ஸ்பெஷல் -1
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'

'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'


ஸ்பெஷல் 1
'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'
'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'
 
'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'
'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'
'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'
'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'

டற் கொள்ளையர்கள்!

எம்.ஜி.ஆர். படங்களிலும் சமீபத்திய 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்' வகை ஹாலிவுட் படங்களிலும்தான் அவர்கள் நமக்குப் பரிச்சயம். பகல் கொள்ளைக்காரர்கள்தான் நம்மவர்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர்கள். ஆனால், ஒரு தேசமே கிட்டத்தட்ட தேசியத் தொழிலாகவே கடற் கொள்ளையை மேற்கொள்வது சோமாலியாவில்தான்!

தென்ஆப்பிரிக்காவின் குட்டி நாடான சோமாலியா பஞ்சத்துக்குப் பிரபலமான நாடு. உழைத்துச் சம்பாதிப்பதற்கு உருப்படியாக எந்தத் தொழிலும் கிடையாது. பைசா பைசாவாகச் சேர்த்தாலும் பட்டப் பகலிலேயே நடுவீதியில் கத்தியைக் காட்டி, மிரட்டிப் பிடுங்கிச் செல்வது சகஜம். இதனால் அங்கு வரும் வெளிநாட்டினர் கொண்டுவரும் பொருள்களை நம்பித்தான் மொத்த தேசத்துக்கும் பிழைப்பே. இது போக, மீன்பிடித் தொழில் மூலம் கொஞ்சம் வருமானம் வரும்.

'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'

அயல்நாட்டுக் கப்பல்கள் தங்கள் நாட்டுக் கடல் எல்லைக்குள் பயணிப்பதால், தங்கள் தொழில் பாதிக் கப்படுவதாக முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். எந்த ரியாக்ஷனும் இல்லை. பொறுத்து வெறுத்துப்போனவர்கள், ஒரு கட்டத்தில் 'சும்மாச்சுக்கும்' தங்கள் கடல் எல்லையில் பயணித்த கப்பலைப் பிடித்துவைத்துக் கொண்டனர். 'ஐயா சாமி, கப்பலை விட்டுடுங்கப்பா. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தந்துடுறோம்!' என்று கப்பல் கம்பெனிகள் கொடுத்த தொகை, அவர்களுக்கு ருசி காட்டிவிட்டது. நாளடைவில் மீனுக்குப் பதிலாக கப்பலைப் பிடிப்பதையே தொழிலாக்கிக்கொண்டனர். கப்பல் கடத்தலில் கொள்ளை லாபம் கொழிக்கவும், ஊருக்குள் உதார் காட்டிவந்தவர்களும் கடலில் குதித்துவிட்டனர். இந்நாள் சோமாலியக் கடற்கொள்ளையர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் மீனவர்களே!

பொதுவாக, கப்பலைக் கடத்தி அதன் ஊழியர் களைச் சிறைபிடித்தாலும் அவர்களைத் துன்புறுத்து வதில்லை. நல்ல உணவு, சிகரெட், மதுபானங்கள் எல்லாம் கொடுத்து போஷாக்காகவே கண்காணிப் பார்களாம்.

கொள்ளையர்களின் வேட்டைக் களம் சூயஸ் கால்வாய் பகுதியில் அடங்கும் ஆதாம் கால்வாய். வழக்கத்தைவிட குறுகலாக அமைந்திருக்கும் இந்தக் கால்வாய்தான் மறைமுகத் தாக்குதல்களுக்குத் தோதானது. சோமாலியாவின் ஏல் துறைமுகம்தான் இவர்களின் பிசினஸ் ஜாயின்ட். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நடப்பது போல் எந்நேரமும் பரபரவென பிஸியாக இருக்கும். பிணைக் கைதிகளையும் கப்பல்களையும் விடுவிப்பதற்கான பேரப் பேச்சுவார்த்தை இங்குதான் நடக்கும்.

'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'

வழுக்கி வந்து நிற்கும் காஸ்ட்லி கார்களிலிருந்து இரண்டு டிப்டாப் ஆசாமிகள் லேப்டாப் சகிதம் இறங்குவார்கள். ஒருவன், கடற்கொள்ளையர்களின் அக்கவுண்டன்ட். மற்றொருவன், கப்பலின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பல்மொழி வித்தகன். கடந்த ஓராண்டில் மட்டும் இவர்கள் பிணைத்தொகையாக வசூலித்தது கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய்.

