விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!

'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!

'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!
எஸ்.சரவணகுமார்
'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!
'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!
'உடும்புப் பிடி நயன்தாரா!'
'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!
பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!
'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!
'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!

'நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்!' - தான் இயக்கிய 'போக்கிரி' படத்துக்காக பிரபுதேவாவைத்த இந்த அதிரடி வசனம் செம ஹிட். 'போக்கிரி'யின் ஹிந்திப் பதிப்பான 'வான்டட்' படம் தடாலடி ஹிட். ஆனால், அதைக் காட்டிலும் பிரபுதேவா 'மோஸ்ட் வான்டட்' அவரது மனைவி ரம்லத்துக்கும், அன்புத் தோழி நயன்தாராவுக்கும்தான்!

'பொது நிகழ்ச்சிக்கு என் கணவரும் நயன்தாராவும் சேர்ந்து வந்தால் அடிப்பேன்!' என்று ரம்லத் சொன்னதாக ஒரு செய்தி. 'வந்து காட்டுகிறேன். அடித்துப் பார்க்கட்டும். நான் சும்மா இருக்க மாட்டேன். சட்டம் - ஒழுங்கைக் காவல் துறை பார்த்துக்கொள்ளும்!' என்று நயன்தாரா பதிலடி கொடுத்ததாகவும் ஒரு விஷயம் அச்சானது.

உண்மையில், பிரபுதேவா - நயன்தாரா காதல்பற்றி ஊடகங்களில் எத்தனையோ முறை செய்திகள் வந்தபோதும், கணவரிடம் நேரடியாக ரம்லத் கேட்டது இல்லை. ஆனந்த விகடனில் வெளியான ஒரு கட்டுரைக்கு, 'அப்படி எல்லாம் எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று மறுப்பு அறிக்கை கொடுப்பார். ஆனால், பிரபுதேவா வீட்டுக்கு வரும்போதெல்லாம், எதுவும் பேசாமல் கண்ணீர் மல்க நிற்பார்.

'அடுத்த பிரபுதேவா யார்?' என்ற நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு, 'பிரபுதேவாவுடன் நயன்தாரா மேடையில் தோன்றுவார்' என்று வதந்தி கிளம்ப... ரம்லத் அப்போதும் அமைதியாகத்தான் இருந்தார். மகனைக் கணவருடன் அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார். நயன்தாரா வரவில்லை!

ஆனால், 'கமல் 50' தொடர்பான விழாவுக்கு நிச்சயம் பிரபுதேவாவுடன் நயன்தாராவும் மேடைக்கு வருவார் என்ற பேச்சு கிளம்பவும், ரம்லத் பொறுமை எல்லை மீறியது என்கிறார்கள். அதுதான், 'அடிப்பேன்!' என்று வெளிப்படையாக வெடித்ததாகக் கூறுகிறார்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒருநாள் முன்பாகவே, மும்பையில் இருந்து சென்னை வந்துவிட்டார் பிரபுதேவா. லேசான உடல் சோர்வுடன் இருந்தவருக்குக் கஷாயம் வைத்துக் கொடுத்திருக்கிறார் ரம்லத். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு, சின்ன பகல் தூக்கம் போட்டார். எழுந்தவுடன் கமலுடனான ஒரு ரிகர்சலுக்குக் கிளம்பினார். மனைவியையும் மகனையும் உடன் அழைத்தாராம். ஆனால், இருவரும் வர மறுத்து விட்டார்கள்!

'நயன்தாரா பற்றி நீ கோபமாகச் சொன்னதாக பேப்பரில் வந்தது நிஜம்தானா?' என்று அவரும் கேட்கவில்லை. 'ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்குப் பறந்து வந்து 'வான்டட்' படத்தின் பிரிவியூவில் நயன்தாரா உங்களோடு ஒட்டி உறவாடினாராமே?' என்று ரம்லத்தும் விசாரிக்கவில்லை.

''இதுதான் அந்தத் தம்பதியின் பிளஸ்சும் மைனசும்! உள்ளுக்குள் ஆயிரம் குமுறல்கள் இருந்தாலும், நேருக்கு நேராக அதைப் பேசிக்கொண்டால் ரசாபாசம் ஆகிவிடும் என்று இருவருமே தள்ளிப்போடுகிறார்கள். எப்போது எப்படி வெடிக்குமோ?'' என்கிறார் அந்தக் குடும்பத்துக்கு நெருக்கமான நலம் விரும்பி ஒருவர்.

'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!

