Published:Updated:

உலகத்தின் மரணக் கிணறு!

உலகத்தின் மரணக் கிணறு!


உலகத்தின் மரணக் கிணறு!
உலகத்தின் மரணக் கிணறு!
உலகத்தின் மரணக் கிணறு!
கி.கார்த்திகேயன்
உலகத்தின் மரணக் கிணறு!

ல்ஃப் ஆஃப் மெக்சிகோ கடல் பகுதியில் இருக்கும் எண்ணெய்க் கிணறு அது.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் (BP) என்ற எண்ணெய் நிறுவனம் Deepwater Horizon என்ற பிரமாண்டமான எண்ணெய் எடுக்கும் இயந்திரம் மூலம் அங்கு எண்ணெய் எடுக்கும் பணியில் இருந்தது.

ஏப்ரல் 20-ம் தேதி மதியம் அந்தக் கிணற்றில் இருந்து ஓர் எதிர்பாராத தருணத்தில் அதிவேகத்தில் மீத்தேன் வாயு பீய்ச்சி அடிக்கிறது. அந்த அழுத்தத்துக்கு கடலுக்கு மேலே இருக்கும் இயந்திரத்தின் பிளாட்ஃபாரம் தாண்டியும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிய, அதைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி. திகுதிகுவென எரிந்த தீ, 36 மணி நேரங்கள் கழித்துத் தானாகவே தணிந்து அணைகிறது. நெருப்பின் வீரியம் காரணமாக ஆழ்கடலின் மேல் மையங்கொண்டு இருந்த Deepwater Horizon இயந்திரம் கடலுக்குள் மூழ்குகிறது. ஏப்ரல் 22-ம் தேதி. 'பல லட்சம் டாலர்களும் 11

உலகத்தின் மரணக் கிணறு!

மனித உயிர்களும் இழப்பு! இந்த இழப்பினைத் தாங்கிக்கொண்டு BP நிறுவனம் தளராமல் அந்தப் பகுதியில் எண்ணெய் சேகரிப்பில் ஈடுபடுகிறது. நாட்டின் தேவைகளைப் பூர்த்திசெய்ய எங்கள் பொறுப்பினை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்!' என்று BP நிறுவன அதிகாரிகள் உணர்ச்சிப் பெருக்கோடு சேனல்களுக்குப் பேட்டி தட்டிக்கொண்டு இருந்தார்கள். அப்போது, Deepwater Horizon மூழ்கிய இடத்தில் இருந்து அடர்த்தியாக, கருமையான எண்ணெய் கடல் நீரில் பரவத் தொடங்கியது. மெதுவாக, மிக மிக மெதுவாகக் கடலில் கலக்கத் தொடங்கிய எண்ணெய் சொற்ப நொடிகளில் வேகம் பிடித்து ஆயிரம், மில்லியன், பில்லியன் காலன்கள் என்று வேகம் பிடிக்கத் தொடங்கியது!

அன்று தொடங்கியது... இன்று, இந்த நொடி வரை நாள் ஒன்றுக்கு பில்லியன் காலன்கள் எண்ணெய் கடலில் கலந்துகொண்டே இருக்கிறது. இரண்டு ஆள் இல்லா இயந்திரங்களைக் கடலுக்கு அடியில் அனுப்பி எண்ணெய்க் கசிவினை அடைக்க முயற்சித்தது BP. பல மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு, 'முடியலப்பா... எண்ணெய்க் கசிவின் அடர்த்தி எவ்ளோன்னே தெரியலை!' என்று கைவிரித்தார்கள் கடலுக்கு மேலே கப்பலில் இருந்த ஆபரேட்டர்கள். சூழலின் விபரீதம் அப்போதுதான் சுள்ளென்று உறைத்தது BP அதிகாரிகளுக்கு. நிலைமை கட்டுக்குள்தான் இருக்கிறது என்று உண்மையான தகவல்களை மூடி மறைத்து அறிக்கைகள் அளித்தார்கள். ஆனால், கசிந்த எண்ணெய் பரவுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.

உலகத்தின் மரணக் கிணறு!

