நானே கேள்வி... நானே பதில்!
''சமீபத்தில் மனதைத் தைத்த வரிகள்?''
''wikileaks என்ற இணையதளம் இராக் போரின்போது லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதைப்பற்றிய ரகசியத் தகவல் களைத்
- பே.சாக்ரடீஸ், மதுரை.
''தமிழக வளர்ச்சி திருப்தி அளிக்கிறதா?''
''அப்படி எல்லாம் எதுவும் இல்லையே! வெறுமனே இலவச டி.வி., கேஸ் சிலிண்டர் வாங்கினால் போதுமா? 2011 தேர்தலுக்கு இலவச செல்போன், இலவச லேப்டாப் எதிர்பார்த்தால் மட்டும் போதுமா? அதை வழங்குவதற்கு வசதியாக அரசு வருவாயை உயர்த்த வேண்டியது நம் கடமை அல்லவா? தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை `300 கோடி இலக்கு நிர்ணயித்து இருந்தது தமிழக அரசு. ஆனால், வெறுமனே `246 கோடிக்குத்தானே விற்பனை ஆனது. இப்படிப் பொறுப்பு இல்லாமல் இருந்தால் எப்படி? எனவே, இன்று முதல் உறுதி ஏற்போம். வரும் புத்தாண்டுக்காவது டாஸ்மாக் வருவாயை உயர்த்துவோம், இலவச செல்போன் பெறுவோம்!''
- அ.யாழினி பர்வதம், சென்னை-78.

'' 'விலைவாசி உயர்வால் மக்களுக்குப் பாதிப்பு இல்லை’ என்கிறாரே முதல்வர்?''
''முன்பு 'கழகமே குடும்பம்’ என்று இருந்து, இப்போது 'குடும்பமே கழகம்’ என்று ஆனதைப்போல, 'விலைவாசி உயர்வால் தன் வீட்டு மக்களுக்குப் பாதிப்பு இல்லை’ என்ற அர்த்தத்தில் கூறி இருப்பார். 'நாட்டு மக்களுக்கு’ என்று நாம் தவறாகப் புரிந்துகொண்டு விட்டால் அதற்கு அவர் பொறுப்பு இல்லையே. பொறுத்திருந்து பாருங்கள், 'மக்கள் அனைவரும் ஆளுக்கொரு மந்திரி பதவி, சேனலுடன் வசதியாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்’ என்று அடுத்து அறிக்கை விட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!''
- ம.பார்த்தசாரதி, சென்னை-53.