நயன்தாராவுடன் நட்பு இறுகிய சமயத்தில்தான் சல்மான்கானுடன் 'வான்டட்' படம் இயக்கும் வாய்ப்பு வந்தது பிரபுதேவாவுக்கு. அதற்காக வெகுநாட்கள் மும்பையில் இருக்கும் காலத்தில், மனைவியும் இரண்டு பையன்களும் (அப்போது பிரபுதேவாவின் மறைந்த மூத்த மகன் நலமுடன் இருந்தார்) தனியாக இருக்க வேண்டாமே என்று நினைத்தார் பிரபுதேவா. அண்ணாநகரில் சொந்த வீட்டில் இருந்த குடும்பத்தை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குஷ்புவுக்குச் சொந்தமான ஃபிளாட்டில் வாடகைக்குக் குடியேற்றினார். குழந்தைகளையும் அருகில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே சேர்த்தார். உறவினர்கள் அடிக்கடி வந்து மனைவியைக் குசலம் விசாரித்துவிட்டுப் போகவும் ஏற்பாடு செய்தார். அந்த அளவுக்குக் குடும்பத்தின் மீதும் மனைவி மீதும் அவருக்குப் பாசம் இருக்கவே செய்கிறது. ஆனாலும், நயன்தாராவின் நட்பு ஏன் அவரைப் போட்டு இப்படி இழுக்கிறது?

இதுபற்றி ஒரு தரப்பில் சொல்லப்படும் தகவல் விநோதமாக இருக்கிறது. ''நயன்தாராவுக்கு ஒருத்தரைப் பிடிச்சுட்டா, அப்புறம் அந்த நபர் என்ன நினைத்தாலும் விலகிப் போக முடியாது. நயன்தாராவாகப் பார்த்து தன் நட்புப் பிடியை விலக்கினால்தான் உண்டு. முன்பு சிம்புவுக்கும் நயனுக்குமான நட்புப் பஞ்சாயத்துகள் ஞாபகம் இருக்கின்றவா? அப்போதெல்லாம் தான் நினைத்தால், சிம்பு எங்கே இருந்தாலும் அவரைத் தேடிப் பிடித்து தன் எதிரில் வந்து நிற்கும்படி செய்துவிடுவார் நயன். பேனாவில் தொடங்கி சட்டை வரை பரிசுகளை அனுப்பிக் குவித்துக்கொண்டே இருப்பார். சூட்டிங் தவிர்த்து வேறெங்காவது சிம்பு வெளியூர் செல்ல வேண்டி வந்தால்கூட, பளிச்சென்று ஃபிளைட் டிக்கெட்டைத் தன் செலவில் போட்டு அனுப்பி வைத்து அசத்துவார். சிம்பு போய் இறங்குகிற இடத்தில் பிக்-அப் கார் தயாராக வந்து நிற்கும். இதில் சிம்பு அசந்து நிற்கும்போது நயனிடமிருந்து போன் வரும். 'என்ன... எல்லாம் சௌகரியமா இருக்கா?' என்று கேட்டுக் கலகலவென்று சிரிப்பார்.

'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!

கிட்டத்தட்ட பிரபுதேவா விஷயத்திலும் இதுதான் நடந்தது. 'வில்லு' படத்தின் முதல் ஷெட்யூல் சுவிட்சர்லாந்தில் நடந்தது. ரம்லத் மற்றும் குழந்தைகள் சகிதம் சுவிட்சர்லாந்து ஏர்போர்ட்டில் பிரபுதேவா போய் இறங்கியபோது, அங்கே தயாராகக் காத்திருந்தார் நயன்தாரா. ஒரு டைரக்டருக்கு அளிக்க வேண்டிய மரியாதையாகவே, அந்தக் குடும்பத்தோடு தானும் சேர்ந்துகொண்டார். ஓடும் காரில் யாருடனோ அவர் போனில் பேச ஆரம்பித்தார். எதிர்முனைக்காரரைப் பேசவே விடாமல், 'காதல்னா என்னன்னு உனக்குத் தெரியுமா? நட்புக்கு நீ கொடுக்கிற மரியாதை இவ்ளோதானா?' என்றெல்லாம் வெகுநேரம் வரை தத்துவமும், கண்ணீருமாக அவர் பேசிக்கொண்டே

'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!

வந்ததை... பிரபுதேவா - ரம்லத் இருவருமே ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு வந்தார்கள். அந்த ஒரு பயணத்திலேயே, 'தான் அன்புக்காக ஏங்குவதாக' பிரபுதேவாவுக்கு பளிச் சேதி சொல்லும் தொனி தென்பட்டதாம் நயன்தாராவிடம்!

இடையில், பிரபுதேவாவின் மூத்த மகன் உடல் நலக் குறைவால் இறந்ததும், மளமளவென்று காட்சிகள் மாறிப் போயின. சரியாகச் சொல்வதானால், 'திங்க் ஆஃப் தி ஏஞ்சல்... தேர் ஷி இஸ்' என்ற கதையாக... பிரபுதேவா நினைக்கும் நேரத்தில் அவர் எதிரில் பளிச்சென்று தோன்ற ஆரம்பித்தார்!'' என்று விவரிக்கிறார்கள்.

