எழுத்தாளர் பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும், பத்திரிகையாளர் சோ வந்து சந்தித்து அவருக்கு ஆறுதல் சொன்னார். இதை மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இரா.செழியனிடம் சொன்னபோது, "நீங்க கல்லடி வாங்கறதுக்குக் காரணமே சோ தானே. அவர்தானே வந்து உங்களைப் பார்க்கணும்" என்றாராம். துக்ளக்கில் கருப்பையா தொடர்ந்து தி.மு.க-வை விமர்சித்து எழுதி வருவதைக் குறிப்பிட்டு இப்படிச் சொன்னார் செழியன்.
இந்தத் தகவல் சோ கவனத்துக்குப் போனது. "அவரு எழுதுறாரு... டைப் பண்றவரு டைப் பண்றாரு. இதுக்கும் எனக்கும் என்னங்க சம்பந்தம்?" என்று கிண்டல் அடித்தாராம் சோ!
பழைய கம்பீரத்தில் புதிய மேலவை!
|