருக்கிறது. மொத்தத்தில், பெட்ரோலைவைத்துப் பெரிய அளவில் ஜெகஜால வேலைகள் நடப்பதாகவே உணர வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் அரசாங்கம் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற இந்த ஓர் ஆண்டு காலத்தில் மூன்றாவது முறையாக விலை உயர்வு. 'மக்கள் இதைத் தாங்கிக்கொள்வார் கள்' என்று அவராகவே அறிவித்துவிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். 'இது பொதுமக்களுக்கு ஓரளவுதான்

சிரமம்' என்கிறார் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா. பொதுமக்கள் பாவம் என்ன செய்வார்கள்? பெட்ரோல் பங்க்கில் பைப் பிடிக்கும் பையனிடம் கோபப்பட்டபடி மீட்டரைப் பார்த்து முறைக்கிறார்கள். எதிர்க் கட்சிகள் தங்களது வலிமையைக் காட்ட பந்த் நடத்துகின்றன. "யார் என்ன சொன்னாலும், அதுபற்றிக் கவலை இல்லை. விலையைக் குறைக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உயர்த்தப்பட்டது இனி இறங்காது. 'இரண்டு வாரத்தில் மறுபடியும் உயர்த்தப்போகிறார்கள்' என்ற அச்சுறுத்தலை மறுப்பதற்கும் ஆள் இல்லை.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு என்று அத்தியாவசியமானவை அனைத்தையும் ஒரு சேர உயர்த்தியிருக்கிறார்கள். 'உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தினோம்' என்று இதுவரை காரணம் சொன்னார்கள். இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக, 'பெட்ரோலிய நிறுவனங்களின் கடும் நஷ்டத்தைச் சரிகட்ட விலையை உயர்த்தினோம்' என்கிறார்கள். எப்படியாவது விலையை உயர்த்துவது மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது. "முடிந்தால், மாநில அரசாங்கம் தனது வரியைத் தள்ளுபடி செய்து விலையைக் குறைக்க முயற்சிக்கலாம்" என்று அமைச்சர் முரளி தியோரா சொல்ல... மறுத்துவிட்டார் முதல்வர் கருணாநிதி. "அப்படி நாங்கள் செய்தால், மாநில அரசாங்கத்தின் வருவாய் ஆதாரம் குறைந்து, நிதி நெருக்கடி ஏற்படும்" என்கிறார்.

பெட்ரோல் தலைவாங்கும் விலை!

பெட்ரோல் விலை 3 ரூபாய்தான் கூடுகிறது. ஆனால், அதைச் சொல்லி 300 பேர் தங்களது பொருட்களின் விலைகளை உயர்த்துகிறார்கள். லாரி வாடகை கூடும், சரக்குக் கட்டணம் அதிகரிக்கும், வேன் வாடகை கூடும், போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கும், காய்கறி விலை எகிறும், ஆட்டோக்காரர்கள் தங்களது கட்டணத்தைக் கூட்டுகிறார்கள். இதைவைத்துப் பார்த்தால் 3 ரூபாய் பெட்ரோல் கூடும்போது, மத்தியதர வர்க்கத்து மனிதன் கூடுதலாக 100 ரூபாயை அழ வேண்டி இருக்கிறது. மெத்தப் படித்த பொருளாதார மேதைகளின் மூளைக்கு இதெல்லாம் தெரியும். இருந்தாலும், "மிகவும் இக்கட்டான சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதை மக்கள் உணர்ந்துகொள்வார்கள்" என்று விளக்கம் அளிக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

மிகமிக அத்தியாவசியமான பொருட்களின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருப்பதைத் தவிர்க்க வேறு வழி இல்லையா?