ஆனால், இப்போது கேட்டாலும் நயன்தாரா சொல்வது, ''நானாக யாரையும் இழுத்துப் பிடித்து இடுப்பில் முடிந்துவைத்துக்கொள்ளவில்லை. யார் குடும்பத்து அமைதியையும் குலைக்க விரும்பவில்லை. என்னோடு பேசப் பழக இஷ்டம் இல்லாவிட்டால், தாராளமாக அவராக விலகி இருக்கட்டுமே!'' என்பதுதானாம்.

''ஆனால், அவருடைய அன்பான உடும்புப் பிடியில் இருந்து இவரை மீட்பது அத்தனை சுலபமாக இல்லையே!'' என்று பிரபுதேவாவின் குடும்பத்தினர் உள்ளூரக் கதறுகிறார்கள் என்பதாகவே செய்திகள் கிடைக்கின்றன.

நயன்தாராவின் மனோவியல் சிந்தனைகளை ஊன்றிக் கவனித்தவர்கள் சொல்வது, ''இந்த விவகாரத்தில் பிரபுதேவா குடும்பம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியது இல்லை!'' என்பதுதான். 'பிரபுதேவா பெயரை பச்சைக் குத்திக்கொண்டார் என்பது வரையில் நயன் போகிற போக்கு படு டீப்பாகத் தெரிந்தாலும்... அவர் திடீரென்று தன் நட்பின் போக்கைத் திசை

'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!

மாற்றிக்கொண்டுவிடுவார். அதன்பின், நடந்ததை எல்லாம் திரும்பிப் பார்க்கக்கூட விரும்ப மாட்டார்!'' என்பதுதான்.

ரம்லத்?

''ஏதேனும் ஒரு கோயிலுக்குப் போய் மணிக்கணக்கில் அமர்ந்துகொள்கிறார். பக்தி, கோயில், குழந்தைகள் என்பதெல்லாம்விட, தன் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்திக்கொள்வதற்காக அவர் வேறு ஒரு திட்டத்தையும் வைத்திருக்கிறார். பிரபுதேவாவின் குரூப்பில் இருந்தபோது 'சூப்பர் டான்ஸர்' என்று தான் வாங்கிய அதே பெயரை, மறுபடி உலகத்தின் முன் பதிவு செய்ய விரும்புகிறார். புதிய நடனப் பள்ளி ஒன்றைத் துவங்கி, திறமையானவர்களை ஊக்குவிக்க நினைக்கிறார். ஒருகட்டத்தில் சினிமாவுக்கு கொரியோகிராஃப் செய்யும் டான்ஸ் மாஸ்டராக அவர் வந்து சேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை!'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இந்த ஒற்றைக் குடும்பம் என்ற அழகான கூடு கலைந்துவிடாமல் காப்பாற்ற எத்தனையோ நல்லவர்கள் நாலா பக்கமும் பாடுபடுகிறார்கள். இந்தப் பட்டியலில் - மகளிர் உரிமை அமைப்புகளும் சந்தடி இல்லாமல் தங்கள் பங்கை ஆற்றத் தொடங்கி இருப்பதுதான் லேட்டஸ்ட்!

பிரபுதேவா அம்மா என்ன சொல்கிறார்?

ம்லத்-நயன்தாரா விவகாரம் குறித்து பிரபுதேவாவின் தாயார் மகாதேவம்மாவிடம் பேசினோம். ''பெரியவன் ராஜு அமெரிக்காவுல இருக்கான். சின்னவன் நாகேந்திரா பிரசாத் மும்பையில இருக்கான். பிரபுவும் பிஸி. சென்னையில நான் மட்டும் தனியா இருந்துகிட்டு என்ன பண்றது. அதான் மைசூருக்கு வந்துட்டேன். அதனால, சென்னையில என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியலை. நயன்தாரா பத்தி ரம்லத்து ஏதோ பேப்பர்ல பேசியிருக்குன்னு சொன்னாங்க. ஆனா, அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது. ரம்லத், நயன்தாரா ரெண்டு பேரைப்பத்தியும் எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, என் புள்ளை பிரபுவைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்.

'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!

திறமைசாலி. தமிழ், தெலுங்குன்னு புடிச்சுப் போயி இப்போ ஹிந்தி வரைக்கும் டைரக்டர் ஆயிட்டான். அவனோட வளர்ச்சிக்கு திருஷ்டி மாதிரி இது அமைஞ்சிருச்சு. டான்ஸ் மாஸ்டரா இருந்த காலத்துல பாட்டுக்கு மட்டும் நடனம் சொல்லிக் கொடுக்குற வேலைதான். ஆனா, டைரக்டர் ஆன பிறகு சினிமாவுல நடிக்கிற ஆம்பளை பொம்பளைகூட நெருக்கமாவும் பழக வேண்டியிருக்கு. மத்தபடி எந்தத் தப்பான பாதைக்கும் போகாத புள்ளை அவன்!'' என்கிறார் அப்பாவியாக!

- எம்.குணா

 
'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!
'உடும்புப் பிடி நயன்தாரா!' -பிரபுதேவா குடும்பத்தின் க்ளைமாக்ஸ் கதறல்!