ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

''சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனத்தில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது கமல் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் 'ராஜா கைய வெச்சா' பாடலின் ஷூட்டிங் அங்கு நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த ஷூட்டிங்கின் போது நான் கமல் சாரிடம் கொஞ்சம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. சில நிமிட பாடல் காட்சிக்கு கிட்டதட்ட 20 மணி நேரம் அவர் சுறுசுறுப்பாகச் சுற்றி வந்துகொண்டே இருந்தார். தான் மட்டுமல்லாமல் உடன் ஆடிய அத்தனை பேரிடமும் அந்த சுறுசுறுப்பு இருக்குமாறு பார்த்துக்கொண்டார். படப்பிடிப்பு முடியும் சமயம் என்னை அருகில் அழைத்தவர், 'மீசையைப் பெருசா வெச்சா முறுக்கிவிடணும். இப்படி கீழே வளைஞ்சு இருக்கக் கூடாது!' என்று டிப்ஸ் கொடுத்தார். ஒரு போட்டோவும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். அந்த நாள் முதல் நான் கமலின் தீவிர ரசிகனாகிவிட்டேன். ஆனால், இன்று என்னைவிட என் மகன், கமலின் தீவிர ரசிகன்!''

- நா.சுப்ரமணி, சென்னை-93


வாசகர்களே... வாங்க கலக்கலாம்!

''நான் ஒரு போட்டோகிராபர். சுமார் 12 வருடங்களுக்கு முன் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு பி.டி.உஷா வந்திருந்தார். அப்போதுதான்

நான் போட்டோகிராபி கற்றுக்கொண்டு இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு என் கையில் கேமராவைக் கொடுத்து அனுப்பிவிட்டார் என் குருநாதர். சேலை கட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்து போட்டோ எடுத்தேன்.

ஸ்டேஜ் முழுவதையும் கவர் செய்ய வேண்டுமென்று எண்ணி, ஒரு சேர் மீது நான் ஏறி போட்டோ எடுத்துவிட்டு இறங்கும்போது, புடவை தடுக்கி கீழே விழ இருந்தேன். நல்லவேளை சமாளித்துவிட்டேன். (கிராமத்தில் இருந்து வந்த புதிது என்பதால் புடவை மட்டுமே கட்டுவது என் பழக்கம்!) நிகழ்ச்சி முடிந்ததும் என்னை அருகில் அழைத்த பி.டி.உஷா ஆங்கிலத்தில், 'நீங்கள் மாடர்ன் டிரெஸ் போட்டுக் கொள்ளலாமே!' என்றார். 'ஓ.கே. மேடம். சூப்பர் மேடம். யெஸ் மேடம்!' என்று சிரித்துச் சமாளித்தேன். அப்போது என் குருநாதர் எடுத்த போட்டோதான் இது!''

- ஆர்.தனலட்சுமி, பல்லடம்.


வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
''நடிகர் சூர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நாட்டியப் பேரொளி பத்மினியைச்சந்தித்தேன். அவருடன் எல்லோரும் 'தில்லானா மோகனாம்பாள்', 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படங்கள் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருக்க, நான் ''எதிர் காலம்' படத்தில் நீங்கள் பேட்டை ரௌடியாக நடித்திருந்தது அந்தக் காலத்தில் ஆச்சர்ய விஷயம்' என்றேன். பத்மினியின் கண்களில் மினுமினுப்பு. 'ஏன் அப்படிச் சொல்றீங்க?' என்றார். 'நீங்க நல்ல டான்ஸர். அதனால அந்த ரெண்டு படங்கள்லேயும் நாட்டிய மங்கையாக நடித்தப்ப எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனா, ரௌடி கேரக்டர் என்பது உங்கள் சுபாவத்துக்கும், தோற்றத்துக்கும் அவ்வளவாப் பொருந்தாது.

ஆனா, அதையும் சவாலாக எடுத்துக்கிட்டு நீங்கள் நடிச்சுப் பாராட்டு பெற்றீர்கள். அது சாதனைதானே!' என்று நான் சொல்ல, அவர் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் என்னைத் தன் அருகில் அமர்த்திக்கொண்டு இன்னும் நிறைய பேச ஆரம்பித்துவிட்டார். ''கங்கா ஜமுனா' படத்தில் வைஜெயந்தி மாலா திலீப்குமாருடன் நடித்தார்கள். தமிழில் நீங்கள் நடித்தீர்கள். தொடர்ந்து கிஷோர்குமார், அசோக்குமார், மனோஜ்குமார், ராஜ்குமார் எல்லாரோடும் நடித்தீர்கள். ஆனால், திலீப்குமாரோடு மட்டும் நடிக்கவே இல்லையே நீங்கள். ஏன்?' என்று நான் கேட்க, 'ஆமாம். எனக்கும் அது ஒரு குறையாகவே இருந்தது. இந்தக் கேள்வியை நிருபர்கள்கூட கேட்டதில்லை!' என்று வாஞ்சையுடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். பரபரப்பாக சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்து விட்டு கால ஓட்டத்தில் ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த ஒரு நடிகையின் தனிமைத் துயரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்தச் சந்திப்பின் நினைவுகளுடன் இருந்த என்னை... அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பத்மினி மறைந்துவிட்ட செய்தி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!''

- லா.ரா.சப்தரிஷி, ஓசூர்.

வி.ஐ.பி-க்களுடன் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா நீங்கள்? அந்த புகைப்படத்தையும், அந்த அனுபவத்தையும் செம ஜாலியா எழுதி அனுப்புங்க. பிரசுரமானால், பரிசு ரூ.500.

அனுப்ப வேண்டிய முகவரி:
'வாசகர்களே... வாங்க கலக்கலாம்!',
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.
இ-மெயில்: av@vikatan.com

 
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!
வாசகர்களே... வாங்க கலக்கலாம்!