"விற்பனை வரி, கலால் வரி, சுங்க வரி போன்றவற்றைச் சரிசெய்தாலே, இந்த பெட்ரோலிய விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அப்படிச் செய்வதன் மூலம் வருமானம் குறையும்" என்று சொல்லும் பங்குச் சந்தை நிபுணர் நாகப்பன், "இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் சந்தை விலையைவிடக் குறைவாகத்தான் பெட்ரோலியப் பொருட்களை வழங்குகின்றன. இதனால், அந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதைச் சரிகட்ட, அரசு அவர்களுக்கு இழப்பீடு செய்யும் வகையில், மானியங்கள் வழங்குகிறது. இதுவும் ஒரு வகையில் அரசுக்கு நஷ்டம்தான். தற்போது பெட்ரோலியப் பொருட்களுக்கு விலையை உயர்த்தியிருப்பதன் மூலம் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானியங்கள் குறையும். சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு 35 ரூபாய் அதிகரித்து இருப்பதும், போக்குவரத்துச் செலவுகள் கூட இருப்பதும் மத்தியதர வர்க்கத்துக்கான இழப்புகள். அதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும். வட்டி விகிதம், பணவீக்கம் போன்றவையும் அதிகரிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், இதை தாங்கித்தான் ஆக வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இந்த விலை உயர்வுகள் மூலம் அரசு மக்களிடம் இருந்து அதிகப் பணத்தை வாங்குவது தப்பா, இல்லையா என்பதைவிட, அப்படி வாங்கிய பணத்தைக்கொண்டு மக்களுக்கு நல்லது செய்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம்" என்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் சி.ஐ.டி.யூ-வின் பொதுச் செயலாளருமான சௌந்தரராஜனிடம் கேட்டபோது, "இந்த விலை உயர்வு எல்லா மக்களையும் பாதிக்கக்கூடியது. உணவுப் பொருட்களின் பண வீக்கம் 17 சதவிகிதமாகவும், பொதுவான பண வீக்கம் 13 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது. 'மானியம் தருகிறோம். அதனால் நஷ்டம் ஏற்படுகிறது' என்று இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம் சொல்கிறது அரசு. ஆனால், அது முற்றிலும் தவறு. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 56.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் சுமார் 28.50 ரூபாய் ஆயில் கார்ப்பரேஷனுக்குச் செல்கிறது. பாக்கி வரி என்ற பெயரில் மத்திய மாநில அரசுகளுக்குச் செல்கிறது. மக்கள் பயன்படுத்தும் இந்த அத்தியாவசியமான பொருட்களுக்கு ஆடம்பரப் பொருட்களைப்போல விலையை உயர்த்தி இருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதத்தில் 3 ரூபாய் உயர்த்தினார்கள். அது முழுக்க முழுக்க அரசுக்கு

பெட்ரோல் தலைவாங்கும் விலை!

மட்டுமே சென்றது. ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லவில்லை. வரியைக் குறைத்தால், மானியப் பிரச்னை வராது. கச்சா எண்ணெய் சுத்திகரிக் கப்படுவதன் மூலம் சுமார் 110 உபரிப் பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டுவிட்டு. இந்த நான்கு பொருட்களுக்கு மட்டும் விலையை உயர்த்தியிருப்பது ஏன்? சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் 82 டாலர்கள் விற்கப்படுகின்றன. அதேபோல உள்நாட்டுப் பெட்ரோலிய நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையின் விலைக்கே விற்போம் என்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால், அவர்களின் அடக்க விலையான ஒரு பேரல் 40 டாலருக்குத்தான் விற்க வேண்டும். இந்த விலை உயர்வு மக்களின் வாங்கும் சக்தியைச் சிதைத்துவிட்டது. இதனால், பொருளா தாரம் வீழ்ச்சி அடையுமே தவிர, வளர்ச்சி அடையாது" என்கிறார்.

"பொதுத் துறை நிறுவனத்தைக் காப்பாற்றவே இப்படி யோசித்தோம்" என்கிறார் பிரதமர். எப்போது மக்களைக் காப்பாற்ற யோசிப்பார்களோ!

பெட்ரோல் தலைவாங்கும் விலை!
பெட்ரோல் தலைவாங்கும் விலை!