ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

டேஞ்சர் டெரரிஸ்ட் டென்

டேஞ்சர் டெரரிஸ்ட் டென்


ஸ்பெஷல் 1
டேஞ்சர் டெரரிஸ்ட் டென்
டேஞ்சர் டெரரிஸ்ட் டென்
 
டேஞ்சர் டெரரிஸ்ட் டென்
டேஞ்சர் டெரரிஸ்ட் டென்
டேஞ்சர் டெரரிஸ்ட் டென்

கெஸட்க்கு போகாமல் புது பெயர், புதுத் திட்டங்களோடு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதுதான் தீவிரவாதிகளின் ஸ்டைல். 257 பேரை பலி வாங்கிய மும்பை வெடிகுண்டு வழக்கு முதல் காஷ்மீரில் தினமும் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் வரை சத்தமில்லாமல் எங்கேயோ இருந்துகொண்டு இயக்குகிற மாஸ்டர் மைண்ட் ஆசாமிகள் இவர்கள். இந்தப் பத்து பேர் பிடிபடாமல் பயங்கரவாத செயல்கள் நடக்காமல் தடுப்பது நடக்காத காரியம் என்கிறது மத்திய உளவுத் துறை. அவர்களின் லிஸ்ட் இது...

1. ரஹீல் அப்துல் ரகுமான் ஷேக்

2006-ல் மும்பையில் நடந்த மிகப் பெரிய ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தியவன். வங்க தேசத்துக்கான லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர். இயக்கத்துக்குத் தேவையானவர்களைத் தேர்ந்தெடுத்து பாகிஸ்தானுக்கு அனுப்பிவைப்பான். மும்பையில் மறைந்திருந்தபோது, டெல்லி தீவிரவாத ஒழிப்பு போலீஸார், அந்த இடத்தை முற்றுகையிட, முதல் மாடியில் இருந்து குதித்துத் தப்பி ஓடிவிட்டான். இதுவரை இவனது புகைப்படம்கூட கிடைக்கவில்லை!

டேஞ்சர் டெரரிஸ்ட் டென்

2. மவுலானா மசூத் அசார்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தந்தை. 1994-ல் கைது செய்யப்பட்டான். 1999-ல் இந்திய விமானம் காந்தகாருக்குக் கடத்தப்பட்டபோது, தீவிர வாதிகள் நிபந்தனை காரணமாக விடுதலை செய்யப்பட்டவன். 2001-ல் நடந்த காஷ்மீர் சட்டமன்றத்தின் மீதான தீவிரவாதிகள் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டவன் இவன்தான். கராச்சியில் மசூத் இருப்பதாக இந்திய அரசு சொன்னபோது, 'இல்லவே இல்லை' என்றது பாகிஸ்தான். அமெரிக்காவின் வற்புறுத்தல் காரணமாக, 2002-ல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான். மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் இவனுக் கும் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது!

3. தாவூத் இப்ராஹிம்

தாவூத், தற்போது கராச்சியில் வசிப்பதாக நம்பப்படுகிறது. பாகிஸ் தானின் ஐ.எஸ்.ஐ-யுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவன். இவனைக் கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஐ. கைது செய்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், வழக்கம் போல தாவூத் பாகிஸ்தானிலேயே இல்லை என்று மறுத்தனர். தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் அறுவை சிகிச்சை மூலம் தன் முகத்தோற்றத்தை மாற்றிக்கொண்டு உலவுவதாக பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. உலக அளவில் தேடப்படும் முக்கியப் பயங்கரவாதிகளில் இவனுக்கு 4-வது இடம்!

4. டைகர் மேமன்

முஸ்டாக் அப்துல் ரசாக் மேமன் என்றால் தெரியாது. டைகர் மேமன் என்றால் பளிச்சென்று தெரியும். மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தின் மிக முக்கியக் குற்றவாளியான இவன், பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியா சென்றுவிட்டதாகவும், இப்போது துபாயில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆயுத சப்ளைக்காக கராச்சிக்கும் துபாய்க்கும் டிரிப் அடிப்பதாக இந்திய உளவுத் துறை நம்புகிறது!

5. அயூப் மேமன்

டைகர் மேமனின் சகோதரன். டைகர் மேமனின் தீவிரவாதச் செயல் களுக்கு வலது கை. இவனும் கராச்சியிலேயே வசிப்பதாகக் கூறப்படுகிறது. இளைஞர்களுக்குத் தீவிரவாதப் பயிற்சி, ஆயுதங்கள் சப்ளை எனப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவன் மேல் உள்ளன!

6. சையது சலாலுதீன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவன். 'சுதந்திரப் போராட்ட வீரன்' என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இவன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசபராபாத்தில் இருந்து தனது தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தான். இந்திய கமாண்டோக்கள் அதிரடியாகத் தாக் குதல் நடத்தக்கூடும் என்ற பயம் இருப்பதால், சையது முசபராபாத்தில் தங்காமல் பெஷா வருக்கு மாறிவிட்டான்!