கடலில் இருந்து மிசிசிபி நதிப் படுகை வரை பரவியது எண்ணெய். கரை தொடும் அலைகளில் அடர் கருந் திரவத் திட்டுக்கள். மீன்கள், ஆமைகள், பலதரப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்துக் கரை ஒதுங்கத் தொடங்கின. கரையோர மணல் விதவிதமாக நிறம் மாறத் தொடங்கின. ஜூன் மாத ஆரம்பத்தில் கடல் நீரே அடர்த்தியாக எண்ணெய் வடிவில் கரையில் அலையடிக்கத் தொடங்க, அதில் மூழ்கி மீன் பிடிக்க முற்பட்ட மீன் கொத்திப் பறவைகள் சிறகுகளை விரிக்க முடியாமல், மூச்சுத் திணறி ஆங்காங்கே பொத்பொத்தென விழுந்தன. காரணம் கண்டுபிடிக்க, சம்பந்தப்பட்ட இடத்தில் பரிசோதிக்க முயன்ற சுற்றுப்புற ஆர்வலர்களுக்கு அனுமதி மறுத்தது BP நிறுவனம். பத்திரிகையாளர்கள், போட்டோ ஜர்னலிஸ்ட்டுகளுக்கும் தடா. அமெரிக்க காங்கிரஸ் காட்டம் தெரிவிக்கவும்தான் லைவ் வீடியோ காண்பித்தது. அதிர்ந்துவிட்டார்கள் அதிகாரிகள். குற்றாலம் மெயின் அருவிபோலக் கடலின் தரை மட்டத்தில் இருந்து ஒரு அருவி பீய்ச்சி அடித்தால் எப்படி இருக்கும். அந்த வேகத்தில் குபுகுபுவெனக் கசிந்துகொண்டு இருந்தது எண்ணெய்.

உலகத்தின் மரணக் கிணறு!

விஞ்ஞானிகள், 'உலகின் மிகப் பெரிய எண்ணெய்க் கசிவு' என்று பதறு கிறார்கள். விபத்து நிகழ்ந்த ஆழ்கடல் பகுதி முழுக்க 'டெட் ஸோன்' என்று அறிவிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தன் நாட்டின் எல்லைப் பகுதி அருகிலேயே இத்தனை விபரீதங்கள் அரங்கேறிய பிறகும், வாய் மூடி மௌனியாகவே இருந்தது அமெரிக்கா. 'அதிபர் ஒபாமாவே பதவி விலகு!' என்று அமெரிக்க செனட் சபைக்குள் கூக்குரல்கள் ஒலிக்கத் தொடங்க வும்தான், சட்டெனச் சுதாரித்த ஒபாமா, 'இனி மெக்சிகோ கடல் பகுதியில் புதிதாக எண்ணெய் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. தற்போதைய எண்ணெய்க் கசிவின் மொத்த விளைவுகளுக்கும் BP நிறுவனம்தான் பொறுப்பு!' என்று அறிவித்தார். ஆனால், அது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!

