Published:Updated:

பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!

பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!


பதுங்கு குழிக்குள் ஓரு தானியம்!
பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!
பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!
ப.திருமாவேலன்
படங்கள்:ஆ.முத்துக்குமார்,ராஜா
பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!

மேடையில் ஒரு கோமாளி வருகிறான்...

"எங்கள் தேசத்தில் மலர்கள் இல்லை. போரினால் அதைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். எம் பெண்களுக்காக நூற்றாண்டின் திசைகள் எங்கும் அவை காத்திருக்கும்!"

அடுத்த கோமாளி வருகிறான்...

"எங்கள் ஊரில் பறவைகள் இல்லை. வண்ணத்துப்பூச்சிகளின், வண்டு இனங்களின் பாடல்களும் இல்லை. பாதைகள் குழம்பிய பிரதேசங்களில் இருந்து அவை திரும்பவே இல்லை!"

மூன்றாவது கோமாளி வருகிறான்...

"ஊர் ஊராகத் தேடி வருகிறோம். தேடியதைப் பெறுவதற்காக அலைகிறோம். கண்ணீரால் எழுதப்பட்ட சங்கீதத்தைச் சுமந்து வருகிறோம்!"

பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!

அடுத்து, பழைய துணிகளை மூட்டைகளாகச் சுமந்தபடி வருபவனும் கோமாளிதான். "ஊர் ஊராகப் போய் அழுக்குத் துணி எல்லாம் தூக்கிட்டு வர்றேன். எங்க கதையைக் கேட்க வர்றவங்கள் எல்லாம் அழுவாங்களே... அந்தக் கண்ணீரைத் துடைக்க இந்தத் துணியெல்லாம் கொடுப்பேன்!"

"இதோ எங்களிடம் ஒரு தானியம் உண்டு. ஒற்றை வைக்கோலும் உண்டு. தானியத்தை விதைக்க ஒரு நிலத்தை யாராவது காட்டுங்களேன். வயல்களின் திசைகளைக் காட்டுங்களேன்" என்று ஒருகோமாளி கெஞ்ச...

"தானியத்துக்குள் போராளிகள் வாழ்ந்ததாகஒரு பழங்கதை உண்டு. அதைப் பார்த்துப் பயந்தஎதிரா ளிகள், எங்கள் தானியங்கள் அனைத்தையும் கள வாடிப்போனார்கள். இந்த ஒரு தானியம் இன்றி, வேறு தானியம் எங்களுக்கு இல்லை. இதை விதைக்க நிலம் தாருங்களேன்" என்று அடுத்த கோமாளி அலறித் துடிக்க...

அழுகையை அடக்கி... நாக்கை மடக்கி... தானியத்துக்கு ஒரு கோமாளி சல்யூட் வைக்கிறான்."ஒரு நாள் இந்தத் தானியத்தை நாங்கள் விதைப்போம். அது வயலாகி நிரம்பி வழியும். அதை உலகம் எங்கும் விதைப்போம்" நம்பிக்கையுடன் முடிகிறது முருக பூபதியின் 'மிருக விதூஷகம்' நாடகம்!

நவீன நாடக உலகில், முருக பூபதி முக்கியமான வர். 'மரண வீட்டின் குறிப்புகள்', 'குற்றம்பற்றிய உடல்', 'வனத்தாதி' என்று அவரது நாடகங்கள் நவீன ஆட்களால் அதிகம் கவனிக்கப்பட்டவை. சிறுவர்களுக்காக அவர் தயாரித்துள்ள 34 நாடகங் கள் தென் மாவட்டங்களின் பல பள்ளிகளில் அரங்கேறியவை. பொதுவாக, எல்லாவற்றையும் புனைவுகளாகவே சொல்லிப்போகும் அவர், மிகப் பெரிய அரசியலை முன்வைத்து இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

"இன்றைய போர்ச் சூழல் இப்படி ஒரு நாடகத்தைத் தயாரிக்கவைத்தது. கூப்பிடு தூரத்தில் நம்மு டைய இனக் குழுவைக் கருவறுக்கும் போர் நடந்து கொண்டு இருந்தபோது, அதை கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதுபோலத்தான் நாம் பார்த்தோம். மனிதம் மரத்துப்போகும். அதைவிடத் தடித்தும் போனது நமக்கு. ஆனால், அந்த மக்களுக்கோ நிலம்என்ற ஒன்றே இல்லை. அவை முன்பு பதுங்கு குழிகளாக இருந்தன. இன்று மரணக் குழிகளாக மாறின. அந்த நிலத்தில் எதை விதைப்பது என்பதற்கான கேள்வி தான் இந்த நாடகம்.

பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!

யார் சொல்லியும் இங்குள்ள மக்களுக்கு இது உறைக்கவில்லை. அப்படியானால், யார் சொன்னால் இவர்கள் கேட்பார்கள்? நம்முடைய பாரம்பரியத்தில் புராண காலம் தொடங்கி, இன்றைக்கு வரை மக்களை வசியப்படுத்தி வரும் ஓர் இனம் இருக்கிறது.அதுதான் கோமாளிகளின் இனம். புராணக் கதையோ, சமூகக் கதையோ, எதில் நடித்தாலும் அன்றைய யதார்த்தத்தை வசனங்களாகச் சொல்லிவிட்டு ஓடிவிடுபவர்கள் கோமாளிகள். அவர்களுக்கும் போர்ச் சூழலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. போர் என்ற ஒன்று நடப்பதே ஓர் இனத்தைக் கருவறுப் பதற்குத்தான். கோமாளி இனத்துக்குக் கொடி வழி உறவே கிடையாது. அப்பன் யாரு, ஆத்தா யாரு என்று எந்தக் கோமாளிக்கும் தெரியாது. அந்தக் கோமாளிகளைத் தேடிப் பிடித்து அவர்களுடன் நான் ஓர் ஆண்டு வாழ்ந்தேன். கருவாடு விற்கிறார், ஆடு மேய்க்கிறார், விளக்குமாறு செய்கிறார் என்று கோமாளிகள் தனித்து அலைகிறார்கள். அவர்கள் மூலமாக மக்களுக்கு விஷயத்தைச் சொல்லி வருகி றோம்" என்ற முருக பூபதி,

"எல்லாம் முடிந்துவிட்டது, அனைத்தும் அழிக்கப்பட்டது என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. அழிக்கப்பட்ட இடத்தில் ஒரு புல் இருக்கும். பூண்டு இருக்கும். அது முளைக்கும் என்பது கற்பனையும் அல்ல... இயற்கை. அந்த இயற்கையை யாராலும் அழிக்க முடியாது என்பதைச் சொல்லவே இந்த நாடகம் பயன்பட்டு இருக்கிறது. 'சமகால வரலாற் றைப் பிரசார நெடி இல்லாமல் செய்ய முடிந்தது ஆச்சர்யமானது' என்று இந்திரா பார்த்தசாரதி சொன்னார். இதில் நடித்தவர்கள் குறித்து அதிகமாக வியந்து சொன்னார் ந.முத்துசாமி. இந்த மண்ணில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கலைஞர்களைவைத்து இந்த மண்ணுக்கான விடியலை நோக்கி நகர்த்தப்படு கிறது இந்த நாடகம்" என்று முடிக்கிறார்.

கோமாளி வருகிறான்...

"நான் பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்து விட்டு வந்தேன். அது வளர்ந்து தானியங்களின்கூட்ட மாக வருமா? பூமிக்குள் பாடுவோரை அழைத்து வருமா?"

அடுத்தவன் கேள்வியும் அதே மாதிரி இருக்கிறது...

"எம் பெண்களின் ஈரத்தால், மூச்சினால்,வளர்க்கப் பட்ட தானியம் அது. கருணையின் நிலம் எங்கே? நீரின் பாதை எங்கே? விளைநிலம் எங்கே?சொல்லுங் களேன்?"

கோமாளிகளின் மூச்சுக் காற்றில் இருந்து கோபத் தீ பற்றுகிறது!

பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!
பதுங்கு குழிக்குள் ஒரு தானியம்!