உருகுவே வீரர் சாரஸ்ஸின் கையை 'கடவுளின் கை' என்று கொண்டாடுகிறார்கள் உருகுவே மக்கள். கால் இறுதிப் போட்டியின்போது, கானா அணி வீரர் அடித்த பந்து நேராக கோல்வலைக் குள் விழச் சென்றது. யாராலும் அதனைத் தடுக்க முடியாது என்கிற நிலையில், திடீரெனப் பாய்ந்து வந்த சாரஸ் கையால் பந்தைத் தடுத்தார். அவர் கையால் தடுக்கவில்லை என்றால், அது நிச்சயம் கோல்தான். சாரஸ் கையால் தடுத்ததால் கானாவுக்கு பெனால்ட்டி கிக் வாய்ப்புகொடுக் கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை வீணடித்தார் கானா வீரர். இதன் பிறகு, இரு அணி களுமே கோல் அடிக்காததால் பெனால்ட்டிஷூட் அவுட்டில் 5-3 என கோல் முன்னணியில் வெற்றிபெற்றது உருகுவே அணி. ஆனால், கையால் பந்தைத் தடுத்ததால், சாரஸ§க்கு அடுத்த மூன்று ஆட்டங்கள் விளையாடத் தடை விதித்திருக்கிறது ஃபிஃபா!
|