Published:Updated:

நானே கேள்வி... நானே பதில்!

நானே கேள்வி... நானே பதில்!


நானே கேள்வி நானே பதில்
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
சொல்லாததையும் செய்தவர்கள்!
நானே கேள்வி... நானே பதில்!

"நடைப்பயிற்சி அவ்வளவு அவசியமானதா?"

"காந்தி சொன்ன வாக்கியம்தான் உங்கள் கேள்விக்குப் பதில்...

'உனது ஆரோக்கியம் மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. நீதான் தினமும் நடந்து சென்று அதனை வாங்கி வர வேண்டும்'!"

- எஸ்.கே.ரோஷிணி, சென்னை-91.

"உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய இல.கணேசன், 'இலங்கை உட்பட பிறநாட்டு தமிழர் நலன் காக்க புதிதாக ஓர் அமைச்சரை நியமிக்கலாம்' என்று சொல்லியிருக்கிறாரே?"

"நல்ல யோசனை. இந்த யோசனையைச் செயல்படுத்தினால் கருணாநிதி நிம்மதி அடையலாம். 'இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காணாத கருணாநிதி' என்று வசைபாடும் எதிர்க் கட்சிகளின் கவனம் அந்த அமைச்சர் மீது திரும்பும். 'இலங்கைத் தமிழர் நலனை ஒழுங்காகக் கவனிக்காத அந்த அமைச்சரை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று ஜெயலலிதா அறிக்கைவிடுவார். அதெல்லாம் சரி, அந்த பலி ஆடு யார்?"

- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

நானே கேள்வி... நானே பதில்!

"தவறு செய்வதிலும் பாரபட்சம் உண்டா?"

"நிச்சயமாக. ஒரு மாணவன் தவறு செய்தால், அவனைப் பெஞ்சு மீது நிறுத்திவைப்பார்கள். அதே அரசியல்வாதி தவறு செய்தால்? 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, கடைசியில் விடுதலை செய்யும்!"

- பாலா சரவணன், சென்னை-22.

" 'சொன்னதைச் செய்வோம்' ஓ.கே! ஆனால், 'சொல்லாததையும் செய்வோம்' என்கிறார்களே, அது என்ன?"

"சொன்னதைச் செய்வோம் - மூன்று மணி நேர பவர் கட்.

சொல்லாததைச் செய்வோம் - கூடுதல் பவர்கட்!"

- என்.பழனிவேல், திருச்சி.

"ஒரு 'அடேங்கப்பா' பதில்?"

"1996-ம் ஆண்டு பிரதமராக இருந்தவர் தேவகவுடா. அப்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்துக்காக விமானப் படை விமானங்களைப் பயன்படுத்தி உள்ளார். அதற்காக, விமானப் படைக்கு 54 லட்சம் செலவாகி உள்ளது. இதைப் பலமுறை கேட்டும் தேவகவுடா செலுத்தாததால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது விமானப் படை. இது குறித்து தேவகவுடா சொல்லியிருக்கும் பதில் என்ன தெரியுமா? 'அப்போது நான் ஒன்றிணைந்த ஜனதா தளத்துக்காக தேர்தல் பிரசாரம் செய்தேன். ஆனால், இப்போது ஜனதா தளம் ஐந்து கட்சிகளாகப் பிளவுபட்டுவிட்டது. நான் இப்போது மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர். எனவே, அந்த விமான பாக்கியை நான் செலுத்த மாட்டேன்.' ரூம் போட்டு யோசிப்பாங்களோ?"

- எஸ்.சோபியா, மதுரை.'

நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!
நானே கேள்வி... நானே பதில்!