சாட்டிலைட் போன், மிக நவீன செல்போன்கள், லேட்டஸ்ட் லேப்-டாப், துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர், 'ஊ...லலல்லா' உல்லாச அழகிகள் என சுகவாசிகளாகத்தான் இவர்களின் ஒவ்வொரு நொடிகளும் கழிகின்றன. கொள்ளையர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதினர். உள்ளூர் மீனவர்கள்தான் மூளை. முன்னாள் தீவிரவாதிகள்தான் கடல் கொள்ளையின் முதுகெலும்பு. இவர்கள்தான் கப்பலைக் கடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். மூன்றாவது பிரிவினர், கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். இவர்கள் கப்பல் இருக்குமிடத்தைக் காட்டும் ஜி.பி.எஸ். சிஸ்டம் பற்றி அறிந்தவர்கள். கப்பலைக் கொள்ளையடிக்கச் செல்லும் முன் அவர் களுடைய பெரிய கப்பலை வெகுதொலைவிலேயே நிறுத்திவிட்டு, சிறிய படகில் வந்து கப்பலில் ஏறிவிடுவார்கள். இவர்களைத் தடுப்பதற்குக் கப்பலில் இருப்பவர்களிடம் இருக்கும் அதிகபட்ச ஆயுதமே, படுவேகத்தில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்க் குழாய்கள்தான். கப்பலுக்குள் கொள்ளையர்கள் ஏறாமல் இருக்க, குழாய் மூலம் தண்ணீரை அவர்கள் மீது பீய்ச்சி அடிப்பார்கள். தண்ணீரைத் துடைத்த படியே அவர்கள் நிதானமாக ஏறி வந்து துப்பாக்கியைக் காட்டி தங்கள் காரியத் தைச் சாதித்துக்கொள்வார்கள். வசூலாகும் தொகையை இந்த மூன்று பிரிவின ரும் சமமாகப் பங்கு பிரித்துப் பொங்கல் வைத்துக்கொள்வார்களாம்.

'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கெமிக்கல் பொருட்களை ஏற்றி வந்த ஜப்பான் நாட்டின் 'ஸ்டோல்ட் வலோர்' சரக்குக் கப்பலை, கடந்த செப்டம்பர் மாதம் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சிறைபிடித்தனர். பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுக்கொண்டு கப்பலையும் ஊழியர்களையும் விடுவித்தனர். கிட்டத்தட்ட 2 மாதம் கடல்வாசம் முடிந்து உயிருடன் ஊர் திரும்பிய உற்சாகத்தில் இருந்தவர்களைச் சந்தித்தபோது சுதந்திரத்தின் மதிப்பு நமக்கும் புரிந்தது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பனிராயன் லோபோ அந்தக் கப்பலில் மோட்டார் மேனாகப் பணிபுரிந்தவர். ''எங்க கப்பல் சூயஸ் கால்வாயில் வந்துட்டு இருந்தப்ப, சின்னப் படகுல வந்த 5 பேர், எங்க கப்பலை நிறுத்தச் சொல்லி சத்தம் போட்டாங்க. ஆனா, விரட்டுறது கொள்ளைக்காரங்கதான்னு புரிஞ்சுக் கிட்டதால, நாங்க கப்பலை நிறுத்தாம தொடர்ந்து ஓட்டிக்கிட்டே இருந்தோம். ஆனாலும், ஏணி மூலமா கப்பலுக்குள்ள ஏறி வந்தவங்க, உடனே செல்போன், சாட்டிலைட் போன்னு

'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'

எல்லா தொலைதொடர்புச் சாதனங்களையும் பறிச்சிட்டாங்க. எங்களைப் பத்தின முழு விவரங்களையும் எழுதி வாங்கினவங்க, துப்பாக்கி முனையில் கப்பலை அவங்க சொல்ற திசையில் ஓட்டச் சொன்னாங்க. கடலுக்குள்ளேயே சுத்திச் சுத்தி வந்தோம். திடீர்னு கப்பலை ஒரு தீவுல போய் நிறுத்தச் சொன்னாங்க.

கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பிணைத் தொகையாக் கேட்டாங்க. 'ரொம்பப் பெரிய தொகை. கப்பலே உங்ககிட்டதான் இருக்கு. அதோட சரக்குக்கு ஏத்த விலையைக் கேளுங்க!'ன்னு பேரம் பேசிட்டே இருந்தாங்க. இதுக்கிடையில் கப்பல்ல இருந்த சாப்பாடும் குறைஞ்சுட்டே வந்தது. 'பாவம்! பசங்க பொழைச்சுப் போகட்டும்!'னு நினைச்சோ என்னவோ, கொள்ளைக்காரங்க அவங்களே அரிசி, ஆட்டிறைச்சியை வெச்சு ஏதோ சாப்பாடு சமைச்சாங்க. பேச்சுவார்த்தை இழு பறியிலேயே இருக்கவும், 'உங்கள் மாலுமிகளைக் கொன்னுடுவோம்!'னு கப்பல் ஓனருக்குத் தகவல் அனுப்புனாங்க. நாங்க திகிலடிச்சுப் போயிட்டோம்!'' என்றார் இன்னும் பதற்றம் விலகாமல்.

மேற்கொண்டு தொடர்ந்தார் மாலுமி ஜெராஃபின். திருச்செந்தூரைச் சேர்ந்த இவர், தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஷீஜாவை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ளும் அவசரத் தில் இருக்கிறார்.

''பின்னே... சும்மாவா சார்? 'வீட்டுக்குத் திரும்பி வருவேன்'கிற நம்பிக்கையே இல்லாம இருந்தேன். இப்ப மறுபிறப்பு எடுத்தது மாதிரி மீண்டு வந்திருக்கேன்ல. டிசம்பர் 29 எங்க ளுக்குக் கல்யாணம்'' என்று உற்சாகத்தில் திளைத்தவரை, கப்பல் கதைக்குள் இழுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'

''கொள்ளையர்கள் அனுப்பின மெசேஜுக்குப் பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லை. ஆனா, திடீர்னு அமெரிக்காவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒண்ணு எங்க கப்பலைச் சுத்தி வட்டம் போட ஆரம்பிச்சுச்சு. உடனே, கொள்ளைக்காரங்க எங்களைச் சுத்தி வளைச்சு துப்பாக்கி முனையில் நிக்கவெச்சாங்க. நாங்க திகிலில் திண்டாடிப் போயிட்டோம். ஏதாவது சாகசம் செய்றேன்னு அவங்க கிளம்பியிருந்தா, நாங்க அன்னிக்கே அம்பேல். ஏன்னா, எங்க கப்பல்ல இருந்தது முழுக்க கெமிக்கல். ஹெலிகாப்டர்ல வந்தவங்க ஏதாவது எசகுபிசகா செஞ்சிருந்தா, ஒரே குண்டுல எங்க எல்லார் கதையும் க்ளோஸ். எதுவும் சாத்தியமில்லைன்னு தெரிஞ்சதும் ஹெலிகாப்டர் எங்களை விட்டு விலகிடுச்சு. தொடர்ந்த கப்பல் மாலுமிகள் சங்கத்தினரின் முயற்சி, அரசாங்கத்தின் உத்தரவு, மீடியாக்களின் வெளிச்சம் காரணமாக பிணைத் தொகையைத் தரச் சம்மதித்தார் எங்க ஓனர். கிட்டத்தட்ட 150 கோடி ரூபாயை அமெரிக்க டாலர்களா குட்டி விமானத்தில் கொண்டுவந்து கப்பல் மேல போட்டாங்க. அதன் பிறகுதான் எங்க விடுதலை சாத்தியப்பட்டது. இதன் மூலமா நான் கத்துக்கிட்ட வாழ்க்கைப் பாடம் என்னன்னா, நிச்சயம் பண்ணிட்டா உடனே கல்யாணத்தை முடிச்சிடணுங்க!'' என்று முகம் கொள்ளாப் பூரிப்புடன் விடை கொடுத்தார் ஜெராஃபின்.

சோமாலியாவில் கடல் கொள்ளை என்பது கிட்டத்தட்ட கௌரவமான ஒரு தொழிலுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது. 17 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கே வழி இல்லாததால் சுலபமாக கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பை யாரும் இழக்கத் தயாராக இல்லை என்கிறார் சோமாலியத் தொழிலதிபர் ஒருவர். 'நாங்கள் இப்போது கடன்கேட்டு நிற்பது கடல் கொள்ளையர்களின் வீட்டு வாசலில்தான். இவர்களுக்குப் பெண் தர 'நீ... நான்!' என்று போட்டி போட்டுக்கொண்டு க்யூவில் நிற்கின்றனர். 'பெண் அம்சமாக இருக்க வேண்டும்' என்பதுதான் கொள்ளையர்கள் விதிக்கும் ஒரே நிபந்தனை. அட்றா அட்றா நாக்க முக்க!

 
'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'
'கடல்மேல் பிறக்க வைத்தான்... எங்களை கப்பலைக் கடத்த வைத்தான்!'