டேஞ்சர் டெரரிஸ்ட் டென்

7. சோட்டா ஷகீல்

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தாவூத் இப்ராஹிமின் தளபதியாகச் செயல்பட்டவன். பாகிஸ்தானில் உள்ள இவன், 2006-ல் பிரியங்கா சோப்ராவின் மேனேஜரை மிரட்டியதாகச் செய்தி வெளியானது. பாகிஸ்தானில் இருந்தபடியே இந்தியாவைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து, ஐ.எஸ்.ஐ-க்கு வழங்கும் முக்கிய நபர். சிவசேனா தலைவர், பாலிவுட் பிரபலங்களைக் கொல்ல முயற்சி செய்ததாக, பல வழக்குகள் இவன் மீது உண்டு!

8. மிஷ்டி ஜஹூர் இப்ராஹிம்

இந்திய விமானத்தை காந்தகாருக்குக் கடத்திய தீவிரவாதிகளில் இவனும் ஒருவன். ஹர்கத் உல் அன்சார் என்ற அமைப்பைச் சேர்ந்த இவன், தற்போது வசிப்பது கராச்சியில் உள்ள டிஃபென்ஸ் காலனியில்!

9. அத்தர் இப்ராஹிம்

காந்தகார் விமானக் கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒருவன். விடுதலை செய்யப்பட்ட மசூத் அசாரின் சகோதரன். காந்தகாரில் வசித்துவந்த இவன், அங்கு தலிபான் ஆட்சி அகன்றதும் பாகிஸ்தானில் குடியேறியதாக உளவுத் துறையினர் கூறுகின்றனர். இவன் மீது இன்டர்போலின் ரெட் கார்னர் அலர்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது!

10. ஆசிப் முகமது சையீத்

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் பிதாமகன். பாகிஸ்தானில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவது ஆசிப்பின் இன்னொரு முகம். ஜம்மு காஷ்மீரில் நேரடித் தாக்குதல்களில் தொடர்புடையவன். லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்களை மேற்பார்வை செய்து வருகிறான்!

இதுதவிர, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொட்புடைய சலிம் ஹாஜி இப்ராஹிம், ஜிகாதியை பரப்புவதில் நம்பர் ஒன்னாக விளங்கும் லஷ்கர்-இ-தொய்பா ராணுவ கமாண்டர் அசிம் ச்சீமா, பஞ்சாப்பைப் பிரித்து 'தனி காலிஸ்தான்' வேண்டும் என்று போராடிய தீவிரவாதிகள் வாத்வான் சிங் பப்பர், ரஞ்சித் சிங் நீட்டா, சீக்கிய இளைஞர் கூட்டமைப்பைத் தொடங்கிய லாக்பீர் சிங் ரோட் ஆகியோரும் பாகிஸ்தானில் பத்திரமாக வசிக்கின்றனர். இவர்களுக்கு வேண்டியதை அளித்து பத்திரமாகப் பார்த்து பராமரிக்கிறது ஐ.எஸ்.ஐ. காலிஸ்தான் தீவிரவாதிகள் மீது கடத்தல், கொலை, ஆயுதங்களைவைத்து கலவரத்தை தூண்டியது உள்பட பல வழக்குகள் உள்ளன!

டேஞ்சர் டெரரிஸ்ட் டென்
டேஞ்சர் டெரரிஸ்ட் டென்

ந்தியாவில் மொத்தம் 34 தீவிரவாத அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்...

1. அஸ்ஸாம் விடுதலை ஐக்கிய முன்னணி
2. போடோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி
3. மக்கள் விடுதலை ராணுவம்
4. ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி
5. புரட்சிகர மக்கள் கட்சி (காங்களேபாக்)
6. காங்களேபாக் பொதுவுடைமைக் கட்சி
7. காங்களே யால் கான்பா லுப்
8. மணிப்பூர் மக்கள் விடுதலை முன்னணி
9. புரட்சிகர மக்கள் முன்னணி (மணிப்பூர்)
10. திரிபுரா புலிகள் இயக்கம்
11. திரிபுரா தேசிய விடுதலை முன்னணி
12. தேசிய விடுதலை கவுன்சில்
13. ஆக்சிக் தேசிய தன்னார்வலர் கவுன்சில்
14. பாபர் கால்சா இன்டர்நேஷனல்
15. காலிஸ்தான் போர்ப் படை
16. சர்வதேச சீக்கியர் இளைஞர் சங்கம்
17. லஷ்கர்-இ-தொய்பா
18. ஜெய்ஷ்-இ-முகமது
19. ஹர்கத்-உல்-முஜாஹிதீன்
20. ஹிஸ்ப்-உல்-முஜாஹிதீன்
21. அல்-உமர்-முஜாஹிதீன்
22. ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி
23. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்
24. இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி)
25. தீன்தர் அஞ்சுமன்
26. மக்கள் யுத்தக் குழு
27. மாவோயிஸ்ட் பொதுவுடைமை மையம்
28. அல் பாட்ர்
29. ஜாமியத்-உல்-முஜாஹிதீன்
30. அல்-கொய்தா
31. துக்த்ரான்-இ-மில்லட்
32. தமிழ்நாடு விடுதலைப் படை
33. தமிழ் தேசிய மீட்புப் படை
34. அகில பாரத நேபாள ஒருங்கிணைந்த சமாஜம்.

 
டேஞ்சர் டெரரிஸ்ட் டென்
டேஞ்சர் டெரரிஸ்ட் டென்