ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
.ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.500

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

''என் அப்பா, சித்தப்பா இருவருமே சினிமா படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள். ஆனால், மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட எங்களை ஷூட்டிங் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், கல்லூரிப் படிப்பு தந்த தைரியத்தில் நானும் என் தங்கையும் ஜெயலலிதா ஹீரோயினாக நடித்துக்கொண்டு இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் ரகசியமாகச் சென்றுவிட்டோம். கறுப்பு சம்கீ புடவையில் ஆப்பிள் நிறத்தில் தகதகவென்று ஜொலித்துக்கொண்டு இருந்தார் ஜெயலலிதா. அந்த இடத்தில் எங்களைப் பார்த்த அப்பா, சித்தப்பாவின் ஆச்சர்யம் ப்ளஸ் கோபம் கலந்த பார்வைகளைத் தவிர்த்துவிட்டு, 'காலேஜ் ஸ்டூடன்ட்ஸ்' என்று சொல்லி ஜெயலலிதாவுடன் அரட்டையடிக்கத் துவங்கிவிட்டோம்.

ஆனால், எங்களை அறிந்த சில அசிஸ்டென்ட் டைரக்டர்கள் விழுந்து விழுந்து எங்களைக் கவனிப்பதைக் கவனித்துவிட்டார் ஜெயலலிதா. வேறுவழி இல்லாமல் எங்களை அவரிடம் 'தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகள்' என்று அறிமுகப்படுத்தினார்கள் அப்பாவும் சித்தப்பாவும்.

உடனே, முன்னைக்காட்டிலும் தைரியமாக அடுத்த அரட்டை செஷனைத் துவக்கினோம். கிளம்பும்போது ஜெயலலிதா அவர்கள் செல்லமாக எங்கள் கன்னம் திருகி, 'ஸ்வீட் கேர்ள்ஸ்!' என்று கூற... ஜென்ம சாபல்யம் அடைந்த திருப்தி எங்களுக்கு. அப்பாவும்சித்தப்பா வும் சிரித்தபடி எங்களை காரில் திருப்பி அனுப்பினார்கள்.

(பின் குறிப்பு: அப்பா - வி.ராமஸ்வாமி, சித்தப்பா - முக்தா சீனிவாசன், சினிமா - சூரியகாந்தி).''

-டி.வித்யா, சென்னை-14.


வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

''1975-ம் ஆண்டு, முதுமலைக் காட்டில் சாண்டோ சின்னப்பா தேவரின் 'மா' ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பு. தேவர் அவர்களின் அனுமதியுடன் நடிகர் தர்மேந்திராவைச் சந்தித்தோம். சந்தோஷமாக எங்க ளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நான்கைந்து வில்லன் நடிகர்களை நிற்கவைத்து அவர்களுக்குப் பின்னால் 50 அடிகள் தள்ளி மூன்று யானைக் குட்டிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த யானைகளுக்குப் பின்னால் தாரை தப்பட்டைகளுடன் வாத்தியக்காரர்கள் நின்றனர். தேவர் 'ஸ்டார்ட்' சொன்னதும் வில்லன் நடிகர்கள் ஓட வேண்டும். தாரை தப்பட்டைகளை மிகுந்த சத்தத்துடன் ஒலிப்பார்கள். உடனே, யானைக் குட்டிகள் பயத்தில் மிரண்டு ஓடும். பார்ப்பதற்கு அந்த யானைகள் வில்லன்களைத் துரத்துவது போலவே இருக்கும். ஆனால், நடந்ததோ வேறு. தாரைதப்பட்டைச் சத்தத்தால் மிரண்ட யானைகள் வில்லன்கள் ஓடும் திசையில் ஓடாமல், பின் பக்கமாகத் திரும்பி ஓடத் தொடங்கின.படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவர்களுக்கோ ஏகச் சிரிப்பு. தேவரின் முகத்திலோ எள்ளும்கொள்ளுமான கோபம். நாங்கள் சத்தம் காட்டாமல் நழுவிவிட்டோம்!''

-வி.ராமகிருஷ்ணன், சென்னை-80.


வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

''விஜய்யுடன் படம் எடுக்க, அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். வரிசையில் காத்திருந்து விஜய்யுடன் படம் எடுத்தது ஏனோ, சரியாக வரவில்லை.

மீண்டும் ஒரு வாரம் கழித்துச் சென்றேன். என்னை ஞாபகம்வைத்திருந்த போட்டோகிராபர், என்னை விஜய் பக்கத்தில் அனுமதிக்கவில்லை. நான் விஜய்யுடன் தனியாகப் படம் எடுக்க வேண்டும் என்று கூறியதையும் அவர் கண்டுகொள்ளவில்லை. 'நீ இங்கேயே நின்றால், உதைபடுவாய்!' என்றார். கடுப்பான நான் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ஓடிப் போய் விஜய்யை இறுக்கக் கட்டிப்பிடித்துக்கொண்டேன். 'அண்ணே! நான் காலையில் இருந்து சாப்பிடாமக் காத்துட்டு இருக்கேன். உங்களுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கணும். அப்பதான் உங்களை விடுவேன். இல்லைன்னா விடவே மாட்டேன்!' என்று விஜய்யிடம் கூறினேன். சிரித்துவிட்ட விஜய் சம்மதித்தார். ஆனால், சுற்றி நிற்பவர்கள் என்னையும் விஜய்யையும் பிரித்துவிடுவார்களோ என்று பயந்து, அவரை நான் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே இருந்தேன். சினிமாவில்கூட எந்த ஹீரோயினும் அவரை அந்த அளவு இறுக்கிக் கட்டிப்பிடித்திருக்க மாட்டார்கள்!''

-எஸ்.சுரேஷ், போந்தூர்.

வி.ஐ.பி-க்களுடன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா நீங்கள்? அந்த புகைப்படத்தையும், அந்த அனுபவத்தையும் செம ஜாலியா எழுதி அனுப்புங்க. பிரசுரமானால்,பரிசு ரூ.500.

அனுப்ப வேண்டிய முகவரி:

'வாசகர்களே... வாங்க கலக்கலாம்!',
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2.
இ-மெயில்: av@vikatan.com

 
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!