Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

தா.பாண்டியனிடம்...

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த தா.பாண்டியன் ஒருவரே போதும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?"

"அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குகிற முறை தெரியாது என்பது இதில் இருந்து தெரிகிறது. அப்படிப்பட்டவருக்கு இந்த ஒற்றை வரிப் பதிலே போதுமானது!"

செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ-விடம்...

"காங்கிரஸ் கட்சியில் சேர நீங்கள் போட்ட திட்டத்தை அறிந்துதான் உங்களை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கினார்களா?"

"கடந்த டிசம்பர் மாதமே, பகுஜன் சமாஜ் கட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று அறிவித்துவிட்டேன். என்னைக் கட்சியில் இருந்து விடுவிக்குமாறு, கட்சியின் தேசியச் செயலாளர் மானேவிடம் வலியுறுத்தி வந்தேன். கடந்த சில மாதங்களாகவே கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகித்தான் இருந் தேன். நானாகவே கட்சியில் இருந்து விலகிவிட்ட பிறகு, இப்போது என்னை அந்தக் கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறுவது நல்ல ஜோக்!"

ராதாரவியிடம்...

"இலங்கைக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் செல்கின்றன. கப்பல் படைத் தளபதி செல்கிறார், இந்திய கிரிக்கெட் அணி செல்கிறது. ஆனால், நான் படப்பிடிப்புக்குச் செல்வதில் மட்டும் குற்றம் கண்டுபிடிப்பது ஏன் என்கிறாரே அசின்?"

"அசின் படப்பிடிப்புக்காக இலங்கைக்குச் சென்று வந்தது தொடர்பாக திரைப்படக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து வருவதால் அசின் தொடர்பான முடிவை அறிவிக்காமல் தள்ளி வைத்திருக்கிறோம். அதிரடியான எங்களது முடிவு விரைவில் வெளிவரும்!"

5 கேள்விகள்

நமீதாவிடம்...

"நீங்கள் சமீபத்தில் ராஜபக்ஷேவைச் சந்தித்ததாகக் கூறுகிறார்கள். தற்கொலைக்கு முயன்றதாகவும் ஒரு தகவல். என்னதான் நடக்கிறது?"

"என்ன நடக்கிறது என்று எனக்கும் புரியவில்லை. நான் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்பும்போது, இலங்கைப் பிரச்னையில் சிக்கிக்கொள்வேனா? நான் யாரையும் சந்திக்கவும் இல்லை. நான் தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பு கிளப்பினார்கள். என்னைப்பற்றி இவ்வாறு அவதூறு கிளப்புவதால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை?"

5 கேள்விகள்

சுனேனாவிடம்...

" 'வம்சம்' படப் பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் கண் கலங்கியது ஏன்?"

"நான் ஏற்கெனவே தமிழில் நான்கைந்து படங்களில் நடித்திருந்தாலும் 'வம்சம்'தான் எனக்கு நல்ல நடிகை என்று பெயர் வாங்கித் தரும் என்று காத்திருக்கிறேன். படப்பிடிப்பு நடந்த புதுக்கோட்டையில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்குப் பயங்கர வெயில். ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் சேறும் சகதியும் முட்களும் நிறைந்த குட்டைகள். இதைவிடப் பெரிய விஷயம், படத்தின் வசனங்கள். நாம்தான் இவ்வளவு சிறப்பாக நடித்தோமா என்ற சந்தோஷத்தில்தான் அன்று அழுதுவிட்டேன்!"

5 கேள்விகள்
5 கேள்விகள்