விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!

கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!

கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!
ஜே.வி.நாதன், படங்கள்: கே.கார்த்திகேயன்
கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!
கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!
கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!
கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!
கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!
கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!

முதுமலைக்கு நான் சென்றிருந்த சமயம், மழைத் தூறலின் சிலு சிலுப்பும் குளிரும் உள்ளே உள்ளே ஊடுருவி ஊசியைச் சொருகியது. 'கேமரா லென்ஸைப் பனி மூடிக்குது... கஷ்டம்தான்!'' என்று முணுமுணுத் தார் போட்டோ கார்த்தி. குளிரையும் பொருட்படுத்தாது நாங்கள் கிளம்பி வந்ததற்குக் காரணம், ரதி!

முதுமலையில் ரதிக்கு செல்லப் பெயர் 'அத்தை'!

யானையோ, பூனையோ ரதியைப் பார்த்தால், பார்த்த இடத்திலேயே அட்டென்ஷன்தான். ஆனால், எத்தனைக்கு எத்தனை மிரட்டல் மோகி னியோ, அவ்வளவு பாசக்காரி. தனது 10 குழந்தைகளுடன், ரதி பாசமாக, பாராட்டிச் சீராட்டி வளர்த்த குழந்தைகள் 25-க்கும் மேல். இப்போதும் 75 வயது ரதிதான், அந்த யானைகள் முகாமின் சூப்பர் ஸ்டார்!

ஒரு தாய் யானை குட்டி போட்டால், அதற்குத் துணையாக இன்னொரு பெண் யானையை அதனுடன் சேர்த்துவைப்பார்கள். இரண்டு யானை களுமாக அந்தக் குட்டியை வளர்க்கும். துணை சேரும் யானைக்கு 'அத்தை யானை' என்று பெயர். எவரையும் குட்டியின் அருகில் நெருங்கவிடாமல், தாயைவிட அக்கறையோடு பாதுகாக்கும்.

கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!

''பொதுவா, யானைக் குட்டிக்கு ரெண்டு வயசு ஆயிடுச்சுன்னா, தாய்கிட்ட இருந்து பிரிச்சுத் தனியா வளர்ப்போம். அப்பதான் அது சுதந்திரமா யானைக்கான குணநலன்களோடு வளரும். இல் லைன்னா, அம்மாகிட்ட பால் குடிச்சுக்கிட்டே விளையாட்டுத்தனமாவே இருக்கும். ஆனா, தாய் கிட்ட இருந்து குட்டியைப் பிரிக்கிறது சாதாரண வேலை இல்லை. தாயைக் கட்டிப்போட்டு, குட்டியைச் சங்கிலி, கயிறு கட்டித்தான் பிரிக்க முடியும். அப்படிப் பிரிக்கிறப்ப அந்த யானைகளின் வேதனையைப் பார்க்க, ரொம்பக் கஷ்டமா இருக் கும். ஒரு தடவை, 'நாளைக்குச் சங்கிலி போட்டு குட்டியைப் பிரிச்சுடலாம்'னு நாங்க பேசிட்டு இருந்ததை அனுபவத்தில் புரிஞ்சுக்கிட்ட ரதி, தன் குட்டியை இழுத்துக்கிட்டு காட்டுக்குள்ள ஓடிருச்சு. மூணு நாட்கள் தேடித் திரிஞ்சுதான் ரதியையும் குட்டியையும் கண்டுபிடிச்சோம். காமாட்சின்னு ஒரு யானையோட குட்டியை ரதி இருந்தா பிரிக்க முடியாதுன்னு 10 கி.மீ. தள்ளி ரதியைக் கட்டிப் போட்டோம். அந்தக் குட்டியைப்

கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!

பிரிஞ்ச ரதி ரெண்டு நாள் சாப்பிடவே இல்லை. மூணாம் நாள் சங்கி லியை அத்து எறிஞ்சுட்டு ராத்திரியோடு ராத்திரியா முகாமுக்கு ஓடி வந்திருச்சு.

ஒரு முறை, காட்டில் தாயைப் பிரிந்த இரண்டரை வயது யானைக்குட்டி ஒண்ணு திரிஞ்சுட்டு இருந் தது. மத்த யானைகள் அதைத் தங்களோடு சேர்த்துக்கலை. மேய்ச்சலுக்காக ரதி காட் டுக்குள் போனப்ப, அந்தக் குட்டியைத் தன்னோடு முகாமுக்குக் கூட்டிட்டு வந் தது. அந்தக் குட்டியை நாங் களும் விரட்டப் பார்த்தோம். ஆனா, தன்னோட குழந்தை கணக்கா, அதைப் பக்கத்தி லேயேவெச்சு வளர்க்க ஆரம் பிச்சது. வேறு வழி இல்லாம, குட்டிக்கு 'பொம்மன்'னு பேருவெச்சு முகாம்ல சேர்த் துக்கிட்டோம். இப்ப பொம் மனுக்கு நாலு வயசு'' என முகாமின் யானைகள் மருத் துவர் கலைவாணன் ரதியைப்பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு அன்பு ததும்பி வழிகிறது.
''கௌரின்னு ஒரு யானைக்கு ரெண்டு கண்ணும் தெரியாது. மேய்ச்சலுக்குக் காட்டுக் குள் போகும்போது ரதிதான் கௌரியைத் தன்னுடன் கூட்டிட்டுப் போய் வரும்.

கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!

காட்டில் மத்த யானைங்க கௌரியுடன் சண்டை போட வந்தா, அதுங்களோடு போராடிச் சண்டை போட்டு, கௌரியைப் பத்திரமா முகாமுக்கு அழைச்சுட்டு வரும். ஆனா பாவம் கௌரி, சில மாசங்களுக்கு முன்னாடி இறந்துட்டது. ரதியோட சோகத்தைவார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

அதே போல, பாமான்னு ஒரு யானை... இப்போ வயசு 61. ஒரு முறை மேய்ச்சலுக்குப் போனபோது, பாகன் மீது சிறுத்தை பாய்ந்து தாக்க முற்பட்டது. பாகனைத் தன் கால் களுக்கு இடையில் நிறுத்திட்டு சிறுத் தையை விரட்டி அடிச்ச யானை அது.

ரதி, பாமா, காமாட்சி மூணும் ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ். பிரியவே மாட்டாங்க. மேய்ச்சல், குளியல், சாப்பிடுறதுன்னு எப்பவும் சேர்ந்து தான் இருப்பாங்க!'' என்று கலை வாணன் சுட்டிக்காட்டுகிறார். அங்கு மூன்று யானைகளும் தங்கள் முன் அடுக்கப்பட்ட கவளத்தை மாற்றி மாற்றி ஊட்டிக்கொண்டு இருந்தன. ஆஹா, இதுவல்லவா அன்பு!

 
கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!
கதை கேளு... கதை கேளு... ரதியோட கதை கேளு!