விபரீத விளைவுகளை உலகம் கவனிக்கும் முன்னரே, எண்ணெய்க் கசிவைத் தடுத்து நிறுத்த BP நிறுவனம் முடிந்த மட்டும் முயற்சித்தது. கசிவின் ஊற்றுக்கண் மீது ராட்சச மூடிகளைப் பதிக்க மேற்கொண்ட ஆறு முயற்சிகள் தோல்வி. தலா 125 டன் எடைகொண்ட மெகா சிலிண்டர் வடிவ உருளைகளைக் கசிவின் மீது பதித்து அப்படியே எண்ணெயைச் சேகரிக்க முயன்றார்கள். ஆனால், மீத்தேன் வாயு குளிர் நீருடன் கலந்து உருளையின் வாய்ப் பகுதியை அடைத்துக்கொண்டு பெப்பே காட்டியது. பிறகு, 'டாப் கில்' என்று ஒரு முயற்சி மேற்கொண்டார்கள். அதாவது, கசியும் எண்ணெய் மீது மேல்புறத்தில் இருந்து எதிர்வினைத் திரவங்களைப் பீய்ச்சி அடித்து, கசிவைக் கட்டுப்படுத்தி சிமென்ட் பலகைகளால் அடைப்பது. ஆனால், அதுவும் புஸ்ஸ்ஸ்ஸ். இதன் பிறகு, வேறு வழி இல்லாமல் அமெரிக்காவிடம் உதவி கேட்டு இருக்கிறார்கள். அதிபர் ஒபாமாவின் எரிபொருள் சக்தி ஆலோசகர், நைட்ரஜன் குண்டு கண்டுபிடித்தவர் உள்ளிட்ட அமெரிக்க உயர்மட்டக் குழு விஞ்ஞானிகள் வந்து நிலைமையை ஆராய்ந்து, கசிவை அடைக்க மேற் கொண்ட முயற்சிகளை அலசிப்பார்த்தார்கள். வெறுத்துப்போய், 'அட... ஏங்க இவ்வளவு மெனக்கெட்டுக்கிட்டு... பேசாம ரெண்டு அணு குண்டுகளை அந்த இடத்தில் வெடிக்கவெச்சுக் காலி பண்ணிட லாம். எண்ணெயே தீய்ஞ்சுபோயிடும்லா!' என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். BP அதிகாரிகளே மிரண்டுவிட்டார்களாம். 'ஐயோ, அது சரி வராதுங்க. ஏற்கெனவே ட்ரில்லியன் கணக்குல கீழே எண்ணெய் இருக்கலாம். அதுல அணுகுண்டைப் போட்டா நிலைமை இன்னும் ரொம்ப சிக்கலாயிரும். அப்புறம் சமாளிக்கவே முடியாது!' என்று பதறியிருக்கிறார்கள். 'அப்படிங்கிறீங்களா... என்னமோ நீங்க சொல்றீங்க!' என்று அரைகுறையாகச் சமாதானம் ஆகியிருக்கிறார்கள். (உலக மகா ஜனங்களே... நம்புங்க இவ்வளவுதான் ஒபாமா அதிகாரிகளின் புத்திசாலித்தனம்!)

உலகத்தின் மரணக் கிணறு!

ஆளாளுக்கு, ஆள் மாற்றி ஆள் குற்றம் சாட்டிக்கொண்டு இருந்தாலும் எண்ணெய்க் கசிவு இன்னும் குறைந்தபாடு இல்லை. தற்போது வரை கடலின் அடியில் பொதிந்திருக்கும் எண்ணெய் வளத்தைக் கணக்கிடவே முடியவில்லையாம். கடல் பகுதியில் ஆங்காங்கே ஒரு தீவே மிதந்து செல்வதுபோல எண்ணெய்ப் படலம் மிதந்துகொண்டு இருக்கிறது. சராசரியாக ஒவ்வொரு எண்ணெய்ப் படலமும் பத்து மைல் நீளம், மூன்று மைல் அகலம், 600 அடி அடர்த்தியுடன் கடலில் மிதந்துகொண்டு இருக்கின்றன. கடலின் நீரோட்ட மாறுதலுக்கு ஏற்ப உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த எண்ணெய் பயணிக்கத் துவங்கிவிட்டது. அதுவும் நாளுக்கு 100 மைல் வேகத்தில்.

ஒருகட்டத்துக்குப் பிறகு, எண்ணெய்க் கசிவை அடைக்க முடியாமல், சோர்ந்துபோய் கரையோரப் பாதிப்புகளைச் சரி பண்ணக் கிளம்பிவிட்டார்கள்.

பங்குச் சந்தையில் BP நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது. ஒபாமா தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களைச் சமாளிக்கும் பணியில் இறங்கிவிட்டார். உலகின் பிற எண்ணெய் நிறுவனங்கள் இந்த விவகாரத்தைச் சாக்காகவைத்து தமது எண்ணெயின் விலையை ஏற்றத் துவங்கிவிட்டன. கல்ஃப் ஆஃப் மெக்சிகோ பகுதியில் அலெக்ஸ் புயல் வலுக்கத் துவங்கி இருக்கிறது. அந்த மகா மெகா எண்ணெய்த் தீவுகள் உலகம் சுற்றக் கிளம்பிவிட்டன. மெரினா பீச்சில் கடலை கொரித்துக்கொண்டு இருக்கும்போது, அவை உங்கள் கண்களுக்கும் தட்டுப்படலாம்!

உலகத்தின் மரணக் கிணறு!
உலகத்தின் மரணக் கிணறு!