கிராமங்கள் என்றாலே வெள்ளந்தி மனிதர்கள், ஓடோடி வந்து உதவுபவர்கள், அன்பான எளிய மக்கள் என்பதாக பல பத்தாண்டுகளாக உருவாகி நிலைபெற்றிருக்கும் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறது 'முறிமருந்து' நாவல். நவீன வாழ்க்கையில் நகரம், கிராமம் இரண்டின் மனித மனங்களும் குரோதமும், வன்மமும் நிறைந்ததாய் மாற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாய் சுயநலத்தின் திரண்ட வடிவமாக மாறிவிட்ட இன்றைய உறவுக்கூடு எப்படி சிதைந்து கிடக்கிறது என்பதையும், உறவுகளுக்கு இடையே ஏற்படும் வன்மம் வாழவிடாமல் ஊரைவிட்டே துரத்தி அடிப்பதையும் அழுத்திச் சொல்கிற கதை. கிராமத்தின் காதல், காமம் பற்றிய வர்ணனைகளும், உரையாடல்களும் வெளிப்படையும், ரசனையுமானவை. நான்கு பாகங்களாக விரியும் நாவலில் வாசிப்பு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவு என்பதைத் தாண்டி பேசுபொருள் முக்கியமானது!
அரிது அரிது இசை: தமன்.எஸ்
வெளியீடு: 5 ஸ்டார் ஆடியோ விலை ரூ.50
|