ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!

தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!

தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!
பாரதி தம்பி, சண்.சரவணக்குமார், படங்கள்: என்.மணிகண்டன்
தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!
தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!
தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!
தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!
தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!

ரியலூர்... தமிழ்நாட்டின் ஜுராஸிக் பார்க்!

செந்துறைப் பகுதி காவிரி ஆற்றுப்படுகையில் கொத்துக் கொத்தாகக் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் டைனோசர் முட்டைகள், உலக உயிரின ஆராய்ச்சியாளர்களின் கவனம் ஈர்த்திருக்கின்றன. இன்னொரு பக்கம், தங்கள் ஊருக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பெருமையை அறியாமல் டைனோசர் முட்டைகளை வீட்டுக்கு லவட்டிக்கொண்டு போகத் துவங்கியுள்ளனர் மக்கள்.

ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமான முட்டைகள் கிடைத்திருப்பது உலகிலேயே இதுவே முதல்முறை. இந்த முட்டைகள் அனைத்தும் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் விரிவுரையாளர் ராம்குமார் தலைமையிலான ஆய்வுக் குழுவினர்தான் இதைக் கண்டுபிடித்தவர்கள்.

''அரியலூர் ஒரு காலத்தில் கடல் பிரதேசமாக இருந்திருக்கிறது. கடலோரத்தை ஒட்டியிருந்த காடுகளில் கார்னோசர், சௌரபோட் என்ற இரண்டு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. இதில் சௌரபோட் என்பது இலைகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் சைவ வகை. 5 ஆப்பிரிக்க யானைகளை வரிசையாக நிறுத்தினால், எவ்வளவு நீளமும் உயரமும் இருக்குமோ அந்த அளவுக்கு இவை பெரியவை. இந்த வகை டைனோசருக்கு முட்டை போட்டு அடைகாக்கும் பழக்கம் இல்லை. பூமியின் சூட்டில் தானாகவே இனப்பெருக்கம் நடக்கும். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைச் சீற்றமோ, இயற்கைப் பேரழிவோ நடந்து

தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!

இந்த முட்டைகள் அப்படியே பூமிக்கு அடியில் போய்விட்டன. இனப்பெருக்கமும் நடக்கவில்லை. இப்போது பல கோடி ஆண்டு களின் எச்சங்கள் முட்டையின் மீது பதிந்திருக்கின் றன. இந்த முட்டைகளை வைத்து புதிய டைனோசரை உருவாக்குவது சாத்தியம் இல்லாத ஒன்று.

அரியலூர் ஏரியா, டைனோசர்கள் இனப்பெருக்கம் செய்யத் தோதான பகுதியாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் குவியல் குவியலாகப் பல அடுக்குகளில் முட்டைகள் கிடைக்கின்றன. டைனோசர் முட்டைகள் மட்டுமில்லாமல், அடையாளம் காண முடியாத வேறு உயிர்களின் எச்சங்களும் கிடைத்திருக் கின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உலகம் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு இது. அதனால் பிரதேச முக்கியத்துவம் கருதி அரசு இந்தப் பகுதியில் ஆராய்ச்சியாளர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தந்து அருங்க£ட்சியகம், ஆராய்ச்சியகம் எல்லாம் அமைக்க வேண்டும்'' என்கிறார்கள் ஆய்வுக் குழுவினர்.

தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!

இதற்கு முன்பும் பல முறை அரியலூர் சுற்று வட்டாரப் பகுதியில் பூமிக்குக் கீழே இன்னதென அறிய முடியாத பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. மர்மமும் ரகசியமும் நிறைந்த இந்த ஏரியா, புவியியல்ரீதியாக சுற்றுப்புற மாவட்டங்களைவிட வேறுபட்டது. ஆசியாவிலேயே அதிக சுண்ணாம்புப் பாறைகள் கிடைப்பது அரியலூரில்தான். அதனால்தான் இங்கு சிமென்ட் ஆலைகள் அதிகம். இப்பகுதி ஒரு காலத்தில் கடல் பிரதேசமாக இருந்தது என்பதற்கு இவற்றை ஆதாரமாகச் சொல்கிறார்கள்.

இதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பாடு. இன்னொரு பக்கம் உள்ளூர் மக்களுக்கு இந்த டைனோசர் முட்டை விவகாரம்தான் இப்போது சகலமும். ''ஊர்ல உள்ள சொந்தக்காரன்லாம் போன் போட்டு 'மாமா, எனக்கு முட்டை எடுத்து வை'ன்னு சொல்றான். ஏதோ அதைவெச்சு ஆம்லெட் போட்டுச் சாப்பிடுறது மாதிரி ஆளாளுக்கு நாலு, அஞ்சுன்னு பொறுக்கியாந்து வீட்டுக்குள்ளவெச்சுக்குறான். திடீர்னு இந்த முட்டைக்கு மவுசு வந்து, வெள்ளைக்காரங்க யாராச்சும் வந்து 'ஒரு முட்டைக்கு ஒரு கோடி தர்றேன்'ன்னு சொல்லுவாங்களோன்னு ஒரு நப்பாசைதான்'' என்கிறார் செந்துறையில் நாம் சந்தித்த தமிழ்ச்செல்வன் என்பவர். இதற்கு இடையில் 'இந்த முட்டையை எடுத்து வீட்டில் வைத்தால் வீடு விருத்தியாகும்' என்று எவனோ ஒரு 'புத்திசாலி' கிளப்பிவிட்ட வதந்தியால் முட்டை வேட்டை நடத்தத் தொடங்கிவிட்டனர் மக்கள். விழித்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், இப்போது அந்த இடங்களுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!

''எங்க வீட்டுச் சின்னது ஓடைப் பக்கம் போய் ஒரு முட்டையை எடுத்தாந்து 'இதுதான் ஜுராஸிக் பார்க் முட்டை'ன்னு சாமிப் படத்துக்குப் பக்கத்துல வெச்சிருக்குது. வீட்டுல இருக்குற நேரமெல்லாம் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக் குறான். திடீர்னு அது குஞ்சு பொறிச்சு மிருகம் வெளியே வந்துரும்னு நம்பிட்டு இருக்கான்'' என கல்லங்குறிச்சியில் நாம் சந்தித்த நீலாவதி சொன்னார்.

இத்தனை நாட்களாக ஊர் மக்கள் அவசரத்துக்கு ஒதுங்கிய ஓடைக்கரைகள் இன்று ஆராய்ச்சியாளர்களின் ஸ்பாட்களாக மாறிப் போயிருக்கின்றன. கிடைத்திருக்கும் டைனோசர் முட்டைகளும், இன்னபிற பொருட்களும் காலத்தின் கைப்பிடித்து, நம்மைக் கோடிக்கணக்கான ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துப்போகின்றன. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி டைனோசர் என்று சொல்லலாமா?

 
தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!
தமிழ்நாட்டில் ஒரு ஜூராசிக் பார்க்!